77
செவி வழித் தொடு சிகிச்சை எனும் அனாடமிக் தெரபி என்பது வெறும் ஞானம் மட்டுமே. இந்த சிகிச்சைக்கும் எந்தவொரு மருந்து, மாத்திரை, பொருட்களுக்கும் சம்பந்தம் கிடையவே கிடையாது. இந்த சிகிச்சையில் ஒரு நோயாளி தன்னைத் தானே எப்படி தன் நோயை இயற்கை முறையில் எந்தச் செலவும் இல்லாமல் எந்த மருத்துவரையும் சந்திக்காமல் தன் நோயைத் தானே குணப்படுத்துவது என்பதைப் பற்றி புரிய வைப்பது மட்டுமே சிகிச்சை. ஆனால் பல நாடுகளில், பல ஊர்களில் வியாபார நோக்கத்தில் சிலர் அறுசுவைப் பொடி, தண்ணீரைச் சுத்தப்படுத்தும் அட்டைகள், யோகா மேட், ஆர்கானிக் பொருட்கள், சோப்பு, சீப்பு, கண்ணாடி என 300-க்கும் மேற்பட்ட பொருட்களை நம் அனுமதி இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறார்கள். எனவே நீங்கள் எந்த மருந்தையும், எந்தப் பொருளையும் வாங்கி அதனால் வரும் பின் விளைவுகளுக்கு நாம் பொறுப்பில்லை என்பதைத் தெளிவாகத் தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.
இந்த செவி வழித் தொடு சிகிச்சை முறைகளை தயவு செடீநுது மற்றவர்களுக்குக் கற்று கொடுங்கள். நீங்கள் ஆசிரியர்களாக இருந்தால் மாணவர்களுக்குத் தயவு செய்து கற்றுக்கொடுங்கள். “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற எண்ணம் உள்ளவர்கள் நமது னுஏனு–களை ளுயவநடடவைந மற்றும் டுடிஉயட ஊயடெந கூஏ–களில் இலாப நோக்கமில்லாமல் சேவை மனப்பான்மையுடன் இதை ஒளிபரப்பலாம். அப்படி கூஏயில் ஒளிபரப்புவதால் பல லட்சம் பேருக்கு அது உபயோகமாக இருக்கும். எனவே விருப்பமுள்ளவர்கள் நம்மிடம் அனுமதி பெற்று கூஏ–களில் ஒளிபரப்பலாம். மேலும் செய்திதாள்கள் மற்றும் றுநளெவைந போன்ற ஊடகங்களில் இதைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதால் உலக மக்கள் பயன் பெறுவார்கள். உங்கள் நண்பர்களுக்கு நு–ஆயடை மூலமாக நமது வெப்சைட்டைத் தெரியப்படுத்தலாம், அல்லது உங்கள் இடத்தில் கூஏ மற்றும் ஞசடிதநஉவடிச மூலமாக நமது னுஏனு களை ஒளிபரப்பி பலருக்கு இந்த விஷயத்தைத் தெரியப்படுத்தலாம்.’
இந்தப் புத்தகத்தில் நோய்களுக்கான காரணம் ஐந்து என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் நோய்களுக்கான காரணம் ஆயிரம் உள்ளது. அதில் முக்கியமான ஐந்தை மட்டுமே, இந்த காலக் கட்டத்தில் நாம் தவறு செய்யும் அந்த 5 காரணத்தை மட்டுமே தெளிவுபடுத்தி உள்ளோம். உண்மையில் நோய்க்கான காரணங்கள் பல உள்ளன. உதாரணமாக மனது கெட்டால் நோய் வரும். புத்தி கெட்டால் நோய் வரும் நமது ஆழ்மனதில் உள்ள பதிவுகள் மூலமாக நோய் வர வாய்ப்புள்ளது. ஆன்மீக சக்தி குறைவதால் நோய்கள் வரும் . உயிர்ச் சக்தி குறைவதால் வரலாம். ஆரா என்ற சூட்சம உடல் அதன் சக்தியை இழப்பதன் மூலமாக நோய் வரலாம். நமது உடலுக்கு வெளியே உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களில் மாசு ஏற்படும்பொழுது மனிதர்களுக்கு நோய் வரலாம். கிரகங்கள் தன் நிலையை மாற்றும் பொழுது நோய் வரலாம். மனதில் தோன்றும் எண்ணங்கள் சரியில்லை யென்றால் வரலாம். னுசூஹ, சுசூஹ ஜீன்ஸில் ஏற்படும் கோளாறுகள் மூலமாக வரலாம். இப்படி நோய்க்கான காரணங்கள் அடுக்கிக் கொண்டே போக முடியும். இருந்தாலும் இந்த புத்தகத்தில் முதல் ஐந்து விஷயத்தைப் பற்றி மட்டுமே தெளிவாகக் கூறியுள்ளோம்.
