95
மூலம்
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
எளிய தமிழில்
என்று மழியா குணக் குன்றே வற்றாக் கருணா சாகரமே சங்கரியே
நன்றே வருகினும் தீதே விளைகினும் உனக்கே பாரமாம் எனக்கல்லவே
அன்றே நீயெனை ஆட்கொண்ட நொடியே அர்ப்பணம் செய்தே னெனையே
சென்றே னுன்வழியே சிந்தை உன்னிடம் நானோ தாயிடை சேயாய்க்
கனிந்தே னுன்னருட் கடலில் இமவான் பெற்ற கோமளமே