"

56

நம் மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நேரடியாக மனதைக் கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு உடலை ஆரோக்கியமாக்கிக் கொள்வது மூலமாக மனதைச் சுலபமாக அமைதிப் படுத்தலாம். ஆனால் மனநல மருத்துவர் என்ற பெயரில் சில மருத்துவர்கள் நமது பழைய குப்பைகளை மனதிற்குள் கிளப்பி விட்டு மேலும் நம்மை அதிகப்படியான மனநோயாளிகளாக மாற்றுகிறார்கள். இதுவரை நம் வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை அப்படியே விட்டு விட்டு இனிமேல் உடலை ஆரோக்கியமாக வைப்பது மூலமாகப் புதிய கவலை, கோபம், பயம் இல்லாமலும், பழைய விஷயங்களை அழித்தும் நாம் மனரீதியாக ஆரோக்கியமாக வாழ முடியும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். பலர் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருக்கிறீர்களே உங்கள் சர்க்கரை நோய் குணமாகி விட்டதா? எத்தனை வருடகாலம் இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை நோய் குணமாகும் என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள். இப்படிப் பல வருடங்களாக இனிப்பு சாப்பிடாமல் இருந்தும் உங்கள் நோய் குணமாகவில்லையே பிறகு ஏன் இந்த விஷயத்தைக் கடைபிடிக்கிறீர்கள்?

சர்க்கரை நோய்க்கும் இனிப்புக்கும் சம்பந்தமே கிடையாது. நமது சிகிச்சையில் இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும். இனிப்பு என்பது கண்ணிற்குத் தெரியாத ஒரு பொருள். இது நாக்கால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரை என்பது கண்ணிற்கு தெரியும். இது வயிற்றால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரை என்பது வேறு. இனிப்பு என்பது வேறு. இரண்டும் ஒன்றாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. நாம் சாப்பிடுகிற இட்லி, பொங்கல், சப்பாத்தி சாப்பாடு, உருளைக் கிழங்கு போண்டா ஆகிய அனைத்திலும் சர்க்கரை உள்ளது. இட்லியில் சர்க்கரை உள்ளது என்பதை யாராவது மறுக்க முடியுமா? இட்லி இனிக்கிறதா? இட்லி இனிக்கவில்லை என்றால் சர்க்கரை இனிக்காது என்று புரிந்து கொள்ளுங்கள். சப்பாத்தியில் சர்க்கரைதான் உள்ளது. சப்பாத்தி இனிக்கிறதா? எனவே சர்க்கரை இனிக்காது என்று புரிந்து கொள்ளுங்கள்.

இப்படி நாம் சாப்பிடுகிற அனைத்து உணவிலும் சர்க்கரை இருக்கிறது. ஆனால் சில உணவுகள் மட்டுமே இனிக்கின்றன. சில உணவுகள் இனிப்பதில்லை. எனவே சர்க்கரை வேறு, இனிப்பு வேறு என்ற இரகசியத்தை புரிந்து கொள்ளுங்கள். உண்மையிலேயே இட்லி, பொங்கல் சப்பாத்தி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் பொழுது நமக்குச் சர்க்கரையின் அளவு அதிகமாக வேண்டும். ஆனால் இந்த பொருள்களை சாப்பிடும் பொழுது சர்க்கரையின் அளவு அதிகமாவதில்லை. மாறாக இனிப்பான ஒரு பொருளைச் சாப்பிட்டவுடன் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதற்குக் காரணம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டால் இன்று முதல் இனிப்பு சாப்பிட்டே சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்.

இனிப்பில் உள்ள சர்க்கரை ஒன்றும் இரத்தத்தில் கலப்பதில்லை. இனிப்பு என்பது சுவை. இந்த இனிப்பு என்ற சுவை நாக்கில் பட்டவுடன் நாக்கு மண் கரண்ட்டாக மாற்றுகிறது. மண் பிராண சக்தி வயிற்றுக்கு சக்தி கொடுத்து வயிற்றை வேலை செய்ய வைக்கிறது. எனவே நீங்கள் இட்லி, சாப்பாத்தி போன்ற உணவுகள் சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இனிப்பு சாப்பிட்டால் இனிப்பு மண் கரண்ட்டாக மாறி இரைப்பையை வேலை செய்வித்து இரைப்பையில் உள்ள சாப்பாடு, சப்பாத்தி, இட்லி போன்ற நீங்கள் ஏற்கனவே சாப்பிட்ட உணவுகளில் உள்ள சர்க்கரையை இரத்தத்தில் கலந்து விடுகிறது. எனவே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இனிப்பு இரைப்பையை வேலை செய்ய வைக்கும். அவ்வளவு தான். இனிப்பு நேரடியாக சர்க்கரையாக மாறாது. நாம் சாப்பிட்ட பொருளில் உள்ள சர்க்கரை மட்டுமே இரத்தத்தில் கலக்கும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடாமல் இருப்பதால் நாம் சாப்பிடுகிற இட்லி, சாப்பாடு, சப்பாத்தியில் உள்ள சர்க்கரைகள் இரைப்பை ஜீரணம் செய்யாமல் மலமாக அனுப்பி வைக்கிறது. இனிப்பு சாப்பிட்டால் தான் இரைப்பை வேலை செய்யும். இரைப்பை வேலை செய்தால் தான் உணவில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்கும். இரத்தத்தில் சர்க்கரை கலந்தால் தான் நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உணவு கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மேலும் சர்க்கரை நோயைப் பற்றி ஏற்கனவே விரிவாகப் பார்த்திருப்பதால் நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாவதால் எந்த நோயும் வராது. எனவே இது வரை நாம் சாப்பிடுகிற உணவை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று தெரியாமல் அரைகுறையாக ஜீரணம் செய்து சாப்பிட்டதால் இனிப்பு சாப்பிட்டவுடன் கெட்ட சர்க்கரைகள் இரத்தத்தில் கலக்கிறது. இந்த கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் கிடைக்காத தால் தான் சர்க்கரை நோய் வருகிறது. ஆனால் நாம் நமது சிகிச்சையில் உணவில் உள்ள சர்க்கரையை எப்படி நல்ல சர்க்கரையாக மாற்றுவது என்று கற்றுக் கொள்ளப் போகிறோம். எனவே அந்த வித்தையை கற்றுக் கொண்டு சாப்பிடும் பொழுது இனிப்பும் சேர்த்து சாப்பிட்டால் தான் ஜீரண வேலை நடந்து இரத்தத்தில் சர்க்கரை கலக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