இந்தப் புத்தகம் வருடத்திற்கு ஒரு முறை பல மாற்றங்களுடன் பல தெளிவுகளுடன் வெளிவர உள்ளது. ஏனென்றால் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. எனவே இன்று நாம் புரிந்த விஷயங்களை வைத்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நாமும் தினமும் பல குருநாதர்களைச் சந்தித்துப் பல ஆராய்ச்சிகள் செய்து இந்தச் சிகிச்சையை மெருகுப்படுத்தவும், மேலும் தெளிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டு செய்து கொண்டே இருக்கின்றோம். எனவே இந்த புத்தகத்தை படித்தவர்கள் ஒவ்வொரு வருடமும் புதுப் பதிவை வாங்கி மேலும்
பல விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த வருடம் 2013-ல் வரும் புத்தகத்தில் ஆழ்மனம், ஆழ்மன ஆன்மா, ஆரா போன்ற பல விஷயங்கள் பற்றி மிகவும் தெளிவான விளக்கங் களுடன் புத்தகம் வெளிவர உள்ளது.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அறிவார்ந்த பெருமக்கள் இந்தப் புத்தகத்தில் ஏதாவது குறையோ, தவறோ, இருந்தால் தயவு செய்து நமக்குத் தெரியப்படுத்துங்கள். நல்ல விஷயத்தை உலக மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டுமென்ற நோக்கம் மட்டுமே நமக்கு உள்ளது. எனவே தயவு செய்து நல்ல புத்தகங்களை நல்ல றுநளெவைந ஐனு களை நல்ல ஊனு, னுஏனு களை யாராவது வைத்திருந்தால் தயவு செய்து அதை நமக்கு அனுப்பி வையுங்கள். நாம் அதை படிப்பதன் மூலமாகத் தெரிந்து கொள்வதன் மூலமாக உலக மக்களுக்கு நல்ல விஷயத்தை எடுத்து செல்ல முடியும். இனி வரும் கல்வித்திட்டத்தில் பள்ளிகளில், கல்லூரிகளில் இது போன்ற உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான முறைகளைத் தயவு செய்து இந்தப் புத்தகத்தை படிக்கும் கல்வி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு இதைப் பாடப் புத்தகத்தில் சேருங்கள்.
நமது உடலைக் கூட ஒழுங்காக வைத்துக்கொள்ளத் தெரியாமல். 2-ம் உலகப் போர் எப்பொழுது நடந்தால் நமக்கென்ன? கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்ததைத் தெரிந்து கொள்வதால் என்ன இலாபம்? இப்பொழுது கூஏகளிலு ம், பள்ளிகளிலும், பொது அறிவு நிகழ்ச்சி என்ற ஒரு போட்டி நடக்கின்றது. அந்தப் போட்டியில் குழந்தைகளை அமர வைத்து ஜப்பானின் தலைநகரத்தின் பெயர் என்ன? கென்னடி என்று பிறந்தார்? 2-ம் உலகப்போர் எப்பொழுது நடைபெற்றது? இது போன்ற அவசியமில்லாத கேள்விகளுக்குப் பதில் சொல்லி விட்டு அதற்குப் பெருமையாக நாமும் பொது அறிவு அதிகமாக இருக்கின்றது என்று பீற்றி கொள்கிறோம். ஆனால் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்முடன் இருக்கும் உடல், மனம், புத்தி, உயிர் என்ற விசயத்தைப் பற்றி கேள்வி கேட்கும்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்றுமே தெரியாமல் விழி பிதுங்குகிறோம். எனவே தயவு செய்து நல்ல விஷயங்களைப் பாடப் புத்தகத்தில் சேர்க்குமாறு அரசையும், அரசு அதிகாரிகளையும் காலில் விழுந்து மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
இது போன்ற நல்ல விஷயங்களை உலகத்தில் பலர் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயங்களை அவ்வளவு சாதாரணமாக யாராலும் புரிந்து கொள்ளமுடியாது. அப்படிப் பல விஷயங்களில் கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்ட இந்த இரகசியங்களை யாரும் மற்றவர் களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. ஒன்று, பலருக்கு இந்த விஷயம் புரிவதில்லை. புரிந்தவர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அப்படிப் புரிந்தவர்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது உலகத்திலுள்ள மருந்து, மாத்திரை கம்பெனிகள் தன் பண
பலத்தால் அந்த நபரை போலி டாக்டர், ளுநஒ சாமியார் என்று கூறித் பல தொல்லைகளைக் கொடுக்கிறார்கள். கொலை மிரட்டல் விடுகிறார்கள். ஏன்? விஷம் வைத்து கொலையே செய்கிறார்கள். இதற்குப் பயந்து நல்ல விஷயத்தை எவரும் வெளியே சொல்வதற்குப் பயப்பட்டு அமைதியாக தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்து விடுகிறார்கள்.
