49
நமக்கு வரும் நோய்களுக்கு ஐந்து காரணங்கள் என்பதை இது வரை பார்த்தோம். ஆனால் உண்மையில் ஐந்து காரணங்கள் கிடையாது. ஒரே ஒரு காரணம் தான். நமக்கு சுலபமாக புரிய வேண்டும் என்பதற்காகவே ஐந்து காரணங்களை இது வரை தெளிவு படுத்தி வந்தோம். ஆனால் ஒரே ஒரு காரணம் என்பது தான் உண்மை. அது என்னவென்றால் உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே ஒரு காரணம் “இரத்தம் கெட்டுப் போவது மட்டுமே. உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே ஒரு சிகிச்சை இரத்தத்தைச் சுத்தப்படுத்துவது மட்டுமே. எனவே இனிமேல் நமக்கு ஏதாவது நோய் வந்தால் நாம் அதற்கு பெயர் வைப்பதை விட்டு விட்டு இரத்தம் கெட்டுப் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டால் அந்த நோயைச் சுலபமாகக் குணப்படுத்தலாம். எந்த நோய் வந்தாலும் அமைதியாக சிந்தித்துப் பார்த்தால் இரத்தம் கெட்டுப் போய் விட்டதால் மட்டுமே வரும் என்பதைத் தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும்.
மருந்து கொடுக்கும் வைத்தியங்கள் அனைத்தும் நமது இரத்தத்தில் உள்ள பொருள்களை சரிசெய்வது மற்றும் மருந்து மாத்திரை மூலமாக இரத்தத்தை சுத்தம் செய்ய முயற்சி செய்கிறது. இவை தற்காலிகமான தீர்வையே தரும். எனவே மருந்து மாத்திரை ஊசி கொடுக்கும் மருத்துவத்திற்கு ஆபத்துக் காலத்தில் (நுஅநசபநnஉல) மற்றும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செல்ல வேண்டும்.
யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம், அக்குபஞ்சர், நியூரோதெரப்பி மற்றும் முத்ரா, ரெய்கி, ப்ராணிக் `ஹீலிங், டச் `ஹீலிங், மெக்னோடோ தெரபி போன்ற மருந்து இல்லாத வைத்தியங்கள் நமது இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்கிறது. இந்த மருத்துவங்கள் நேரடியாக சுத்தம் செய்வதில்லை. ஆனால் மறைமுகமாக சுத்தம் செய்கிறது.
யோகா நேரடியாக இரத்தத்தை சுத்தம் செய்வது கிடையாது. ஆனால் யோகா செய்து விட்டு நாம் ஒரு உணவை சாப்பிட்டால் அந்த உணவை சுத்தமான இரத்தமாக மாற்றி. நோய்க்கு மருந்தாகச் செயல்பட்டு நோயைப் பக்க விளைவுகள் (ளுனைந நுககநஉவ) இல்லாமல் சிறந்த முறையில் வைத்தியம் பார்க்கிறது.
அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகள் நேரடியாக நோயைக் குணப்படுத்துவதில்லை. ஆனால் அக்குபஞ்சரில் நாடி பார்ப்பார்கள். எந்த நாடி சரியாக துடிக்கவில்லையோ அந்த உறுப்பு சரியாக வேலை செய்யாமல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து உடலில் உள்ள புள்ளிகளில் எந்தப் புள்ளியை தொடுவது மற்றும் ஊசி போடுவது மூலமாகத் தூண்டுதல் (ளுவiஅரடயவந) செய்து சக்தி அளித்து அந்த உறுப்பை இயங்க வைப்பார்கள். அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுப் பின்னர் வீட்டில் வந்து உணவைச் சாப்பிடும் பொழுது அந்த உணவை இரத்தமாக மாற்றி நோய்களைக் குணப்படுத்துகிறது. இது போல மருந்தில்லாத மருத்துவங்கள் அனைத்தும் இயற்கையாக இரத்தத்தை சுத்தம் செய்கிறது. மருந்து கொடுக்கும் மருத்துவம்அனைத்தும் செயற்கை முறையில் சுத்தம் செய்கிறது.