தென்இந்தியாவில் மக்கள் அரிசிச் சாப்பாடு அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்.

மருத்துவர்கள் அரிசி உணவு அதிகமாக சாப்பிடுவதால் தான் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிறது எனவே சாப்பாத்தி சாப்பிடுங்கள் என்று அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் வட இந்தியாவில் அனைவரும் சப்பாத்தி சாப்பிடுகிறார்களே அவர்களுக்கும் ஏன் சர்க்கரை நோய் வருகிறது? என்று யோசித்துப் பாருங்கள். வடஇந்திய மருத்துவர்கள் சப்பாத்தி அதிகமாக சாப்பிடாதீர்கள். அதில் சர்க்கரை இருக்கிறது. அரிசி சாதம் சாப்பிடுங்கள் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே நாம் சாப்பிடுவதே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகம் செய்வதற்குதான். அனைத்து உணவுகளிலும் சர்க்கரை உள்ளது. எனவே தயவு செய்து இனிமேல் இனிப்புப் பொருள்களைத் தராளமாக சாப்பிடுங்கள். சர்க்கரை உள்ள பொருட்களை ஆசை தீர சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் வெள்ளை சர்க்கரை என்ற சீனி (°கா) மட்டும் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மற்றபடி நாட்டுச் சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், பஞ்சாமிர்தம், தேன், பலாப்பழம் மற்றும் அனைத்து இனிப்புகளையும் தாரளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளைச் சர்க்கரை மற்றும் வெள்ளைச் சர்க்கரையில் செய்யப்பட்ட உணவை மட்டும் சாப்பிட வேண்டாம். ஏனென்றால் வெள்ளைச் சர்க்கரையில் சல்பர் என்ற கொடிய விஷம் உள்ளது.

இனிப்புக்கும் மண் பிராணனுக்கும் இரைப்பைக்கும் மண்ணீரலுக்கும் கவலைக்கும் உதடுகளுக்கும் சம்மந்தம் உள்ளது என்பதை புரிந்து கொண்ட மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாது என்பது எப்படி ஆரம்பித்தது என்றால் மருத்துவ மனையில் அவசர சிகிச்சையில் இருக்கும் பொழுது நோயாளிக்குக் குளுகோ° டப்பா மூலமாக இரத்தத்திற்குக் குளுகோ° அனுப்புவார்கள். நாம் உணவு சாப்பிட்டு ஜீரணமாகிக் கிடைக்கும் குளுகோஸை நேரடியாக அனுப்பிக் கொண்டிருக்கும்பொழுது நோயாளி சாப்பிடக் கூடாது. இந்த நோயாளி இனிப்பான பொருள்களை சாப்பிட்டால் இரைப்பை ஜீரண வேலை ஆரம்பித்து நன்றாகப் பசி எடுக்கும். அப்பொழுது உணவு அதிகமாகச் சாப்பிடுவார். இப்படி குளுகோ° டப்பா மாட்டியிருக்கும் பொழுது அவர் உணவு சாப்பிட்டால் இரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகும். மேலும் அந்த நேரத்தில் உணவு சாப்பிடத் தேவையில்லை என்பதால் மருத்துவர் இனிப்பு சம்பந்தப்பட்ட பொருளைச் சாப்பிடாதீர்கள் என்று அறிவுரை கூறினார்கள். எனவே மருத்துவ மனையில் குளுகோ° டப்பா நம் உடலில் சென்று கொண்டிருக்கும் பொழுது மட்டுமே இனிப்புச் சாப்பிடக் கூடாது. இப்படிச் சொல்லப்பட்ட ஒரு அறிவுரையை மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகும் நாம் கடைப்பிடிப்பது ஒரு தவறான மருத்துவ முறையாகும்.

எனவே உங்கள் நாக்கு எவ்வளவு இனிப்பைக் கேட்கிறதோ அதை தயவு செய்து சாப்பிடுங்கள். முதலில் ஒரு இனிப்புச் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறது. பரவாயில்லை இரண்டாவது இனிப்புச் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறது பரவாயில்லை. மூன்றாவது இனிப்பைச் சாப்பிடும் பொழுது உங்கள் நாக்கில் திகட்டுதல் ஏற்பட்டால் அதன் பிறகு சாப்பிடக் கூடாது. திகட்டிய பிறகு ஒரு இனிப்புச் சாப்பிடும் பொழுது இது உடலுக்கு நோயை ஏற்படுத்தும். எனவே உங்கள் நாக்கில் எவ்வளவு இனிப்புச் சாப்பிட்டால் மனதிற்குச் சந்தோஷமாக இருக்குமோ அவ்வளவு இனிப்பை சாப்பிடலாம். ஏனென்றால் நாக்கு தான் டாக்டர். சுவைதான் மருந்து. இனிப்பு என்ற மருந்தை நமது நாக்கு என்ற டாக்டர் கேட்கும் பொழுது கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். இப்படி இனிப்புச் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நோய் வரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.