"

63

ஒரு மனிதன் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஆறு மணி நேரம்

அல்லது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று பொதுவாக அனைத்து மருத்துவர்களும் கூறுகிறார்கள். ஆனால் அப்படி நாம் கணக்கு பார்த்து தூங்க வேண்டிய அவசியம் இல்லை.

நாம் பொதுவாக நம் உடலுக்கு மூன்று விதமான வேலைகளைக் கொடுக்கிறோம். ஒன்று உடல் ரீதியான வேலை, இரண்டு மனரீதியான வேலை மூன்று புத்தி ரீதியான வேலை. இதில் எந்தெந்த வேலைக்கும் தூக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு என்று பார்ப்போம்.

ஒரு சிலர் உடலுக்கு மட்டும் அதிக வேலையை கொடுப்பார்கள். மனதிற்கும் புத்திக்கும் அதிகவேலை கொடுக்கமாட்டார்கள். இவர்கள் முதல்வகை, உடல்ரீதியாக வேலை கொடுப்பார்கள். உதாரணமாக கூலி வேலை செய்பவர்கள். இவர்களுக்கு புத்தி இல்லை என்று அர்த்தம் கிடையாது. புத்திக்கு அதிக வேலை இல்லை மனதிற்கும் அதிகமாக வேலை இருக்காது. கூலி வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பியூன் வேலை செய்பவர்கள் அவர்களை நன்றாக கவனியுங்கள். இவர்கள் வா என்றால் வருபவர்கள் போ என்றால் போவார்கள். முதலாளி கொடுக்கும் வேலையை மட்டும் செய்வார்கள் அதிகமாக அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். இப்படி உடல் சார்ந்த வேலையை செய்பவர்கள் ஒருவகை அது முதல்வகை.

இரண்டாவது வகை புத்தி சார்ந்த வேலை செய்பவர்கள். இவர்கள் புத்திக்கு மட்டும் அதிகம் வேலை கொடுப்பார்கள். உடலுக்கும், மனதிற்கும் குறைவாக வேலை கொடுப்பவர்கள். உதாரணமாக முதலாளிகள், ஆராய்ச்சியாளர்கள். இவர்களுக்கு புத்திக்கு மட்டுமே அதிக வேலை கொடுப்பவர்கள். நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு நமது நிறுவனத்தை எப்படி நல்லபடியாக இயங்க வைப்பது? பணம் எப்படி சம்பாதிப்பது, வியாபாரம் எப்படிச் செய்வது? போன்ற யுத்திகளை எப்பொழுது பார்த்தாலும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.

எனவே உடலுக்கு இவருக்கு அதிகமான வேலை இருக்காது. மேலும்

வியாபாரம் செய்யும்பொழுது குறிப்பாக பலர் மனதிற்கு வேலை கொடுத்து மனசாட்சியின்படி நடந்து கொள்வது இல்லை. மனசாட்சியைப் பயன்படுத்தினால் வியாபாரம் ஒழுங்காக நடக்காது. எனவே முதலாளிகள் புத்திக்கு மட்டுமே அதிகம் வேலை கொடுக்கிறார்கள். மனதிற்கும், உடலுக்கும் குறைவாக வேலை கொடுக்கிறார்கள். அதேபோல் ஆராய்ச்சியாளர்கள் (ளுஉநைவேளைவ) எப்பொழுதுப் பார்த்தாலும், புத்திக்கு வேலை கொடுத்துகொண்டே இருப்பார்கள். இவர்களும் உடலுக்கும், மனதிற்கும் வேலை கொடுப்பதே கிடையாது. இப்படிப் புத்திக்கு மட்டும் வேலை கொடுத்து மனதிற்கும், உடலிற்கும் வேலையை குறைவாகக் கொடுப்பவர்கள் இரண்டாவது வகை.

சிலர் மனதிற்கு மட்டும் அதிக வேலை கொடுப்பார்கள். இவர்கள் புத்தியைக் குறைவாகப் பயன்படுத்துவார்கள். மேலும் உடல் உழைப்பும் குறைவாக இருக்கும். யார் யாரெல்லாம் மனதில் சில பிரச்சினைகளை எப்பொழுதுப் பார்த்தாலும் யோசித்துக் கொண்டு கவலை, டென்ஷன், கோபம், பயம் இதுபோன்ற உணர்ச்சி வசப்பட்டு வாழ்பவர்களுக்கு மனதிற்கு மட்டுமே அதிகவேலை இருக்கும். இவர்களுக்கு புத்திக்கும், உடலிற்கும் குறைவாகவே வேலை இருக்கும் இவர்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள்.

மேலே கூறப்பட்டுள்ள மூன்று வகைகளையும் பாருங்கள். இதில் உடலிற்கு வேலை கொடுத்தால் மட்டுமே தூக்கம் தேவைப்படும், தூக்கம் வரும், தூங்க முடியும். மனதிற்கும், புத்திக்கும் வேலை கொடுத்தால் தூக்கம் தேவையில்லை. தூக்கம் வராது. தூங்க முடியாது. உடலுக்குப் கொடுக்கும் வேலையை சரிசெய்வதற்கும் தூக்கம் வேண்டும். மனதிற்கும், புத்திக்கும் கொடுக்கும் வேலையை சரிசெய்வதற்கு தூக்கம் தேவையில்லை. ஆனால் ஓய்வு வேண்டும். ஓய்வு என்பது வேறு. தூக்கம் என்பது வேறு. ஓய்விற்கும், தூக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஓய்வு என்பது மனதை அமைதிப்படுத்தும், புத்தியை அமைதிப்படுத்தும் தூக்கம் என்பது உடலை அமைதிப்படுத்தும்.

