"

12

(ஆறாவடு நாவலில்) ஆரம்பத்தில் கேலியும் கிண்டல் சார்ந்த விமர்சனங்கள் எல்லா இயங்கங்கள் மீதும் சம அளவில் இருந்தது. புலிகள் மீது தூக்கலாக இருந்தது என்றுகூட சொல்லலாம் போகப்போக அது தணிந்து புலிகள் மீது ஒரு அனுதாபப் பார்வை, விட்டுக்கொடாத தன்மை, அல்லது போற்றுதல் தனம் என்பதுபோல உணரமுடிந்தது. இதுவே ஒருவருக்கு பிடிக்காமல் போனதும் கட்டுரையாளருக்கு அவையே பிடித்துப்போன இடங்களுக்கு கா…ரணமாக அமைந்தது என நான் நினைக்கிறேன். நானும் கட்டுரையாளரின் கருத்தையே கொண்டிருந்தேன். முன்னால் உள்ள அத்தியாயங்களை தனித்தனி நல்ல சிறுகதைகளாக பார்க்க முடியும். பல நல்ல சிறுகதைகளை ஒரு நாரில் தொடுத்த கதம்பச்சரம் போல தோன்றியது. போகப்போக அவசரப்பட்டிருக்கிறார் என்றே நானும் எண்ணினேன். என்னளவில் நல்லதொரு நாவல். எழுதத்தொடங்கிய காலத்தில் தொடர்ந்து எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். நான் உசாவியதில் 2009இல் தொடங்கி பின் போட்டுவைத்து 2011 தொடர்ந்து முடித்ததாக சொன்னார். அவருக்குள் எற்பட்ட மாற்றங்களே மேலே நான் உணர்ந்த மாற்றங்களுக்கு காரணம். தொடகிய காலத்திலிருந்து தொடர்சியாக எழுதி முடித்திருந்தால் என்னும் உச்சத்தை தொட்டிருக்கும். கசகரணம் ஆறாவடு இரண்டுமே தொடற்சியான துன்பம் என்ற ஒரு பொருள் தருகின்ற சொற்கள். அண்மைக்காலத்தில் வெளிவந்த இரண்டு ஈழநாவல்லளுக்கு ஒரே பொருள் படும் தலைப்பு அமைந்ததே சிறப்புத்தான்.

License

Icon for the Public Domain license

This work (ஆறாவடு by aaraavadu) is free of known copyright restrictions.

Share This Book