38
நமது செவி வழித் தொடு சிகிச்சைக்கும்உலக மருத்துவத்திற்கும் முக்கியமான மூன்று வித்தியாசங்கள் உள்ளது. ஒன்று உறுப்புகளில் நோய் கிடையாது, இரத்தத்தில் தான் நோய்”. நமது உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களும் ஒவ்வொரு வினாடியும் இரத்தத்தையும் இரத்திலுள்ள பொருள்களையும் நம்பியே உயிர் வாழ்கிறது. எனவே, இரத்தத்தில் ஏற்படும் சிக்கல்களே உறுப்புகளின் நோய்க்கு அடிப்படைக் காரணம். ஆனால், உலக வைத்தியம் உறுப்புகளில் நோய்களை தேடிக் கொண்டிருக் கிறார்கள். எனவேதான் பல வருடங்களாக ஒரே நோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இரண்டாவது வித்தியாசம் இரத்தத்தில் உள்ள பொருள்களில் நல்ல பொருள், கெட்ட பொருள் என்று இரண்டு வகைகள் உள்ளன. உலக மருத்துவர்கள் இரத்தத்தில் எத்தனை சர்க்கரை இருக்கிறது என்று கணக்கெடுகிறார்கள். ஆனால், நல்ல சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கெட்ட சர்க்கரை எவ்வளவு இருக்கிறது என்று கணக்குப் பார்ப்பது இல்லை. நல்லது, கெட்டது என்பது வீரியத்தை பொருத்து அமைகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரை கால்சியம், அயோடின், சோடியம் போன்று அனைத்து பொருள்களிலும் வீரியம் உள்ளது. ஒரு சில பொருள்கள் வீரியம் அதிகமாக இருக்கும். ஒரு சில பொருள்களுக்கு வீரியம் குறைவாக இருக்கும். வீரியம் அதிகமாக உள்ள பொருள்கள் நல்ல பொருள்கள் வீரியம் குறைந்த பொருள்கள் கெட்டப் பொருள்கள். நாம் கடையில் சென்று துணி வாங்கும் பொழுது பல வகையான தரத்தில் பார்க்கிறோம். அரிசி கூட ஐம்பது ரூபாய்க்கும், நூறு ரூபாய்க்கும் இருக்கிறது. உலகத்திலுள்ள அனைத்து பொருள்களுக்கும் தரம் இருக்கிறது. தரம் குறைந்த பொருள்கள் குறைந்த விலையிலும் தரம் அதிகமான பொருள்கள் அதிக விலையிலும் கிடைக்கிறது. இரத்தத்திலுள்ள பொருள்களுக்கு மட்டும் ஏன் தரத்தை யாரும் இதுவரை பார்ப்பதில்லை.
மனிதர்களுக்கு உள்ள மனம் கூட நல்ல மனம், கெட்ட மனம் என கூறுகிறார்கள். இதை கண்ணில் பார்க்க முடியாது. மருந்து மாத்திரைகளில் டோ° இருக்கிறது. ஒரே அளவு மாத்திரைக்குப் பல வகையான டோ° உள்ளது. கார்பன்–டை–ஆக்ஸைடுடில் கூட நல்லது கெட்டது இருக்கிறது. வாகனங்களிலிலிருந்து வரும் கார்பன்–டை– ஆக்ஸைடு கெட்டது. மரங்களில் இருந்து வரும் கார்பன்–டை–ஆக்ஸைடு நல்லது எனவே, உலகத்திலுள்ள அனைத்துப் பொருள்களிலும் நல்லது, கெட்டது, தரமானது, தரம் குறைந்தது. வீரியம் அதிகமானது, வீரியம் குறைவானது எனப் பிரிக்க முடியும். அதேபோல் இரத்தத்திலுள்ள அனைத்து பொருள்களும் வீரியம் வைத்து நாம் பிரிக்க முடியும். இப்படி உலக வைத்தியம் இரத்தத்திலுள்ள பொருள்களுக்குத் தரத்தைப் பார்க்காததுதான். இப்பொழுது மருத்துவ உலகத்திற்கு நோயைக் குணப்படுத்தாமல் இருப்பதற்கு முக்கியமான காரணமாகும். எனவே, இரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் பார்க்க வேண்டும். இது இரண்டாவது முக்கியமான வித்தியாசம்.
மூன்றாவது வித்தியாசம் நமது உடலில் எந்த ஒரு சுரப்பியும் எந்த ஒரு உறுப்பும் தப்பு செய்யாது. மருத்துவர்கள் கூறுகிறார்கள், உங்கள் கணையம் தப்பு செய்கிறது, உங்கள் தைராய்டு தப்பு செய்கிறது. (ஆயட குரnஉவiடிn டிக கூhலசடினை) உங்கள் சிறுநீரகம் தப்பு செய்கிறது (ஆயட குரnஉவiடிn டிக முனைநேல) ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நமது உடலிலுள்ள எந்த உறுப்பும் எப்பொழுதும் தவறு செய்யவே செய்யாது.
உங்கள் கணையம் தப்பு செய்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்களே உங்கள் கணையம் வேறு ! நீங்கள் வேறா? உங்கள் கணையத்தை வீட்டில் வைத்து விட்டு வெளியே வந்து விட்டீர்களா?. அல்லது இப்போது உங்கள் கணையம் உங்கள் உடம்பில் இருக்கிறதா? நமது உடம்பில் உள்ள ஒரு உறுப்பு தவறு செய்கிறது என்று கூறினால் நாம் தவறு செய்கிறோம் என்றுதான் அர்த்தம். நமது உடம்பில் உள்ள சிறுநீரகத்திற்கும், தைராய்டுக்கும், இருதயத்திற்கும், டி.வி.பார்க்கும் வேலை கிடையவே கிடையாது. பிக்னிக் போகிற வேலை கிடையவே கிடையாது. பக்கத்து வீட்டுக்காரர் உறுப்புகளுடன் சென்று நம்ம உறுப்பு அரட்டையடித்துக் கொண்டிருப்பதும் கிடையாது. எனவே, நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறதே தவிர தவறு செய்வதற்குத் தெரியாது. நேரமும் கிடையாது. எப்பொழுது நம் உடம்பில் உள்ள உறுப்பு ஒன்று தவறு செய்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறாரோ நாம் புரிந்து கொள்ள வேண்டியது. என்னவென்றால் நாம் தான் தவறு செய்கிறோம் என்று.
எனவே தயவு செய்து இனிமேல் உறுப்புகள் தவறு செய்கிறது என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம். நாம் செய்யும் தவறுக்கு உறுப்புகளில் ஒரு பாதிப்பு ஏற்படுகிறது. உறுப்புகள் என்றுமே நம்மை காப்பாற்றுவதற்கு மட்டுமே யோசிக்கிறது. நாம் தான் கெடுப்பதற்குப் பல வேலையைச் செய்கிறோம். ஒரு நோயாளி செய்யும் தவறுதான் ஒரு உறுப்பை பாதிக்கிறதே தவிர வேறு ஒரு காரணமும் கிடையாது. எனவே, தயவு செய்து இனி உறுப்புகள் தவறு செய்கிறது என்று கூற வேண்டாம். நாம் தவறு செய்கிறோம், அந்த தவறை சரிபடுத்தி உறுப்புகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்த வேண்டும். இந்த மூன்று வித்தியாசத்தை உணர்ந்து கொண்டால் நமது நோய்களை நாமே எந்தவொரு மருந்து, மாத்திரை மருத்துவர் இல்லாமல் குணப்படுத்த முடியும்.