37
மூலம்
கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.
எளிய தமிழில்
அபிராமி யுன் கையணிகலன் கரும்பு வில்லும் மலரம்பும்
அணிகலன் திருமேனியதில் பூணும் வெண் முத்து மாலையாம்
நச்சுப் பாம்பின் படமாய் ரகசியதானமதில் பன்மணி ஆபரணப்பட்டாம்
எண்திசையு மாடையாய்ப் போர்த்த சகல செல்வ திகம்பரனாம்
எந்தையுடன் பொருந்திய என்னம்மே உன்திருவடி சேர்வேனே