புத்திக்கு வேலை கொடுக்கும் ஒரு முதலாளியும் உடலுக்கு அதிகமான வேலை கொடுக்கும் ஒரு தொழிலாளியும், இருவரும் இரவு 10 மணிக்குப் படுக்கைக்கு செல்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உடலிற்கு வேலை கொடுக்கும் தொழிலாளி படுத்தவுடன் அவருக்கு உறக்கம் வந்துவிடும், அவர் தூங்கிவிடுவார். புத்திக்கு வேலை கொடுத்த முதலாளி இரவு 10 மணிமுதல் 1 மணி வரை புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டே இருப்பார். ஆனால் அவருக்கு தூக்கம் வராது. ஆனால் முதலாளி என்ன நினைப்பார். என்னிடம் வேலை செய்யும் ஒரு தொழிலாளி எப்படி நிம்மதியாகத் தூங்குகிறான். என் வங்கியில் கோடிக்கணக்கான பணம் உள்ளது. ஆனால் என்னால் தூங்க முடியவில்லையே என்று அவர் கவலைப்படுவார். இது எதனால் இப்படி நடக்கிறது என்றால், உடலுக்கு வேலை கொடுத்த தொழிலாளிக்கு ஓய்வு தேவையில்லை, ஆனால் உறக்கம் தேவை என்பதால் அவர் உடனே உறங்கிவிடுகிறார். ஆனால் புத்திக்கும், மனதிற்கும், வேலை கொடுத்த முதலாளிக்கு புத்திக்கும், மனதிற்கும் ஓய்வுத் தேவை என்பதால் இரவு 10 மணி முதல் இரவு 1 மணி வரை அவர் புத்தியும் மனதும் ஓய்வு எடுக்கிறது. அதனால்தான் அவர் புரண்டு, புரண்டுப் படுக்கிறார்.

நாம் காலையில் எழுந்தவுடன் நமது புத்தியை மற்றும் மனதைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறோம். அதற்கு சரியான ஓய்வு கொடுப்பதில்லை. இரவு நாம் படுத்தப் பிறகுதான் இது இரண்டும் தன்னைத்தானே ஓய்வுபடுத்தி, சாந்தப்படுத்தி, அமைதிப்படுத்திக் கொள்கிறது. புத்தியும், மனதும் தன்னைத்தானே சரிசெய்துக் கொள்ளும் வரை ஒரு மனிதனுக்கு தூக்கம் வராது.

ஒரு சிறு உதாரணம் ஒரு பெரியதுணிக்கடையில் காலை 9 மணிக்குக் கதவை திறந்து வியாபாரம் ஆரம்பிப்பார்கள். கடையைத் திறக்கும் பொழுது அனைத்து துணிகளும் ஒழுங்காக சரியாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். துணி வாங்க வருபவர்கள் அனைத்து துணிகளையும் கலைத்து தங்களுக்கு தேவையான துணிகளை எடுப்பார்கள். அப்பொழுது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வியாபாரம் நடக்கும் நேரங்களில் துணிகள் கலைந்து கொண்டே இருக்கும். ஆனால் அதை அடுக்கி வைப்பதற்கு நேரம் இருக்காது. இரவு 9 மணிக்கு கடையின் கதவை அடைக்கப்பட்டபிறகு அங்கே வேலை செய்பவர்கள் உடனே வீட்டிற்கு செல்லமுடியாது. குறைந்தது ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரம் காத்திருந்து கலைந்த துணிகளை ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, பின்னர் அவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் அடுத்தநாள் காலையில் கடை சுத்தமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். இதை புரிந்து கொண்டால் தூக்கத்தைப் பற்றி நாம் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

எனவே காலையில் நாம் எழுந்தவுடன், நமது மனதையும், புத்தியையும் கலைத்துப்போட ஆரம்பிக்கிறோம். ஆனால் அடுக்கி வைப்பதே கிடையாது. இரவு 10 மணிக்கு நாம் படுத்தவுடன் நமது மனதும், புத்தியும் தன்னைத்தானே அடுக்கி வைக்க ஆரம்பிக்கிறது. இப்படி மனதும், புத்தியும் தன்னைத்தானே அமைதிப் படுத்தி, ஒழுங்குபடுத்துவதற்கு சில மணிநேரம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில்தான் நாம் தூக்கம் வரவில்லையே என்று பயந்துபோய் புலம்பிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில்தான் நாம் புரண்டு, புரண்டுப் படுப்போம். ஆனால் தூக்கம் வராது. இதை புரிந்து கொள்வதற்கு ஒரு காரியம் செய்யுங்கள். யாருக்கு பல வருடங்களாக படுத்தவுடன் தூக்கம் வராமல் 3 மணி நேரம் புரண்டு, புரண்டுபடுக்கிறார்களோ நீங்கள் ஒரு நாள் 10 அல்லது 20 கி.மீ.தூரம் வரை நடந்து சென்றுபடுத்துப் பாருங்கள். படுத்தவுடன் உங்களுக்குத் தூக்கம் வந்துவிடும். இத்தனை நாட்களாக படுத்தவுடன் தூக்கம் வராத நீங்கள் இன்று எப்படிப் படுத்தவுடன் தூங்குகிறீர்கள் என்பதைச் சற்று யோசியுங்கள். உடலுக்கு வேலை கொடுத்தால் மட்டுமே தூக்கம் தேவை. தூக்கம் வரும். மனதிற்கும், புத்திக்கும் வேலை கொடுத்தால் தூக்கம் தேவையில்லை என்பதால் வருவதில்லை. எனவே படுத்தவுடன் யாருக்குத் தூக்கம் வரவில்லையோ தயவு செய்து மனதில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். தூக்கம் வந்தால் மட்டுமே அதாவது தூக்கம் தேவை என்றால் மட்டுமே நமக்குத் தூக்கம் வரும். தேவையில்லாத தூக்கத்தை நாம் ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். அதற்காக நாம் ஏன் பயப்படவேண்டும்?.

எனவே நமக்கு ஓய்வு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது படுக்கைக்கு செல்லவேண்டும். கண்ணை மூடி படுக்கையில் தளர்வாகப் படுப்பது மட்டுமே நம் வேலை. முதலில் மனதையும், புத்தியையும் ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் இந்த வேலை முடிந்த அடுத்த வினாடி உடலுக்குத் தேவையான தூக்கம் வரும். எப்பொழுது உடலுக்குத் தேவையான தூக்கம் முடிகிறதோ அப்பொழுது நமக்கு விழிப்பு வரும். இப்படிப் படுத்தால் நாமாக தூங்கவேண்டும், நாமாக எழுந்திரிக்க வேண்டும். இப்படி ஒருநாள் தூங்கி எழுந்தால், இதுவே ஆரோக்கியமான நிம்மதியான, அமைதியான ஒழுங்கான தூக்கமாகும்.

