35
மூலம்
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்–
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.
எளிய தமிழில்
அருளும் நின்திருவடி எந்தை திருமுடி மதிமணம்
தவமாய் எம்மடியார்தலை நின் பாதம் வைத்தருள
யாவரும் வியப்புறும் வானவரும் எண்ணிறந்த
தேவரும் வியப்பர் இத்தவம் அவர்க்கும் கிட்டுமோயென
பாற்கடல் பாம்பணை துயில் பரம்பொருளே