55
( மண் பிராணன் இரைப்பை, மண்ணீரல், உதடுகள் . கவலை )
இனிப்பு என்ற சுவை நாக்கில் படும்பொழுது சுவை மொட்டுக்கள் மண்
கரண்ட்டாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகிறது. மண் பிராண சக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரைப்பை, மண்ணீரல், மற்றும் உதடுகள். இதற்கும் கவலைக்கும் சம்பந்தம் உண்டு.
நமது உதடும் மண்ணீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். உதட்டில் ஏதாவது புண் ஏற்பட்டால் அதற்குக் காரணம் வயிற்றில் புண் இருக்கும். வயிற்றில் ஏற்படும் உபாதைகளுக்கு உதட்டிலே அறிகுறி தெரியும். எனவே உதட்டில் வரும் நோய்களுக்கு உதட்டில் மருந்து தடவுவதால் நோய் குணமாகாது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதால் மட்டுமே சரிப்படுத்த முடியும்.
கவலைக்கும் மண் பிராணனுக்கும் சம்பந்தம் உண்டு. சிலர் மனதில் கவலை வந்தால் சாப்பிட மாட்டார்கள். பசிக்கவில்லை என்று கூறுவார்கள். ஆனால் உடன் இருப்பவர்கள் நீ ஒன்றுமே சாப்பிடாமல் இருக்கிறாய், சாப்பிடு, சாப்பிடு என்று வற்புறுத்தி உணவைக் கொடுப்பார்கள். இப்படிக் கவலையாக இருக்கும் பொழுது கவலை என்ற உணர்ச்சி உடலில் மண் சம்பந்தப்பட்ட பிராண சக்தியை அதிகமாகக் கவலையை ஈர்த்துக் கொள்வதால் உடலில் ஜீரணத்திற்கான சுரப்பிகள் சுரக்காததால் பசி எடுப்பதில்லை. இப்படிக் கவலையாக இருக்கும் பொழுது உணவைச் சாப்பிட்டால் வயிறு அதிகமாகக் கஷ்டப்பட்டு கவலை அதிகமாகும். எனவே கவலை வந்தால் வயிற்றுக்கு உணவு கொடுக்காதீர்கள். எப்பொழுது பசிக்கிறதோ அப்பொழுது மட்டுமே சாப்பிடுங்கள். நமக்கு எப்பொழுது பசி என்ற உணர்ச்சி இருக்கிறதோ அந்த நிமிடத்தில் உலகத்தில் யாருக்கும் கவலை இருக்கவே இருக்காது. கவலையும் பசியும் எதிரிகள். நம் அனைவருக்கும் குடும்பம், வியாபாரம், பணம், புகழ் போன்ற பல விஷயத்தைப் பற்றி எப்பொழுதும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். இதற்குக் காரணம் வயிற்றை ஒழுங்காக வைத்துக் கொள்ளாதது தான். வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் எந்த விஷயத்திற்கும் கவலை வராது. சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் எவருக்கும் பயம் என்ற உணர்ச்சி வராது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் நபருக்குக் கோபம் வராது. ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் இவர்களுக்கு கோபம், டென்சன் பயம் கவலை ஆகியவை வருவதில்லை. ஏனென்றால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்.