ஆனால் நம்மில் பலர் படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றால் ஒரு வேளை க்ஷஞ அதிகமாக இருக்குமோ, ஒரு வேளை சுகர் குறைவாக இருக்குமோ ஒரு வேளை நமக்கு ஏதாவது ஒரு நோய் வந்திருக்குமோ என்று, தேவையில்லாமல் கற்பனை செய்து தேவையில்லாமல் பயப்பட்டு மனதையும், புத்தியையும் மேலும் கலைத்துப் போடுகிறோம். இப்படி தூக்கம் வரவில்லையே என்று நினைத்துப்படுத்திருந்தால் அதுவே ஒரு மிகப்பெரிய நோய். இப்படி நாம் பயப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு படுத்திருக்கும் போது நமது தூக்கம் இன்னும் தள்ளிப்போகிறது. ஏனென்றால், நாம் மனதையும், புத்தியையும் மேலும், மேலும் கலைத்துக் போடுகிறோம். அதை அடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே சற்று யோசித்துப் பாருங்கள். காலை முதல் மாலை வரை நாம் பல இடங்களில் தவறாகப் பேசி இருப்போம். சில விஷயங்களை, மறந்திருப்போம். சில விஷயங்களில் தவறான முடிவு எடுத்திருப்போம். இரவு படுத்தவுடன் இவை அனைத்தும் நமக்கு ஞாபகம் வரும். உதாரணமாக நாம் இன்று ஒருவரை இதுபோல திட்டியிருக்கக்கூடாது. நாம் தவறு செய்துவிட்டோம் என்று இரவு படுத்தப் பிறகுதான் ஞாபகம் வரும். அல்லது புரியும். நாம் இன்று செய்யவேண்டிய வேலையை ஏதாவது மறந்திருந்தால் அதுவும் படுத்தபிறகுதான் ஞாபகம் வரும். இந்த கலைத்துப்போட்ட விஷயங்களை மறந்த விஷயங்களை சரிசெய்யும் வரை நமக்கு தூக்கம் வராது. இதை சரிசெய்து முடித்தவுடன் நாம் தூங்கி விடுவோம். எனவே தயவு செய்து இரவு படுத்தவுடன் யாருக்கு தூக்கம் வரவில்லையோ அவர்கள் பயப்படவேண்டாம். படுத்தவுடன் தூங்குபவர்கள் நாம் உடலுக்கு அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம் என்று சந்தோஷப்படுங்கள். படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் நாம் உடலுக்கு அதிகமாக வேலை கொடுக்கவில்லை, அதைவிட மனதிற்கும், புத்திற்கும் தான் அதிகமாக வேலை கொடுத்திருக் கிறோம், எனவே நமது மனமும், புத்தியும் தன்னைத்தானே ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் தான் தூக்கம் வரவில்லை என்று புரிந்துகொண்டு அமைதியாக இருந்தால் இந்த மனமும் புத்தியும், சீக்கிரமாக அதைச் சரிசெய்து விட்டு சீக்கிரமாக தூக்கம் வந்துவிடும். எனவே தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தூக்கம் என்பது நமக்கு ஏற்கனவே தெரியும். ஓய்வு என்றால் தூங்காமல் மனதையும், புத்தியும் அடுக்கிவைக்கும் நிலை என்று பொருள். இந்த ஓய்வை கீடிநக்கண்ட முறையில் நாம் எடுக்கமுடியும்.

ஒன்று: படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொள்ளலாம். தூங்க வேண்டிய அவசியம் இல்லை. புரண்டு, புரண்டு படுத்தாலே போதும். ஓய்வு கிடைத்துவிடும். இரண்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டு கண்களை மூடி அமைதியாக அமர்ந்திருக்கலாம்.

மூன்று : நாற்காலியில் அமர்ந்து கொண்டு முன்னால் இருக்கும் டேபிள் (கூயடெந) அல்லது ஏதாவது ஒரு இடத்தில் நம் தலையை தாங்கி வைத்துக் கொண்டால் சிறப்பாக ஓய்வு எடுக்க முடியும். அல்லது இரண்டு கால்களை நீட்டி சுவற்றின் ஓரமாக நேரடியாக முதுகை சுவற்றில் நேரடியாக வைக்காமல் ஏதாவது ஒரு தலையணை அல்லது விரிப்பை பயன்படுத்தி சாய்ந்து அமர்ந்து கழுத்தை தொங்க போட்டுக் கொண்டால் ஓய்வு கிடைக்கும்.

நாம் இங்கு ஓய்வு, ஓய்வு என்று பார்த்துக் கொண்டிருக்கும் விஷயம் தான் தியானம் என்று அழைக்கிறார்கள். தியானம் என்று வார்த்தையைப் பயன்படுத்தும்பொழுது ஏதோ ஆன்மீக வாதிகளும், பொழுது போகாதவர் களும், வயதானவர்களும் செய்வது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஓய்வுக்கு மற்றொரு பெயர்தான் தியானம். எனவே தியானம் செய்யும்பொழுது நம்முடைய மனதும், புத்தியும் ஓய்வு எடுக்கிறது. எனவேதான் தியானம் செய்பவர்களுக்கு படுத்தவுடன் தூக்கம் வருகிறது. நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்று யாராவது கூறினால் நீங்கள் ஒழுங்காக தியானம் செய்யவில்லை என்று அர்த்தம்.

ஆனால் பலர் இரவு படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றால் பயப்பட்டு நமக்கு ஏதோநோய் வந்துவிட்டது என்று எண்ணி மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கிறார்கள். மருத்துவர்களும், தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல் தூக்க மாத்திரை கொடுக்கிறார்கள். இப்படி யார் தூக்க மாத்திரையைச் சாப்பிட்டு தூங்குகிறீர்களோ அப்பொழுது புத்தியும் மனதையும் அடுக்கி வைக்கும் வேலையை செய்வதே கிடையாது. தூக்க மாத்திரை மூலமாக ஒரு மனிதனுக்கு ஓய்வு கிடைக்காது. ஆனால் தூக்கம் கிடைக்கும். எனவே யார் யாரெல்லாம் ஓய்வு எடுக்கும் நேரத்தில் தூக்க மாத்திரை மூலமாக கிடைக்கும் தூக்கத்தை அனுபவிக்கிறீர்களோ உங்கள் மனதும் புத்தியும், அடுக்கி வைக்காமலேயே இருக்கும் இப்படி பல மாதங்களாக தூக்க மாத்திரையை நீங்கள் சாப்பிட்டு வந்தால் பல மாதங்களாக மனதையும், புத்தியையும் அடுக்கி வைக்காமல் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

