27
மூலம்
உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி – நின் அருள் ஏதென்று சொல்லுவதே.
எளிய தமிழில்
உறித்தெ றிந்தாயென் ஆணவகன்ம மாயா ஜாலத்தை
நிறைத்தாய் கடலாய் பக்திக் கனலா யுன்நேசத்தை
துடைத்தாயென் உள்ளம் தூயவுன் அருள் வெள்ளத்தால்
அளித்தா யெனக்கே நின்தாமரை மலரடி சேவை
படைத்தா யென்வார்த்தை நின்புகழ் சொல்வதற்கே