65
மூலம்
ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம்
முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?–வல்லி. நீ செய்த வல்லபமே.
எளிய தமிழில்
மண்ணிலும் விண்ணிலும் தேவரும் மனிதரும் காண வில்தாங்கிய
மன்மதனவனை நெற்றிக்கண்கொண்டெறித்து தட்சிணாமூர்த்தியாகித்
தவம்புரி எந்தை சிவனிடம் பன்னிரு திருக்கரமும் சிவந்தஆறு
முகமண்டல ஜோதியா ய்மலர் ஞானஉரு குருபர ஷண்முகன்
உதித்தது மன்னையே அபிராமியே உன்னாற்றலே