எனவே தூக்க மாத்திரை மூலமாக தூங்கும் அனைவரும் என்னை பொருத்தவரை ஒரு மனரீதியான நோயாளிகள். அவர்களுக்கு தைரியம் இருக்கவே இருக்காது. எந்த முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. எப்பொழுதும் மனதில் ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். எனவே தயவுசெய்து தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தக்கூடாது. உடலுக்கு தூக்கம் தேவையில்லை என்று ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பொழுது நாம் ஏன் தேவையில்லாமல் தூக்கத்தை வேண்டும் என்று நினைக்க வேண்டும். ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துக்கொள்ளுங்கள். நம் உடலுக்கு என்ன வேண்டுமோ அது உடனே கேட்டுக் பெற்றுக்கொள்ளும். நமது உடலே வேண்டாம் என்று நினைக்கும் பொழுது நாம் தூக்கத்தைக் கொடுத்தால் அந்த தூக்கம் விஷமாக மாறும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

தூக்கம் வரவில்லை என்று கவலைப்படுகிறீர்களே அதற்கு நான் சில

வழிமுறைகளை சொல்கிறேன். உங்களால் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். தினமும் இரவு மதுபானங்கள் சாப்பிடுவதால் நன்றாக தூங்கலாம். செய்வீர்களா? அபின் போன்ற போதை பொருளை பயன்படுத்தினால் நன்றாக தூங்க முடியும் அதை நீங்கள் பயன்படுத்துவீர்களா?

இப்படி நான் உங்களுக்கு ஆலோசனை சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. என்னை திட்டுவீர்கள். அல்லது போலீஸிடம் ஒப்படைப்பீர்கள்.

ஆனால் மருத்துவர்கள் என்ற பெயரில் நீங்கள் யாரிடம் சென்றாலும் தூக்கத்திற்காக கொடுக்கும் அனைத்து மருந்து மாத்திரைகளிலும் ஆல்கஹால், கஞ்சா, அபின் போன்ற போதை பொருள் மட்டுமே உள்ளது. தூக்க மாத்திரைகளை போதைப்பொருள் இல்லாமல் செய்யவே முடியாது.

உண்மையில் யார் யாரெல்லாம் தூக்கமாத்திரை சாப்பிட்டு தூங்குகிறார்களோ நீங்கள் போதைப் பொருளை சாப்பிடுகிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். பீடி, சிகரெட், சாராயம், கஞ்சா, அபின் போன்றவைகள் எப்படி போதை பொருள்களோ, அதைவிட தூக்க மாத்திரைகள் மிகப்பெரிய போதைப்பொருள் என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

உங்களது தூக்க மாத்திரையின் டோ° போக போக அதிகரித்துக் கொண்டே போகும். இதன் காரணம் என்னவென்றால், குடிமக்கள் ஆரம்பத்தில் குவார்ட்டர் குடிப்பவர்கள் நீங்கள் போக போக ஆஃப், ஃபுல் என்று குடிக்கிறார்களே அதைப்போல நீங்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகிறீர்கள். சிறிய போதை உங்களுக்கு பத்தாமல் மேற்க்கொண்டு பெரிய போதையைத் தேடிச் செல்வீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். எனவே தயவு செய்து தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். தூக்கமாத்திரை மூலமாக ஒரு மனிதனின் உடலுக்கு எந்த நன்மையும் என்றுமே விளைவது கிடையாது. அது நமது நோயை அதிகப் படுத்துமே தவிர குறைய வைக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே தூக்கம் ஒருநாள் வரவில்லையென்றால் தூங்கவேண்டிய அவசியமில்லை. இப்படி ஒருநாள் அல்லது இரண்டு நாள் தூக்கம் வராமல் இருந்தால் கவலைப்படாதீர்கள். மூன்றாவது நாள் இரண்டு நாள்களுக்கு சேர்த்து மொத்தமாக நீங்கள் தூங்கிவிடுவீர்கள். உடலுக்கு அறிவு உள்ளது. கண்டிப்பாக எதுவேண்டுமோ அதை நம்மிடம் இருந்துக் கேட்டுக் பெற்றுக்கொள்ளும். எனவே தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் நமது சிகிச்சை முறைப்படி அனைத்து முறைகளையும் கடைப்பிடித்தால் ஒவ்வொரு மாதமும் உங்கள் தூக்க மாத்திரையின் டோஸை குறையச் செய்து, நான்கு மாதத்திற்குள் முழுவதுமாக விட்டுவிட்டு நிம்மதியாக வாழ்க்கை முழுவதும் வாழலாம். வாழ்வோம். ஆரோக்கியமாக.

1. அலாரம் வைத்து எழுந்திருக்கக் கூடாது.

நம்மில் பலருக்கு அலாரம் வைத்து எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும். காலையில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நிம்மதியாக உடல் முழுவதும் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அலாரத்தின் சத்தம் வேகமாக அடிக்கும்பொழுது நாம் திடீரென எழுந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இப்படி அலாரத்தின் மூலமாக நம் தூக்கம் கலையும்பொழுது நமது உடல் பாதிப்பு அடைகிறது. நமது உடலில் ஒருவிதமான டென்ஷன் ஏற்படும். அந்த டென்ஷன் அந்த நாள் முழுவதும் நமக்கு இருக்கும். எனவே தயவு செய்து அலாரம் வைத்து எழுந்திருக் காதீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை அலாரம் அடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும். நீங்கள் ஒரு இரண்டு மணிநேரம் அதிகமாகத் தூங்கி இருப்பீர்கள் அல்லவா?. அப்பொழுது என்ன அர்த்தம் நம் உடலிற்கு மேற்கொண்டு இரண்டு மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது என்று அர்த்தம். நம் உடலிற்கு தூக்கம் தேவைப்படும் பொழுது அந்த தூக்கத்தை தூங்காமல் அதை கட் செய்து எழுந்திரித்தால் அந்த தூக்கத்தை யார் தூங்குவது?. தினமும் நாம் அலாரம் வைத்து இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தைக் கட் செய்தால் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் மொத்தமாக தூங்க வேண்டியிருக்கும்.

