"

15

சயந்தனின் ஆறாவடு படித்து முடித்தேன். பொதுவாக சயந்தனின் எழுத்துகள் எந்தவித கோட்பாட்டு கட்டமைப்பை மனதில் கொண்டும் எழுதப்படுபவை இல்லை என்று நம்புகிறேன். நிகழ்வுகள் மனிதனை விளிம்புக்கு தள்ளும்போது சிந்திப்பதும், சிந்தனையின் எல்லையாக தினப்படி வாழ்க்கை அமைவதும் என சயந்தன் செய்வது ஒரு bottom-up approach. யமுனா எத்ரிஸ் கிழவனின் அத்தியாயத்தை சுட்டிக்காட்டி அதில் நாவல் சர்வதேச தளத்துக்கு செல்வதாக எழுதியிருந்தார். என்னளவில் ஈழ சூழலை நுணுக்கமாக பதிவு செய்த அனைத்து அத்தியாயங்களிலும் நாவல் சர்வதேச தளத்திலும் சேர்ந்தே பயணிக்கிறது. இந்திய ராணுவத்தின் வக்கிரங்களை படிக்கும் ஒரு காஷ்மீறியோ, வடகிழக்கை சேர்ந்தவரோ அல்லது காங்கோவில் இருப்பவரோ அல்லது ராணுவ கண்காணிப்பில் இருந்த எந்த ஒரு சமூகத்தினராலும் இதை உள்வாங்கிக்கொள்ள முடியும், நிலாமதி உலகத்தில் காலம் காலமாக நடக்கும் போர் சூழலில் சிதைக்கப்படும் பெண்களின் குறியீடு.

பகைமறுப்பு/ நல்லிணக்கம் போன்றவைக்கு தீவிர அரசியல் சரித்தன்மை கொண்ட உரையாடல் தான் வழிவகுக்கும் என்பது ஒரு மித்தாக எனக்குப்படுகிறது . எல்லா shacklesஐயும் உடைக்கக shared obscenity with solidarity (“தமிழர்கள் துப்பைக்கியையும் சாமானையும்” இடம், இந்த சூழலில் சொலிடாரிட்டிக்கு வழியில்லை என்றாலும் ) கூட வழிவகுக்கலாம், தீவிர அரசியல் சரித்தன்மைகளைக்கொண்டு எதை அடைய நினைக்கிறோமோ அதற்க்கெதிராகவே விளைவுகள் அமையலாம். கதாபாத்திரங்களில் எல்லா நெகிழ்ச்சியையும் கொடுத்து விட்டு ஆனால் முழு புனைவிலும் சின்ன இழையாக இருமையை கட்டமைத்து விடும் ஆபத்தை கொண்டது omniscient narration. The novel has been largely pluralistic in character, in all sense.அதை சயந்தன் கடந்து வந்திருக்கிறார். பேரினவாத அநீதிக்கெதிராக ஆயுதங்களை மக்கள் ஏந்தும்போது அவர்களை பெடியங்கள் என்று கோழி குஞ்சாக பாதுகாத சனம் புலிகளே ஒரு அதிகார மையம் ஆகும்போது அவர்களின் சட்டமும், தண்டனைகளும் துயரத்தையே தருகின்றன. இந்த உட்சூழலே மாற்று கருத்துக்கு உந்துதலாகவும் காரணியாகவும் அமைகிறது, இயல்பாகவே. தேவிபாலாவின் கொலையும், அகிலாவுடனான தன் புதுவாழ்க்கையின் ஆசையுமே அமுதனை இயக்கத்தை நோக்கியான கேள்விகளை எழுப்பச்செய்கின்றன, அவரின் சிந்தனையின் எல்லையும் இயல்பாகவே, நேரு ஐயாவாக அமைகிறார்.

போர் சித்திரம் எனக்கு full metal jacket இன் கடைசி காட்சிகளை நினைவுபடுத்தியது. இது போக சாதி, சடங்குகள், இயக்கத்துக்கும்-சாதிக்குமான உறவு, தனி மனித சுதந்திரம், சிங்களவர்களையும் சேர்த்தே அலைக்கழிக்கும் போர் சூழல் என பல தளங்களை தொட்டுச்செல்கிறது ஆறாவடு. தீவிர அரசியல் நிலைப்பாடுகளை உரக்க சொல்லும் பிரதிகளின் மத்தியில், சமூகத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத/ சன்னமாக ஒலிக்கும் போரினால் கிழிந்து ரணமான மக்களின் குரல்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்த நாவல் .

License

Icon for the Public Domain license

This work (ஆறாவடு by aaraavadu) is free of known copyright restrictions.

Share This Book