21
மூலம்
மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.
எளிய தமிழில்
நெஞ்சம் விம்மும் செங்கலச தனங்கள் உடையவளே
கொஞ்சித்தாவும் கங்கை எழிலலையே உயர்மலை உதித்தவளே
கெஞ்சும் கடலலைச் சங்குவளையணிச் செங்கை கொண்டு
செஞ்சடை யானிடபாகம் சேர்ந்த மயில்சாயை சகலகலாவல்லியே
தஞ்சமென்றே யடைந்தேன் பசும் மென்கொடியே