எனவே தயவு செய்து அலாரம் பயன்படுத்தாதீர்கள். நாங்கள் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும். அலாரம் இல்லாமல் எப்படி எழுந்திருப்பது? என்று சிலர் கேள்வி கேட்கலாம். காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று அனைவரும் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் சீக்கிரம் படுக்கவேண்டும் என்று இதுவரை யாரும் பிரச்சாரம் செய்வதே கிடையாது. இரவு சீக்கிரமாகப் படுத்தால் மட்டுமே காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க முடியும். நாம் கூ.. அல்லது சினிமா படங்கள் போன்றத் தேவையில்லாத காரியங்களை இரவு 1 மணி வரை அல்லது இரண்டு மணி வரை பார்த்துவிட்டு காலதாமதமாகப் படுப்பது நமது தவறு. இரவு இரண்டு மணிக்கு யார் படுத்தாலும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? எனவே இரவு தாமதமாகப்படுத்தால் காலையில் தாமதமாகத்தான் எழுந்திருக்க வேண்டும். எனவே நாம் எந்த நேரங்களில் எழுந்திருக்க வேண்டுமோ அதற்கு தகுந்தாற்போல் நாம் ஒரு 8 மணி நேரம் முன்பாக நாம் படுக்கைக்குச் செல்லவேண்டும். எனவே அலாரம் பயன்படுத்துவது ஆபத்து என்பதைப் புரிந்து கொண்டு தினமும் பயன்படுத்தாமல் எப்போதாவது அவசரக் காலத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மனதில் அதிகம் குழப்பம் இருந்து இரவு நீண்ட நேரமாக தூக்கம் வராதவர்களுக்கு ஒரு சுலபமான வழி உள்ளது. படுத்து ஓய்வு எடுத்தால் ஓய்வு மெதுவாகத்தான் கிடைக்கும். ஆனால் அமர்ந்து உட்கார்ந்து ஓய்வு எடுத்தால் ஓய்வு சீக்கிரமாக கிடைக்கும். எனவே படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள். நீங்கள் நேரடியாக படுக்காமல் அமர்ந்து முதுகுக்கு சப்போர்ட் கொடுத்து ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து தலைக்கு சப்போர்ட் கொடுத்து கண்களை மூடி அமைதியாக காலை நீட்டியோ அல்லது சம்மணம் இட்டு அமர்ந்து தூங்க ஆரம்பியுங்கள். அமர்ந்துகொண்டு தூங்கினால் அல்லது தூங்க முயற்சி செய்தால் மனதும், புத்தியும் மிகவிரைவாக அடுக்கி வைத்துவிட்டு உடனே உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.

தூக்கம் சரியாக வரவில்லை என்று கவலைப்படுபவர்கள் உங்களது ஆள்காட்டி விரலின் மேல்பகுதியை உச்சந்தலையில் தடவிக்கொடுப்பதன் மூலமாக நன்றாக தூங்கமுடியும். இந்த இடத்திற்கு அக்குபங்சர் மருத்துவத்தில் னுரு20 என்று கூறுவார்கள். வர்ம சிகிச்சையில் கொண்டை கொள்ளி என்று கூறுவார்கள். இன்றும் கிராமங்களில் ஒரு குழந்தைக்கு ஏதாவது வியாதி வந்தால் ஒரு பாட்டி வைத்தியம் செய்வார்கள். பூக்கட்டும் வெள்ளை நூலை ஒரு அடி அல்லது இரண்டு அடிக்கு எடுத்து அதை வாயில் வைத்து பந்துபோல் உருட்டி எச்சில் கலந்து குழந்தைகளை அமரவைத்து குழந்தையின் உச்சந்தலையிலிருந்து இரண்டு அடி அல்லது நான்கு அடி உயரத்திலிருந்து அந்த தாய் வாயில் உள்ள எச்சில் கலந்த நூல் உருண்டையை துப்புவதால் அந்த உருண்டை நேரடியாக உச்சந்தலையில் படும்பொழுது அந்த ஒரு வினாடி தொடுவதன் மூலமாக குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று, நோய்கள் குணமாகும் என்று பல கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

சிலர் கிராமங்களில் அந்த எச்சில் கலந்த பந்து உருண்டையை உச்சந்தலையில் ஒட்டி வைத்து விடுவார்கள். எனவே உச்சந்தலை என்பது 72,000 நாடி, நரம்புகள் சங்கமிக்கும் இடம். இந்த இடத்தில் நாம் சக்தியை செலுத்துவதன் மூலமாகவும் மசாஜ்செய்வதன் மூலமாகவும் தொட்டு தடவுவதன் மூலமாகவும் அல்லது நினைத்து பார்ப்பதன் மூலமாகவும் 72,000 நாடி, நரம்புகளை நாம் அமைதிப்படுத்த முடியும். எனவே இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லையென்றால் உச்சந்தலையை உங்களுக்கு நீங்களாகவே தடவிக் கொடுத்து தூங்கிக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு நோய் இருந்தாலோ அல்லது தூக்கம் வராமல் அழுதுக்கொண்டு இருந்தாலோ உச்சந்தலையைத் தடவிக்கொடுத்தால் அந்த குழந்தைக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

நமது கையில் உள்ள சுண்டு விரலையும், கட்டை விரலையும் தவிர மற்ற மூன்று விரல்களின் நுனிகளால் நமது தாடைக்கு கீழே உள்ள எழும்பில் லேசாக தடவிக் கொடுப்பதன் மூலமாக உடலில் தூக்கத்திற்கு தேவையான சுரப்பிகளை சுரக்கமுடியும். நமது வீடுகளில் குழந்தைகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருப்பார்கள். நடந்துகொண்டு படிக்கும்பொழுதும், அமர்ந்துக்கொண்டு படிக்கும் பொழுதும்,அவர்கள் தூங்கமாட்டார்கள். ஆனால் குப்புறப்படுத்து இரண்டு மணிக்கட்டுகளையும் தாடைக்கு கீழே சப்போர்ட் கொடுத்து, எப்பொழுது படிக்க ஆரம்பிக்கிறீர்களோ கண்டிப்பாக அரைமணி நேரத்திற்குள் நன்றாக தூக்கம் வந்து, அவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு தூங்கிவிடுவார்கள். எனவே நமக்கு தூக்கம் வரவில்லை என்றால், குப்புறப்படுத்து கண்களை மூடி நமது இரு மணிக்கட்டுகளையும் தாடைக்கு சப்போர்ட் கொடுத்து சினிமா படங்களில் நடிகைகள் படுத்திருப்பது போல காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருந்தால் சீக்கிரமாக தூங்கிவிடுவீர்கள்.

2. டீ, காபி, போதைப் பொருட்களை சாப்பிட கூடாது.

