31
மூலம்
உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.
எளிய தமிழில்
உமையே ஒன்றியுன் வலமா யுன்னுறை சிவனுடன்
இமைக் கணமும் பிரியா அர்த்தநாரி உருவாய்நீ
எமைக் காத்துன் புகழ்பாட அருள்பாலிக்கு முன்முன்
அமையுறு தோள்மங்கை சுகம்வேண்டேன் மதம்வேண்டேன்
சுமைதரு மறுபிறவி வேண்டேன் வேண்டேன் ஆசையும்