"

3

Devi Series 63

மூலம்

அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

 

எளிய தமிழில் 

 

அறிந்தேனுனை ரஹஸ்ய மந்திரமாய்
புகுந்தேன் சரண் உன்திருவடி தஞ்சமாய்
உணர்ந்தேன் உன்பெருமை யறியாச் சிறுமை
விழுந்தேன் இரண்டறக் கலந்தேனுன் பாதம்
பிரிந்தேன் உனையறியா மனிதரை

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அபிராமி அந்தாதி – எளிய தமிழில் Copyright © 2014 by ஜவஹர் கண்ணன், படங்கள் – ஓவியர் கேஷவ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.