டீ, காபி மற்றும் போதைப் பொருள்கள் தூக்கத்திற்கு, எதிரி. புகைப்பிடித்தல் மது அருந்துதல் மற்றும் பல போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களுக்கு தூக்கம் ஒழுங்காக வராது. இந்த போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தாமல் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காது. உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்காது. இந்த போதைப் பொருள்கள் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் என்பதை நமக்கு ஏற்கனவே நன்றாக தெரிந்திருக்கும் என்பதால் அதைப்பற்றி இங்கு அதிகமாக கூற விரும்பவில்லை. டீ மற்றும் காபி குடித்தாலும் தூக்கம் கெட்டுப்போகும் என்பதைப்பற்றி நாம் பார்க்கப்போகிறோம். நமக்கு தூக்கம் வரவேண்டும் என்றால் மூளைப் பகுதியில் செரடோனின் மற்றும் டோப்பாமின் என்ற சுரப்பிகள் சுரக்கவேண்டும். இந்த சுரப்பிகள் சுரந்தால் மட்டுமே நமக்கு தூக்கம் வரும்.

டீ என்ற தேயிலையில் டேனின் என்ற நச்சுப்பொருளும், காபி என்ற பொருளில் காஃபின் என்ற நச்சுப் பொருளும் உள்ளது. இந்த இரண்டும் நம் உடலுக்குள்ளே செல்லும்பொழுது நேரடியாக மூளைப்பகுதிக்குச் சென்றுத் தூக்கத்திற்கான சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஏற்கனவேத் தூக்கத்திற்காக சுரந்த அந்தத் திரவங்களை மூத்திரம் வழியாக வெளியே அனுப்புகிறது. இப்படி டீ, காபி குடித்துத்

தூக்கத்தைத் தள்ளிப்போடுவதால் நமது உடல் ஆரோக்கியம் கெடுகிறது. சுமாராக ஒரு கப் டீ அல்லது காபி சாப்பிட்டால் குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை நமக்கு தூக்கத்திற்கான சுரப்பிகள் உடலில் சுரக்காது. அது நீங்கள் சாப்பிடும் °டாரங்கை பொருத்திருக்கிறது.

நமக்கு மாலை 6 மணிக்கு லேசாக தூக்கம் வருவதுபோல இருக்கும். ஆனால் நாம் படுத்து தூங்கமாட்டோம். தூக்கம் வருவதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டால் என்ன அர்த்தம். மூளைக்குள் தூக்கத்திற்கான சுரப்பிகள் சுரந்துவிட்டது என்பது அர்த்தம். ஆனால் நாம் நமக்கு இருக்கும் அற்ப வேலைகளுக்காக ஒரு டீ அல்லது காபி சாப்பிட்டுத் தூக்கத்தை துரத்திவிட்டு பின்பு அந்த காரியத்தைச் செய்கிறோம். பிறகு இரவு 8மணிக்கு உணவு அருந்திவிட்டு பின்பு 9 மணிக்குப் படுத்து தூக்கம் வரவில்லையே, தூக்கம் வரவில்லையே என்று நாம் கவலைப் படுகிறோம்.

எப்பொழுது மாலை 6 மணிக்கு டீ அல்லது காபி சாப்பிடுகிறீர்களோ அதன் °ட்ராங்கைப் பொருத்து உங்கள் தூக்கம் பல மணி நேரத்திற்கு வராது. இதைப் புரிந்துக் கொள்ளாமல் டீ, காபி சாப்பிடுவதால் தூக்கம் தடைபடுகிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் நாம் தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டு மேலும் பல நோய்களை நாம் சம்பாதித்துக் கொள்கிறோம். எனவே ஒரு நாளில் நீங்கள் 5 டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் கண்டிப்பாக உங்களுக்குத் தூக்கத்தில் பிரச்சினை இருக்கும். எனவே தூக்கம் இல்லாமல் கவலைப்படும் நபர்கள் தயவு செய்து டீ, காபி மற்றும் போதைப் பொருளில் இருந்து வெளியே வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

டீ, காபி எந்த ஊரில் விளைகிறதோ அந்த ஊர்மக்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். உதாரணமாகத் தேயிலைகள் குளிர்ச்சியான பிரதேசத்தில் மட்டும்தான் விளையும். குளிர்ச்சியான பிரதேசத்தில் டீ, காபி சாப்பிட்டால் உடலில் நோய்கள் வராது. ஏனென்றால் குளிர்ச்சியான பிரதேசங்களில் நம் உடலுக்கு உஷ்ணம் போதுமான அளவு இருக்காது. நாம் சோம்பேறித் தனமாக இருப்போம். எந்த வேலையும் செய்வதற்கு விருப்பம் இருக்காது. எனவே அப்பொழுது டீ, காபி சாப்பிட்டால் அதிலுள்ள கசப்பு, சுவை மற்றும் அதிலுள்ள அந்தப் பொருள்கள் நம் உடலை ஊக்குவித்து, வேகமாக வேலையைச் செய்ய வைக்கும். எனவே எந்த ஊரில் டீத்தூள், காபித்தூள் விளைகிறதோ அந்த ஊர் மக்கள் சாப்பிடுவதால் தவறு ஏதும் இல்லை. ஆனால் அது விளையாத ஊர்களில் நாம் அதைச் சாப்பிடுவதால் அது உடலுக்கு நோயை உண்டு செய்கிறது. சைனாவில் சாப்பிட்டவுன் குறைவான அளவில் பால் இல்லாத வரக்காப்பி அல்லது வரட்டீ சாப்பிடுவார்கள். அதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். அவர்கள் அஜிரணத்திற்காக இப்படிச் சாப்பிடுகிறார்கள். எனவே நாமும் தேவைப்பட்டால் மிகவும் குறைவாக 1/4 டம்ளர் டீ அல்லது காப்பியை பால் இல்லாமல் வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் பயன்படுத்தலாம். இரண்டு (சிப்) வாய் சாப்பிட்டால் மருந்து. ஆனால் ஒரு டம்ளர் சாப்பிட்டால் விஷம்.

உங்கள் ஊரில் அதிகமாக எந்த உணவு வகை காய்கறிகள், பழங்கள் விளைகிறதோ அது உங்களுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் உணவாகக் கருதுங்கள். சில நாடுகளில் அரிசி அதிகமாக விளையும், சில நாடுகளில் கோதுமை அதிகமாக விளையும். அப்பொழுது நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த நாட்டு மக்கள் அரிசிச் சாதத்தைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள். அந்த நாட்டு மக்கள் கோதுமையைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஏனென்றால் கடவுள் யோசிக்கிறார் கடவுள் ஒரு மிகச்சிறந்த புத்திசாலி அவர் எந்த நாட்டு மக்கள் எந்த ஊர் மக்கள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை அவர் முடிவு செய்கிறார். எனவே உங்கள் ஊரில் அதிகமாக விளையும் அல்லது குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்களை தாராளமாகச் சாப்பிட்டால் நம் உடலில் ஆரோக்கியம் அதிகமாகும்.

