48
நோய்கள் மொத்தம் இரண்டு வகைப்படும் 1. உடலில் உள்ளே இருந்து வரும் நோய்கள் 2. வெளியில் இருந்து ஒரு பொருளால் ஏற்படும் நோய்கள் இரண்டாவது வகை நோய்க்கு நாம் கண்டிப்பாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் ஆப்பரேசன் செய்ய வேண்டும். ஆனால் முதல் வகை நோய்க்கு எந்த மருத்துவரும் இல்லாமல் சுலபமாக குணப்படுத்த முடியும். ஏனென்றால், அதற்கான காரணம் மொத்தம் ஐந்து.
1. இரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் குறைவது.
2. இரத்தத்தில் உள்ள பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது.
3. இரத்தத்தின் அளவு குறைவது.
4. மனதில் ஏற்படும் பாதிப்புகள்.
5. உடலில் உள்ள உறுப்புகளுக்கும் செல்களுக்கும் அறிவு கெட்டுப் போகுதல்.
இந்த ஐந்தும்தான் நோய்களுக் கான அடிப்படை காரணம். இதைப்பற்றி நாம் தெளிவாக பார்த்து புரிந்து கொண்டோம்.
சிலருக்குச் சரியாக புரியவில்லை என்றால் இந்த உதாரணத்தின் மூலமாகத்
தெளிவாக்கிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு விபத்து ஏற்படுகிறது அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோம். மருத்துவமனையில் முதலில் என்ன செய்கிறார்கள் உடனே டீ பாசிடிவ்–ல் நான்கு பாட்டில் இரத்தம் வாங்கி வாருங்கள் என்று நம்மை அனுப்புவார்கள். இரத்தத்தின் அளவு உடலில் குறைவது நோய் என்று பார்த்தோம். இது முக்கியமான ஒரு நோய் என்பதால், உடனடியாக அவருக்கு நான்கு பாட்டில் இரத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே நாம் கூறிய ஐந்து காரணங்களில் ஒரு காரணத்தைச் சரி
செய்கிறார்கள். எப்பொழுதாவது உங்கள் மனது அளவு குறைந்து விட்டது. நான்கு பாட்டில் மனது வாங்கி வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்களா? மனதை அப்படி டப்பாவில் அடைத்துக் கொடுக்க முடியாது. நமது உடலில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டு விட்டது. நான்கு பாட்டில் அறிவு வாங்கி வாருங்கள் என்று கூறமுடியுமா? எனவே உடலில் உள்ளஅறிவை நேரடியாக யாரும் சரி செய்ய முடியாது. மனதையும் ஊசி, ஆபரேசன், மூலமாக சரிசெய்ய முடியாது.
இரத்தத்தின் அளவை சரிசெய்து விட்டார்கள் மீதமுள்ள இரண்டு விஷயத்தைப் பற்றி யோசியுங்கள். இரத்தத்தில் எல்லா பொருள்களும் நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்பதே மீதமுள்ள முக்கியமான இரண்டு காரணங்கள். இதை சரிசெய்வதற்கு வெள்ளை நிறத்தில் ஒரு டப்பாவை தலைகீழாக மாட்டி ஒரு டீயூப் வைத்து உடலில் ஏதாவது இடத்தில் அல்லது கையில் ஊசி வழியாக சொட்டுச் சொட்டாக அந்த நீரை இறக்குவார்கள். நாம் பொதுவாக இந்த டப்பாவிற்கு குளுகோ° டப்பா என்று பெயர் வைத்து
இருப்போம். ஆனால், மருத்துவமனையில் மாட்டுவது அனைத்தும் குளுகோ° டப்பா கிடையாது. சில நேரம் குளுகோ°, சில நேரம் சோடியம் குளோரைடு என்ற உப்பு, சில நேரம் பல தாதுப் பொருள்கள் அடங்கிய கலவை என்று ஒவ்வொரு டப்பாவிலும் வேறு வேறு பொருள்கள் இருக்கும். இரத்தத்தில் சொட்டுச் சொட்டாக நீரை அனுப்பும் பொழுது, மூத்திரம் செல்வதற்காக ஒரு டீயூப் வழியாக ஒரு டப்பா வைத்து இருப்பார்கள். நோயாளி மயக்க நிலையில் இருக்கும் பொழுது அவர் உணவும் சாப்பிட முடியாது. தண்ணீரும் குடிக்க முடியாது. மூச்சுக்காற்று மட்டுமே உள்ளே சென்று வெளியே வரும். இந்த நிலையில் மூன்று மாதங்களாகக் கோமாவில் இருக்கும் ஒரு நோயாளிக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள்?.