எனவே மருந்து கொடுக்கும் வைத்தியத்திற்குத் தேவைப்பட்டால் மட்டுமே செல்லுங்கள். ஏனென்றால் மருந்து கொடுக்கும் வைத்தியங்கள் சரியாக மருந்து கொடுத்தாலும் பக்க விளைவுகள் (ளுனைந நுககநஉவ) ஏற்படுத்தும். மருந்தில்லா மருத்துவத்திற்கு தைரியமாக நம்பி செல்லுங்கள். ஏனென்றால் தவறாக சிகிச்சை அளித்தாலும் பக்க விளைவுகள் (ளுனைந நுககநஉவ) வராது.
எனவே உலகில் உள்ள அனைத்து வைத்திய முறைகளும் கெட்டுப் போன நமது இரத்தத்தைச் சுத்தம் செய்வது மூலமாகவே நோய்களைக் குணப்படுத்தி வருகிறது.ஆனால் ஒவ்வொரு சிகிச்சை முறைக்கும் வேறு வேறு வழிமுறைகளில் சுத்தம் செய்கிறார்களே தவிர அனைவரும் ஒரே இடத்திற்குத் தான் கடைசியில் சென்றடைகிறார்கள். எனவே நோய் என்பது இரத்தம் கெட்டுப் போவது என்றும் சிகிச்சை என்பது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவது என்பதை நாம் தெளிவாகப் புரிந்துக் கொண்டோம்.
இரத்தத்தில் எல்லாப் பொருளையும் நல்ல பொருளாக சரியான அளவு வைப்பது என்பது மட்டுமே உலகத்தில் மிகச்சிறந்த சிகிச்சையாகும். நாம் இரத்தத்தில் எல்லாப் பொருள்களையும் நல்ல பொருளாக தேவையான அளவு வைத்து விடுவது மட்டுமே நமது கையில் உள்ளது. நாம் இதை ஒழுங்காகச் செய்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கின்றன. தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது.
உதாரணத்திற்கு ஒரு சிறு கற்பனை செய்யுங்கள். நமது ஊரில் சாலை வழியே லாரி லாரியாக உணவு பொருள்கள், செல்போன், தங்க நாணயம், பட்டுப்புடவை, டி.வி., வாசிங் மெசின் ஆகிய அனைத்துப் பொருள்களும் லாரியின் வழியாக சென்று கொண்டே இருக்கின்றன. ஊரில் வசிக்கும் யாருக்கு எந்தப் பொருள் வேண்டும் என்றாலும் வீட்டின் கதவைத் திறந்து ரோட்டிற்கு வந்து ரோட்டில் செல்லும் லாரியில் எந்த லாரியில் எந்தப் பொருள் தேவைப்பட்டாலும் கையைக் காட்டினால் லாரி நிற்கும். உங்களுக்கு எத்தனை பொருள் வேண்டும் என்றாலும் இலவசமாக கொடுத்துச்செல்வார்கள் என்று அரசாங்கம் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தால் நமக்கு எவ்வளவு சௌகரியமாக இருக்கும். நாம் நினைக்கும் எல்லாப் பொருளும் நமக்கு யாராவது இலவசமாக கொடுத்தால் நாம் ஆரோக்கியமாக நிம்மதியாக இருக்க மாட்டோமா?