ஆனால் நாம் ஆப்பிள், பிளம்° போன்ற குளிர் பிரதேசத்தில் விளையும் பழங்களை மற்ற ஊர்களுக்குச் சிரமப்பட்டு எடுத்துவந்து அதிக விலை கொடுத்துச் சாப்பிடுகிறோம். குளிர் பிரதேசங்களில் உள்ள மக்கள் கடினமான பொருள்களாகிய சப்பாத்தி, புரோட்டா, சாப்பாடு போன்றவற்றைச் சாப்பிட முடியாது. சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது என்பதற்காக அந்த ஊரில் இது போன்ற மென்மையான உணவுகள் உற்பத்தியாகின்றன. இது அந்த நாட்டு மக்களுக்குப் பொருந்தும். ஆனால் மற்ற

ஊர்களுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் ஆசைக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் அது நாம் செலவு அதிகமாக செய்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள். அதேபோல் ஆ°திரேலியாவில் விளையும் ஒரு கோதுமையைக் கொண்டு வந்து மற்ற நாடுகளில் ஓட்° என்று சாப்பிடுவதும் இந்த நாட்டில் விளையும் கோதுமையைக் கொண்டு சென்று ஆ°திரேலியாவில் வேறு பெயர் சொல்லி விற்பதும், நகைச்சுவையாக உள்ளது.

எனவே தயவு செய்து ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி என்று ஒரு பொருள் வெயில் காலத்தில் மட்டுமே அதிகமாக விளைச்சல் கொடுக்கும். மக்கள் வெயிலில் வாடுகிறார்கள் என்பதற்காக இறைவன் அந்த நேரத்தில் இந்தப் பழங்களை அனுப்பி வைக்கிறார். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள் காய்கறி, பழங்கள் கடைக்குச்சென்று இப்பொழுது எந்த சீஷன் எந்த பழம் எந்தக் காய்கறி அதிகமாக விளைகிறதோ அதை வாங்கி உங்கள் வீட்டில் பயன்படுத்தினால் செலவும் மிச்சமாகும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

படுத்தவுடன் யாருக்குத் தூக்கம் வரவில்லையோ நீங்கள் இந்த நாளை ஒழுங்காக வாழவில்லை என்ற அர்த்தம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மனதிற்குப் பிடித்தாற்போல சந்தோஷமாக, ஆனந்தமாக வாழ்க்கையை நாம் வாழ்ந்தால் கண்டிப்பாகப் படுத்தவுடன் தூக்கம் வரும்.

நாம் புதிய விஷயங்களை இன்று எவ்வளவு கற்றுக்கொண்டிருக்கிறமோ அந்த அளவுக்கு நமது தூக்கம் நன்றாக இருக்கும். எனவே தினமும் ஏதாவது புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலமாகவும் நாம் நிம்மதியாக தூங்க முடியும்.

எனவே தூக்கம் வரவில்லை என்றால் இரவு கடைசியாக எல்லா காரியத்தையும் முடித்துவிட்டு தூங்குவதற்கு முன்பாக சம்மணம் இட்டு அமர்ந்து முதுகை நேராக வைத்துக்கொண்டு, கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து சின் முத்திரையில் தொடைக்கு மேலே கைகளை வைத்துக்கொண்டு கண்களை மூடி நன்றாக மூச்சை உள்ளே இழுத்து ம்என்ற அதிர்வில் மெதுவாக உங்கள் மூச்சுக்காற்றை மூக்கின் வழியாக வெளியே செலுத்தும்பொழுது ம்என்ற சப்தத்துடன் மெதுவாக உங்களால் எவ்வளவு நேரம் கஷ்டப்படாமல் சொல்ல முடியுமோ அவ்வளவு நேரம் உச்சரியுங்கள். எப்பொழுது காற்று வெளியே முழுவதும் சென்று விட்டதோ மீண்டும் மூச்சுக்காற்றை மெதுவாக உள்ளே இழுத்து மீண்டும் ம்என்ற வார்த்தையை உச்சரித்தால் இந்த ம்என்ற உச்சரிப்பு நேரடியாக தலைப்பகுதி முழுவதும் குறிப்பாக மூளைப்பகுதி முழுவதும் சென்று இந்த அதிர்வு அங்கே உள்ள அனைத்து செல்களுக்கும் சிறந்த இரத்த ஓட்டமும் பிராண சக்தியைக் கொடுத்து விரைவாக உங்கள் புத்தியையும், மனதையும் சரிசெய்து ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவிசெய்யும்.எனவே இரவு படுப்பதற்கு முன்பு குறைந்தது 50 முறை ம்என்ற சப்தத்தைக் கொடுத்து தியானம் செய்து பின்னர் தூங்குவதால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு நமது வாழ்க்கையில் சாதாரண சின்ன சின்ன விஷயங்களை நினைத்துக்கொண்டு இருக்காமல் அதைச்சற்று ஓரமாக வைத்துவிட்டு ஆன்மீகப் புத்தகங்களை ஒரு கால் மணி நேரம் அல்லது அரைமணி நேரம் படித்து பின்னர் படுப்பதன் மூலமாக நிம்மதியான தூக்கம் தூங்கலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பு எந்த விஷயத்தைப்பற்றி யோசித்துக்கொண்டு