இரத்தத்தில் சொட்டுச் சொட்டாக ஒரு பொருளை மட்டும் அனுப்பும் பொழுது, எப்படி மூன்று மாதங்கள் ஒரு உயிரைக் காப்பாற்ற முடிகிறது. இந்தக் கோமாவில் இருக்கும் நோயாளிக்கு இரத்தத்தில் சொட்டுச் சொட்டாக மருந்து அனுப்புவார்கள், தேவைப்பட்டால் ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து ஊசிகளை இரத்தத்தில் ஏற்றுவார்கள். ஆக மொத்தம் ஒரு நாளைக்கு சில லிட்டர் திரவப் பொருள்களை இரத்தத்தில் சேர்க்கிறார்கள். அதாவது இரத்தத்தில் எல்லாப் பொருளையும் நல்ல பொருளாக அனுப்பிக் கொண்டே இருந்தால் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் இரத்தம் மூலமாகச் சென்று, அந்த உறுப்புகளும் செல்களும் அந்தப் பொருளைச் சாப்பிட்டு தன் உயிரைக் காப்பாற்றிகொள்ளும். தன் நோயை தானே குணப்படுத்தும் என்பதே உண்மை. இப்படி செல்களுக்கு உள்ளே செல்லும் பொருள்கள் கழிவுப் பொருளாக மாறி இரத்தத்திற்கு மீண்டும் வந்து அந்த பொருள் மூத்திரம் வழியாக வெளியே சென்று கொண்டிருக்கும். அதாவது இரத்தத்தில் எல்லா பொருளையும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பது தான் சிகிக்சை. இப்படி வைத்தால் உடலில் உள்ள தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனியாக சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை எல்லா உறுப்பும் தன்னைத்தானே குணப்படுத்திகொள்ளும்.
மருத்துவமனையில் குளுகோ° டப்பா கொடுக்கும் பொழுது அல்லது ஊசி போடும் பொழுது தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனியாக செலுத்துகிறார்களா? ஒரே நீர் சொட்டுச் சொட்டாக உடலில் ஒரே ஒரு இடத்தில் உள்ள இரத்தத்தில் கலப்பதன் மூலமாக உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் எப்படி சிகிச்சை அளிக்க முடிகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அறிவு ஏற்கனவே இருக்கிறது. மனது ஏற்கனவே இருக்கிறது. இரத்தம் தேவைப்பட்டால் நாம் செயற்கையான முறையில் 4 பாட்டில் கொடுத்துக் கொள்ளலாம். இரத்தத்தில் எல்லாப் பொருளையும் நல்ல பொருளாக வைப்பது மூலமாக நாம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும், குணப்படுத்த முடியும். எனவே உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் மேலே கூறப்பட்ட ஐந்து காரணங்கள்தான் உண்மையான காரணம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி பெரிய பெரிய விஞ்ஞானிகள் உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் இந்த ஐந்துதான் காரணம் என்பதைக் கண்டு பிடித்து அதை
பொதுமக்களுக்குப் பகிரங்கமாக கூறினால், மக்கள் அனைவரும் நோயில்லாமல் வாழ்ந்தால் நமக்கு எந்த இலாபமும் இல்லாமல் போய்விடும் என்று இந்த ஐந்து காரணத்தையும், மறைத்து மருத்துவம் என்ற பெயரில் பல மருந்து மாத்திரைகளைக் கண்டுபிடித்து, பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இப்பொழுது உள்ள மருத்துவ முறை. மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த அறிவு இல்லாத நாமே இவ்வளவு விஷயங்களைக் கூறும்பொழுது, மிகப்பெரிய விஞ்ஞானிகள் என்று கூறிக்கொள்ளும் நோபல் பரிசு வாங்கிய பலர் ஏன் இந்த விஷயங்களைத் தெளிவாகக் கூறவில்லை?