இந்த செவி வழித் தொடு சிகிச்சையில் கூறப்பட்ட அனைத்து விஷயங்களும் புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் கிடையாது. எல்லாம் ஏற்கனவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் ஆயிரத்தில் ஒரு சதவிகிதம் மட்டுமே. ஆனால் இதைத்தான் திருவள்ளுவர், நபிகள், திருமூலர் மற்றும் உலகிலுள்ள பல நாடுகளில் பல மேதைகளும், அறிஞர்களும் பல காலக் கட்டத்தில் பல விதத்தில் கூறியுள்ளார்கள். ஆனால் இப்பொழுது நமக்கு அது புரிவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு கால கட்டத்திற்கு மக்கள் எப்படி ஏமாந்து உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொண்டு எப்படிப் புரிய வைக்கவேண்டும் என்பதை யோசிக்கவேண்டும். இன்று இன்றைய கால கட்டத்தில் அறிவியல் ரீதியாக ஏமாந்து உள்ளார்கள் என்பதால் நாம் அறிவியல் ரீதியாகப் புரிய வைக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இப்பொழுது புரியும் இந்த செவிவழித் தொடு சிகிச்சை ஒரு வேளை 1000 ஆண்டுகளுக்குப் பிறகு யாருக்கும் புரியாமல் போகலாம்.
அப்பொழுது, புதிதாக ஒரு நபர் வருவார். அவர் அந்தக் கால கட்டத்தில் எப்படிப் புரிய வைக்க வேண்டுமென்பதை புரிந்து கொண்டு விஷயங்களைத் தொகுத்து ஒருவர் கொடுப்பார். எனவே இந்த செவி வழித் தொடு சிகிச்சை என்பது புதிய கண்டுபிடிப்போ, பெரிய இரகசியமோ கிடையாது. ஏற்கனவே இந்து மத வேதங்களிலும், திருமூலர் திருமந்திரத்திலும், திருவள்ளுவர் குறளிலும், நபிகள் நாயகத்தின் நபிகளின் மொழி என்ற புத்தகத்திலும் மற்றும் பல ஆன்மீகப் புத்தகங்களிலும் பல நாடுகளைச் சேர்ந்த பல அறிஞர்களும், ஞானிகளும், இறை தூதர்களும் கூறிய விஷயங்களில் உள்ள தொகுப்புகள் இது.
இந்தப் புத்தகத்தை தயவு செய்து அனைவரும் வாங்கிப் பயன் பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து வாங்கி படிக்க சொல்லுங்கள். இந்த புத்தகத்தை ஓநசடிஒ என்ற நகல் எடுத்து இலவசமாக மற்றவர்களுக்கு கொடுக்கலாம். ஆனால் அனுமதியின்றி வியாபார நோக்கத்தில் நகல் எடுத்தோ அல்லது பிரிண்ட் செய்தோ தயவு செய்து வியாபாரம் செய்யாதீர்கள். அப்படி யாராவது அனுமதியில்லாமல் பிரிண்ட் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். நல்ல எண்ணத்தில் தயவு செய்து சேவை செய்யுங்கள்.
நாம் ஒரு சாதாரண தொழிற்சாலையில் வேலை செய்யும் பொழுது ஒரு நாள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் சம்பளத்தைப் பிடிக்கிறார்கள் ஒரு நாள் ஒவர்டைம் வேலை செய்தால் சம்பளம் சேர்த்துக் கொடுக்கிறார்கள். 100 பேர் வேலை செய்யும் ஒரு சாதாரண கம்பெனியிலேயே இந்தக் கணக்கு பார்க்கிறார்கள் என்றால் நம்மைப் படைத்த இறைவன் நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கணக்கு வைத்துச் சரியான முறையில் போன° மற்றும் டீகூ களை அதிகமாகவே கொடுப்பார். இதே போல் உலகிலுள்ள அனைத்து மக்களும் அவரவர்க்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் புத்தகமாக வெளியிடவேண்டும் எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் வெளியே கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் இந்த உலகம் ஞான ஒளி பெற்று பிரகாசிக்கும்.
இந்தப் புத்தகத்தை உங்கள் ஊரில் அனைவருக்கும் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் மொத்தமாக எங்களிடம் வாங்கும் பொழுது விலையைக் குறைத்து கொடுக்கமுடியும்.