தூங்குகின்றீர்களோ அதே விஷயத்தைப் பற்றிக் காலை எழுந்தவுடன் ஞாபகம் வந்தது என்றால், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்று அர்த்தம். இரவு யோசித்த விஷயம் இரவு முழுவதும் உங்கள் மூளையில் திரும்ப திரும்ப வட்டமடித்து கொண்டிருந்தால்தான் நீங்கள் காலை எழுந்தவுடன் அந்த விஷயத்தை ஞாபகம் படுத்திருக்கிறீர்கள். எனவே இப்படி யார் தூங்குகிறார்களோ உங்களுக்கு தூக்கம் சம்பந்தப்பட்ட வியாதி இருக்கிறது. மேலும் முடி கொட்டிவிடும் மற்றும் அனைத்து மனரீதியான நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நாம் ஆரோக்கியமாக தூங்கினோமா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் நாம் ஒவ்வொரு முறை காலை எழுந்திருக்கும் பொழுதும் நான் யார்? நான் எங்கே இருக்கிறேன் இன்று என்ன நாள், என்ன கிழமை என்பதை நீங்கள் ஒரு சில நிமிடம் யோசித்தால் மட்டுமே தெரியவேண்டும். அந்த அளவுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்பொழுது நமக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தினமும் 2 மணி அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை மூடி குறைந்தது ஒரு நிமிடம் அல்லது 2 நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும். அதாவது அமைதியாக சும்மா இருக்கவேண்டும். இப்படியிருந்தால் அந்த 2, 3 மணி நேரத்திற்கு முன்பாக கலைத்துப்போட்ட மனதையும், புத்தியையும் அந்த 2 நிமிடத்தில் நமது மனம் அடுக்கி வைத்துவிடும். இதனால் தான் பல ஆ°ரமங்களில் ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரங்களில் தியானம் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். ஐந்து வேலை தொழுகும் ஒரு இ°லாமியர்க்கு தூக்கம் கண்டிப்பாக நன்றாக வரும். அதேபோல் பிரம்மகுமாரிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை ஒரு நிமிடம் கண்களை மூடி தியானம் செய்வார்கள். இவர்கள் அனைவரும் நன்றாக தூங்குகிறார்கள். இவர்களுக்கு மனதில் புத்தியில் எந்த குழப்பமும் இருக்காது. மிகவும் தெளிவாக இருப்பார்கள். எனவே உங்கள் மனதையும், புத்தியையும் தெளிவாக வைத்துக்கொள்ள தேவைப் பட்டால் அருகில் உள்ள பிரம்மகுமாரிகள் என்ற அமைப்பிற்கு சென்று சில பயிற்சிகளை எடுப்பதன் மூலமாக நீங்கள் உங்கள் மனதையும், புத்தியையும் ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

3. ஏன் வடக்கே தலை வைத்து படுக்க கூடாது?

அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் உள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா சக்திகளும் நம் உடலில் உள்ளது. இதில் காந்த சக்தியும் அடக்கம். நம் உடலில் தொப்புளுக்கு மேலே வடக்கு திசையாகவும், தொப்புளுக்கு கீழே தெற்கு திசையாகவும் உடல் காந்தம் வேலைசெய்து வருகிறது.

ஒரே அளவுள்ள இரண்டு காந்தத்தை வடக்கு திசைகளை ஒன்று சேர்க்க முடியாது. விலகிச் செல்லும். ஆனால் வேறு வேறு திசைகளைச் சேர்த்தால் ஒட்டிக்கொள்ளும்.

நாம் வடக்கே தலை வைத்து படுத்தால், நம் உடலின் வடக்கு திசையும் பூமியின் வடக்கு திசையும் இணையும் போது ஒட்டுவது இல்லை. எனவே இரவு முழுவதும் நம் காந்தத் தன்மையில் விலகும் செயல் நடக்கிறது. எனவே நிம்மதியாகத் தூங்க முடியாது, இரத்த ஓட்டம் சீராக இருக்காது. எனவே உடலுக்கு நோய் வரும். எனவே வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது.

தெற்கே தலைவைத்துப் படுத்தால் நம் வட திசையும் பூமியின் தெற்கு திசையும் நன்றாக ஒட்டிக்கொள்ளும். எனவே நிம்மதியான தூக்கம் வரும். எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

புது மாப்பிள்ளை தெற்கே தலைவைத்து படுக்க வேண்டும்என கேரளாவில் பாட்டிமார்கள் கூறுவார்கள். ஏனென்றால் புது மாப்பிள்ளைகள் குறைந்த நேரமே தூங்குவார்கள். இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் அல்லவா? அதனால்.

கர்ப்ப காலத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும்போது அம்மாவின் காந்த சக்தி தொப்புளுக்கு மேலே வடக்காகவும், தொப்புளுக்கு கீழே தெற்காகவும் இருக்கும். ஆனால் குழந்தைக்கு தொப்புளுக்கு மேல்பகுதி தெற்காகவும், தொப்புளுக்குக் கீழ் பகுதி வடக்காகவும் இருக்கும். இப்படி இருந்தால்தான் குழந்தையின் தலை மேல் நோக்கி இருக்க முடியும்.

பத்தாவது மாதத்தில் குழந்தை வெளியே வருவதற்கு சற்று முன்னால் இந்தக் காந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அதாவது குழந்தையின் தொப்புளுக்கு மேல் வடக்காகவும், கீழே தெற்காகவும் மாறும். இந்த மாற்றம் ஏற்பட்ட உடனே குழந்தையின் தலைப்பகுதியான வடக்குத் திசை அம்மாவின் தெற்குப் பகுதியான கால் பகுதியை நோக்கி திரும்பும். அதனால்தான் தலை திரும்புகிறது.

எனவே தயவுசெய்து வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது. தெற்குத் திசை மிகவும் நல்லது. வாழ்வோம் ஆரோக்கியமாக.!

4. வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?

நம் உடலின் வெப்பநிலை 37க்ஷ்ஊ ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும். எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும். எனவே உடலில் தசைநார்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும். மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆ°துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும்.

தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது வெறும் தரையில் செய்யக்கூடாது.

5. இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

இரவில் நன்றாகத் தூக்கம் வரவில்லை. என்ற கவலை உள்ளவர்கள். இரவு சாப்பிட்ட பின் குறைந்தது ஙூ மணிநேரம் கழித்துப் பற்களைத் துலக்கிவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.

ஆனால் இரவு பல் துலக்கிய பிறகு பால், உணவு பண்டங்கள் என எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏதாவது உணவு மீண்டும் சாப்பிட்டால், மீண்டும் பல் துலக்க வேண்டும்.

எனவே தூக்கத்தைப் பொறுத்தவரை எப்பொழுது தூக்கம் வருகிறதோ அப்பொழுது படுக்கவேண்டும். படுத்தவுடன் தூக்கம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டாம். உடலே தானாக தூங்கும், உடலே தானாக எழுந்திருக்கும். இப்படி இயல்பாக நம் உடல் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அவ்வளவு மணி நேரம் நாம் தூக்கத்தைக் கொடுத்தால் உடலில் ஆகாயம் சம்பந்தப்பட்ட அனைத்து சக்திகளும் சரியாக பெற்று அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. வாழ்வோம் ஆரோக்கியமாக. !

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.