எனவே தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் மேலே கூறப்பட்டுள்ள ஐந்து காரணங்கள் மட்டுமே இந்த ஐந்தையும் சரிசெய்வதன் மூலமாக உடலில் உள்ள அனைத்து நோய்களையும் சுலபமாகக் குணப்படுத்த முடியும். இந்த ஐந்து காரணங்களையும் சரிபடுத்துவதற்கு நமக்கு எந்த ஒரு மருந்தும் மாத்திரையும் தேவையில்லை என்பதை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
கால் மூட்டில் வலி ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்கிறீர்கள். மருத்துவர் உங்கள் கையில் ஊசி போடுகிறார். என்றாவது யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? மூட்டு காலில் வலி உள்ள போது கையில் எதற்கு சிகிச்சை பார்த்தீர்கள் கைக்கும் மூட்டுக்கும் என்ன சம்பந்தம். தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் சிகிச்சை கையில் அல்ல கையில் உள்ள இரத்தத்தில் மூட்டுவலி என்றால் மூட்டு சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. மூட்டில் உள்ள செல்களுக்குச் சாப்பிடும் பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப்போய் விட்டது என்பதே உண்மை. இரத்தத்தில் எந்தப் பொருள் கெட்டுப்போனால் அல்லது இல்லாமல் போனால் மூட்டு வலி வரும் என்பதைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அந்தப் பொருட்களை மருந்து முலமாக சரி செய்கிறார்கள் ஆனால் இயற்கையான முறையில் மருந்து மாத்திரை சாப்பிடாமல் நம்மால் குணப்படுத்த முடியும். ஆனால் செயற்கையான முறையில் மருந்து மாத்திரை ஊசி என்ற பெயரில் அந்தப் பொருள்களை கையில் உள்ள இரத்தத்தில் ஊசி வழியாகச் செலுத்துவதால், அந்தப் பொருள்கள் இரத்தம் வழியாக கையில் இருந்து நகர்ந்து மூட்டுக்காலுக்கு எப்பொழுது வருகிறதோ அப்பொழுது மூட்டு செல்கள் அந்தப் பொருளை எடுத்து சாப்பிட்டு தன் நோயைக் குணப்படுத்திக் கொள்கிறது. எனவே மூட்டுவலி என்பது மூட்டு சம்பந்தப்பட்ட நோயே கிடையாது இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போனாலோ அல்லது இல்லாமல் போனாலோ ஏற்படும் நோய் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எனக்குக் கண்ணில் வலி ஏற்படும்பொழுது சிறு வயதில் நான் ஒரு
மருத்துவரிடம் சென்றேன். மருத்துவர் என்னைக் குப்புற படுக்க வைத்து பிட்டத்தில் ஊசி ஏற்றினார். நான் அப்போழுது யோசித்தேன். வலி கண்ணில் உள்ளது சிகிச்சை ஏன் பிட்டத்தில் பார்க்க வேண்டும் என்று. அப்பொழுது தான் எனக்குப் புரிந்தது. கண் வலி என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. கண் சாப்பிடும் ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுப் போய்விட்டது அல்லது இல்லாமல் போய்விட்டது. எனவே நோய் இரத்தத்தில் தான். கண்ணில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். புட்டத்தில் குத்திய ஒரு ஊசியில் உள்ள சில பொருள்கள் இரத்தத்தில் கலந்து அந்த இரத்தம் கண்ணுக்கு பக்கத்தில் வரும் பொழுது கண் அந்த பொருளை எடுத்து தன் நோயைக் குணப்படுத்திக் கொள்கிறது. எனவே கண்ணில் வரும் எந்த நோய்க்கும் கண்ணிற்கும் சம்பந்தமே கிடையாது. அது இரத்தம் சம்பந்தப்பட்ட நோய் என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
காதில் வலி ஏற்பட்டால், மருத்துவனைக்குச் சென்று மருத்துவரிடம் மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். காதில் வலி ஏற்பட்டால் வாயில் ஏன் மாத்திரை சாப்பிட வேண்டும். வாயில் சாப்பிடும் மாத்திரை வயிற்றில் ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து அது காதின் அருகே செல்லும். காது அந்தப் பொருளை எடுத்துக் கொண்டு தன்னைக் குணப்படுத்திக்கொள்கிறது. எனவே காது வலி என்ற நோய் காது சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. அது இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போவது, அல்லது இல்லாமல் போவதால் ஏற்படும் நோய் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
எனவே உடலில் எந்த உறுப்பிலும் எந்த நோய், வலி, வேதனை வந்தாலும் அந்த உறுப்பு காரணம் அல்ல. இரத்தத்தில்தான் நோய். அதிலும் மேலே கூறப்பட்டுள்ள இந்த ஐந்து காரணங்கள்தான் நோய் என்பதை மீண்டும் மீண்டும் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
இனிமேல் யார் எந்த நோயைப் பற்றிக் கூறினாலும். நாம் அந்த நோய்க்குச் சரியான காரணத்தைக் கூறமுடியும். உதாரணமாக முடி கொட்டுதல் என்பது எதனால் ஏற்படுகிறது என்று யாராவது கேட்டால் தைரியமாகச் சொல்லுங்கள் முடி கொட்டுதல் என்பது முடி சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. முடிக்குத் தேவையான ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுவிட்டது, முடிக்கு தேவையான ஒரு பொருள் இரத்ததில் குறைந்துவிட்டது, இரத்தத்தில் அளவு குறைந்து விட்டது, முடி கொட்டுகிறது என்று மனது கெட்டுப்போய் விட்டது அல்லது முடியைப் புதுப்பிக்கும் அறிவு உடம்பில் கெட்டுவிட்டது என்று ஐந்து காரணங்களைக் கூறுங்கள். இதே போல் கழுத்து, காது, மூக்கு, கிட்னி, இருதயம், நுரையீரல் ஆகிய எந்த உறுப்பில் எந்த நோய் என்றாலும் முதலில் அந்த உறுப்பில் நோய் இல்லை என்பதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இரண்டாவது இந்த ஐந்து காரணங்களையும் கூறிப் பாருங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.
