17
மூலம்
அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?
எளிய தமிழில்
அதிசயமே அத்புத வடிவே அழகே ஆனந்தத் திருவுருவே
அரவிந்த மெல்லாம் ஆராதிக்கும் அழகிய சிவக்கொடியே
அமுதமே அன்னையின் வாஞ்சையாய் ரதிபதிக் கருள
அன்று நெற்றிக்கண் கொண்டெரித்த மன்மதனை உயிர்ப்பித்து
அத்தனை அன்பினால் வென்று அவனி டப்பாகம் கொண்டவளே