51
மூலம்
அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்,
மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.
எளிய தமிழில்
அரணே திரிபுர நிலையென்ற அசுரன் வலிமையழித்த
அரனும் அரியுமே நின் திருவடியே எமக்குப் புகலென்றே
தஞ்சம் தஞ்சமென்றே அடைக்கலம்புக சரணமளித்தடியார்
நெஞ்சம் நிறை யருள்புரி நிலையாய் நிற்குமெம் மன்னை
தொழுவார் ஜனன மரணம் எய்தார் இவ்வையகத்தே