நாம் ஏன் இப்பொழுது வீடு சிறியதாக வைத்திருக்கிறோம்? பெரிய வசதியான வீடு வாங்குவதற்கு நமக்குத் தேவையான பொருளுதவி கிடையாது. நாம் ஏன் சிறிய செல்போன் வைத்திருக்கிறோம்? கேட்டால் கிப்ட் வந்தது என்று பொய் சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவரிடம் போதிய பணம் இல்லை. ஒரு வேளை தேவையான அளவு பணம் இருந்தால் அவர் ஒரு நல்ல செல்போனை வாங்கியிருப்பார். நாம் ஏன் உடைந்த வண்டியில் (ஓட்டை வண்டியில்) பவனிவருகிறோம்? பணம் இல்லை. தாரளமாகப் பணம் கிடைத்தால் நல்ல வாகனத்தை வாங்கி ஓட்டுவோம். ஆனால் கேட்டால் இராசியான வண்டி என்று பொய் சொல்வோம். எனவே நமக்குத் தேவையான பொருள்களை யாராவது இலவசமாக கொடுத்தால் நாம் கண்டிப்பாக ஆரோக்கியமாக அமைதியாக சந்தோஷமாக நிம்மதியாகத்தான் இருப்போம்.
நம்மிடம் யாராவது அறிவுரை கூறினால் நமக்குப் பிடிக்கிறதா? ஆனால் பொருளுதவி செய்தால் பிடிக்குமல்லவா? ஏனென்றால் நமக்கு நாமே நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணமும் உள்ளது. எந்தெந்தப் பொருள் எவ்வளவு கிடைத்தால் சந்தோஷமாக நாம் இருப்போம் என்று நமக்கே தெரியும். ஆனால் அந்தப் பொருள் கிடைக்கவில்லை என்பதே குறை. அதே போல் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அனைத்து செல்களுக்கும் தம்மைத் தாமே குணப்படுத்திக் கொள்வதற்கும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் தெரியும். அந்த உறுப்புகளுக்கு தேவைப்படும் பொருள்கள் இரத்தத்தில் தேவையான அளவு தரமாக இருந்தால் போதும்,
எனவே இரத்தத்தில் எல்லாப் பொருளையும் நல்ல பொருளாகத் தேவையான அளவு வைத்துக் கொண்டால் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் நோய்களைக் குணப்படுத்தி ஆரோக்கியமாக இருக்கும். தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனி சிகிச்சை கிடையாது. தனித்தனி நோய்களுக்கும் தனித்தனி சிகிச்சை கிடையாது. நமக்கு எல்லாப் பொருளும் இலவசமாக கொடுத்தால் நாம் எப்படி நன்றாக இருப்போமோ அதே போல் செல்களுக்குத் தேவையான எல்லாப் பொருளும் இலவசமாகக் கொடுப்பது நம் வேலை. நோயைக் குணப்படுத்துவது செல்களின் வேலை.
எனவே ஐந்து காரணங்களில் அறிவைக் கொடுப்பது நேரடியாக முடியாது. மனதை ஒழுங்கு படுத்துவது என்பது நேரடியாக முடியாது. இரத்தத்தின் அளவை நேரடியாக நம்மால் சரி செய்ய முடியாது. ஆனால் இரத்தத்தின் எல்லாப் பொருளையும் நல்ல பொருளாக வைப்பது நம் கையில் உள்ளது. எனவே ஐந்து காரணங்களில் இரண்டு காரணங்கள் மட்டுமே நாம் சரிசெய்யவேண்டும். இந்த இரண்டு காரணத்தையும் நாம் சரி செய்தால் இரத்தம் ஊறுவது, மனதைச் சரிபடுத்துவது, உடல் அறிவைச் சரிபடுத்துவது ஆகிய மூன்று வேலைகளையும் உடலே தம்மைத் தாமே செய்து கொள்ளும். எனவே கடைசியாக நாம் புரிந்து கொண்டது என்னவென்றால் இரத்தத்தில் எல்லா பொருளையும் நல்லப் பொருளாக தேவையான அளவு வைப்பதே உலகத்தில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் சிகிச்சை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டோம்.
இனி இரத்தத்தில் எல்லாப் பொருளையும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பது எப்படி என்ற இரகசியத்தை கற்றுக் கொள்வோம். இதை கற்றுக் கொண்டு சரிப்படுத்துவது மூலமாக அனைத்து நோய்களையும் குணப்படுத்தி நாம் ஆரோக்கியமாக வாழ்வோம்.