58
மூலம்
அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக்
கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும்,
சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.
எளிய தமிழில்
அருள்பொழி செந்தாமரை யொக்கயென் உளத்தாமரை எழுந்தருளி
அழகுமுலைச் சிறுதாமரை மொட்டாய் ஒளிர் பாலையே அபிராமியே
அன்புவிழிக் கருணை மொழித் திருமுகத் தாமரையே திருக்கரமும்நின்
திருவடித் தாமரைப் புகலிடம் கொண்டே பேரெழில் பொங்கி மணக்கும்
தாமரைக் காடு நினைந்தே அடையேன் வேறொரு தஞ்சம்