எனவே முடி கொட்டுதல் வெள்ளை முடி, கண் சம்பந்தமான கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுக்கோமா, கண்ணில் புரை, நீர்வழிதல், காது சம்பந்தப்பட்ட வலி, வேதனை, மூக்கு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும், வாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பல் சம்பந்தப்பட்ட, நாக்கு சம்பந்தப்பட்ட, உணவு குழாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இந்த ஐந்து காரணம் தான் உண்மை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இருதயம் சம்பந்தப்பட்ட க்ஷஞ, இருதய வால்வு விரிதல், சுருங்குதல், ஓட்டைவிழுதல் கொழுப்புக் கட்டி அடைப்பு, ஆகிய அனைத்திற்கும் ஐந்து காரணங்களே. நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆ°துமா, மூச்சடைப்பு, நெஞ்சுசளி, இருமல், சளி, மூக்கு ஒழுகுதல், தும்மல் ஆகிய அனைத்திற்கும் ஐந்து காரணங்களே, வயிறு சம்பந்தப்பட்ட அஜீரணக்கோளாறு, அல்சர், இரிட்டபுள் பவுல் சின்ரோம் (ஐக்ஷளு), கே°டிரிக் டிரபிள், (வாயு தொல்லை) ஆகிய அனைத்து வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வயிறு காரணம் இல்லை இந்த ஐந்துதான் காரணம். கர்ப்பபையில் கட்டி இருக்கிறது சிறுநீரகத்தில் கல் இருக்கிறது, பித்தப்பையில் கல் இருக்கிறது. குழந்தைகளுக்கு வரும் நோய், ஆண்மை குறைவு மலச்சிக்கல், மூட்டுவலி, முதுகுவலி, இடுப்பு வலி, தொடை வலி, கெண்டைக்கால் வலி, கணுக்கால் வலி, உள்ளங்கால் எரிதல், குத்துதல், குடைதல், மரமரப்பாக இருத்தல், நகம் உடைதல், வெரிகோ°வைன், தைராய்டு, கேன்சர், எய்ட்°, தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் எக்சிமா சொறியாசி°, ஞாபகமறதி போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த ஐந்து காரணங்கள்தான் உண்மையே தவிர அந்த உறுப்புகளில் நோய் இல்லை என்பதை தயவு செய்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தையின்மை என்பது ஒரு தனிப்பட்ட நோயும் கிடையாது, இதற்குத் தனிப்பட்ட சிகிச்சையும் கிடையாது. ஏனென்றால் குழந்தையின்மை என்பது கணவருக்கோ அல்லது மனைவிக்கோ மேலே குறிப்பிட்ட ஐந்து காரணங்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ சரியாக இல்லாமல் இருக்கும். எனவே கணவனும் மனைவியும் இந்த ஐந்து காரணங்களை சரிசெய்து பின் இருவரும் ஒன்று சேர்ந்தால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆண்மைக் குறைவு என்பது ஒரு தனிப்பட்ட நோய் கிடையாது. உங்களிடம் அதிகமாகப் பணம் இருக்கும்பொழுது தாராளமாக யோசிக்காமல் எல்லா விஷயத்திற்கும் செலவு செய்வீர்கள். பணத்தட்டுப்பாடு இருக்கும்பொழுது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பணத்தை அளவாக எண்ணி எண்ணி செலவு செய்வீர்கள். அனாவசிய செலவுகளை தவிர்ப்பீர்கள். அதே போல உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்து சக்தி அதிகமாக இருக்கும் பொழுது நமது உடல் ஆண்மை சக்திக்கு மீதமுள்ள சக்தியைப் பயன்படுத்தும். தாரளமாகப் பயன்படுத்தும். எப்பொழுது உடலில் உள்ள பல உறுப்புகளில் நோய் இருக்கிறதோ நமது உடலில் உள்ள பிராணசக்தி நோயைக் குணப்படுத்துதற்கு மட்டுமே பயன்படுத்தும் ஏனென்றால், அது மிகவும் அத்யாவசியமானது. எனவே அனாவசியமான இந்த உடல் உறவுக்குத் தேவையான ஆண்மை சக்தியை செலவு செய்யாது. எனவே ஆண்மை குறைவு என்பது ஒரு தனிப்பட்ட நோய் கிடையாது. உடலில் நோய்கள் உள்ளது ஆனால் அதைக் குணப்படுத்துவதற்கே சக்தி இல்லாததனால் நமது உடம்பு ‘இவருக்கு இது ஒரு கேடா? என்று தடை விதிக்கிறது. எனவே உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்துவது மூலமாக ஆரோக்கியம் அடைந்த பிறகு நமக்குக் கண்டிப்பாக ஆண்மை சக்தி கிடைக்கும் என்பதைப் புரிந்து கொண்டு முதலில் உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
எனவே இதுவரை நாம் படித்ததில் புரிந்து கொண்டது என்னவென்றால், அனைத்து நோய்களுக்கும் இந்த ஐந்து காரணங்கள்தான் உண்மை. எனவே தயவு
செய்து யாரும் இந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படித்து முடித்தபிறகு ஒரு
குறிப்பிட்ட பெயர் சொல்லி இந்த நோயைக் குணப்படுத்த முடியுமா? என்று கேட்காதீர்கள் எந்த நோயாக இருந்தாலும் அந்த நோய்க்கு இந்த ஐந்துதான் காரணம்.
உண்மையிலேயே மேலே கூறப்பட்ட இந்த ஐந்து காரணங்கள் மட்டும் நோய்க்கு காரணம் கிடையாது இது அடிப்படைக் காரணங்கள் மட்டுமே இது இல்லாமல் பல காரணங்கள் உண்டு 6 நமது புத்தி கெட்டுப்போனாலும் நோய் ஏற்படும். 7. நமது ஆழ்மன பதிவுகளில் உள்ள சில விஷயங்கள் நோயை உண்டுசெய்யும். 8. நமது ஆன்மாவுக்கு ஒரு சக்தி உள்ளது அந்த சக்தி குறையும் பொழுது நோய் ஏற்படும். 9. நம் உடலைச்சுற்றி ஆரா என்ற ஒரு சக்தி ஓட்டம் இருக்கும் இதன் வீரியம் குறையும் பொழுது நோய் ஏற்படும். 10. வெளியே இருக்கும் பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவற்றில் தரம் குறையும் பொழுதும் உடலுக்கு நோய் ஏற்படும். 11. பிறக்கும் பொழுதே சில உறுப்புகள் சரியாக வடிவமைக்கப் படாதாலும் உடலில் நோய்கள் ஏற்படும். 12. பரம்பரை பரம்பரையாக, டிஎன்ஏ, ஆர்என்ஏ, ஜீன்° ஆகிய பரம்பரை மூலமாகவும் நமக்கு நோய்கள் ஏற்படும். அதுமட்டும் அல்லாமல் ஒரு நோய்க்கான காரணம் ஆயிரம் இருக்கிறது.
இருந்தாலும், இந்தப் புத்தகத்தில் முதலில் உள்ள ஐந்து விஷயங்களை மட்டுமே நாம் பார்க்க உள்ளோம். கூடிய விரைவில் இந்த 12 காரணத்திற்கும் எப்படி நோய் வருகிறது அதை எப்படி சரிசெய்வது என்பதை அடுத்த புத்தகத்தில் தெளிவாகப் பார்க்கலாம். இதுவரை படித்ததில் நாம் புரிந்து கொண்டது உள்ளிருந்து வரும் அனைத்து நோய்களுக்கும் மொத்தம் காரணம் ஐந்து 1. இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டு போவது, 2. இரத்தத்தில் ஒரு பொருள் அளவு குறைந்து போவது 3. இரத்தத்தின் அளவு குறைந்து போவது, 4. மனசு கெட்டு போவது, 5. உடலில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டு போவது.
இந்த ஐந்து காரணங்களையும் தெரிந்து கொண்டால், நீங்கள் பாதி மருத்துவர் ஆகலாம். இந்த ஐந்து காரணத்தையும் ஒழுங்காக வைத்துக் கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வதால், நீங்கள் முழு வைத்தியர் ஆகலாம்.