"

32

மூலம்

ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

 

எளிய தமிழில்

 

ஆசையலையில் உழன்று அந்தகன் கையில் சிக்குண்டு
மோசவலை நானே முழுதாய்ப் பின்னி மூடச்செயலாலே
பாசவலையில் துன்பமுற விருந்தயெனை நின்பாத
வாசத்தாமரையில் வசப்படுத்தி பேரொளியா யெனக்கருளி
காசினியில் நேசமாய்க் காத்தருளும் ஈசர்பாகத்து நேரிழையே

 

 

 

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அபிராமி அந்தாதி – எளிய தமிழில் Copyright © 2014 by ஜவஹர் கண்ணன், படங்கள் – ஓவியர் கேஷவ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.