அனடாமிக் தெரப்பி என்றால் என்ன?
நமக்கு ஒரு நோய் வந்தால் நாம் ஒரு வைத்தியரிடம் போவோம். உலகத்தில் உள்ள எல்லா வைத்தியர்களும் மருந்து, மாத்திரை, ஊசி, அக்குபஞ்சர், நியூரோதெரபி, சித்தா, முத்ரா, மூலிகை, யுனானி, பிராணிக் ஹீலிங், டச் ஹீலிங் அக்குபிரர், மேக்னட் தெரபி, யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் என்று பல வழிகளில் நம்மைகுணப்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் நமது இந்த சிகிச்சையில் எந்த ஒரு மருந்தும், மாத்திரையும் கிடையாது.இரத்தம் டெஸ்ட் செய்ய தேவையில்லை. நாடி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஸ்கேன் எடுக்கத் தேவையில்லை. வாக்கிங் போக வேண்டிய அவசியம் இல்லை. பத்தியமும் கிடையாது. ஆனால் நோய்களைக் குணப்படுத்த முடியும். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், அது எப்படி என்று. இந்த சிகிச்சையில் நாம் யாருடைய
நோயைப் பற்றியும், அதன் பெயரையும் கேட்டுத் தெரிந்து கொள்ளாமலேயே ஒரு நோயைக் குணப்படுத்த முடியும். பொதுவாக நமக்கு ஒரு நோய் வந்தால் மருத்துவரிடம் செல்வோம். அந்த மருத்துவரிடம் குறைந்தது அரை மணி நேரம் நமது நோயின் தன்மையைப் பற்றி விளக்கமாகக் கூறுவோம். அந்த மருத்துவர் பல டெஸ்டுகளை எடுக்கச் சொல்வார். கடைசியில் அந்த நோய்க்கு ஒரு பெயர் வைக்கப்படும். பிறகு அந்த நோயைக் குணப்படுத்த முடியாது. வாழ்க்கை முழுவதும் கன்ட்ரோல் தான் செய்ய வேண்டும் என்று மருந்துகளையும், மாத்திரைகளையும் வழங்குகிறார்கள். ஆனால் நம் சிகிச்சையில் ஒரு நோயாளி தன் நோயைப் பற்றி நம்மிடம் கூறாமலேயே எந்த டெஸ்டும் எடுக்காமலேயே அந்த நோய்களைக் குணப்படுத்த முடியும். அப்படி என்னதான் செய்வீர்கள் என்று கேட்பதற்கு தோன்றும். நாம் ஒரு ஆறு மணி நேரம் தொடர்ந்து பேசுவோம். அதை நோயாளி காது கொடுத்துக் கேட்க வேண்டும். இதுதான் சிகிச்சை. நாம் பேசுவதை நோயாளி கேட்டால் எப்படி நோய் குணமாகும் என்று மீண்டும் ஒரு சந்தேகம் தோன்றும்.
நம் உடலில் ஒரு சுரப்பி உள்ளது. இந்தச் சுரப்பி உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது. அந்தச் சுரப்பியில் ஒரு திரவம் சுரக்கிறது. அந்த திரவம் உலகில் உள்ள நோய்களில் 95 சதவீத நோய்களைக் குணப்படுத்துகிறது. அந்தச் சுரபியின் பெயர் என்ன? அது நம் உடலில் எங்கே உள்ளது ? அது சுரக்கும் திரவத்தின் பெயர் என்ன? அந்த திரவம் எப்படி அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. அதை எப்படி சுரக்க வைப்பது என்ற வித்தை எனக்குத் தெரியும். எனவே அந்த ரகசிய வித்தையை ஒரு நோயாளிக்குக் கற்று கொடுப்பதற்கு சுமார் ஆறு மணி நேரம் தேவைப்படுகிறது.
அப்பொழுது நோயாளி அந்த வித்தையைக் காது வாழியாகக் கேட்டு அதை அவர் புரிந்து கொண்டு செயல்படும்பொழுது அவரின் நோயை அவராகவே குணப்படுத்திக் கொள்கிறார். இப்படி ஆறு மணி நேரம் தொடர்ந்து பேசும் அந்த வியத்தை இப்பொழுது நீங்கள் இந்த புத்தகத்தின் மூலமாக படித்து புரிந்து கொள்ளப் போகிறீர்கள். எனவே புத்தகத்தின் மூலமாக படிக்கும் இந்த சிகிச்சையை கண்வழித் தொடு சிகிச்சை என்றும் கூறலாம்.
இதைப் படிக்கும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிலர் கேட்கலாம் பத்து வருடங்களாக சர்க்கரை நோய் எனக்கு இருக்கிறது. இந்தப் புத்தகத்தை படித்தால் என் சர்க்கரை நோய் குணமாகிவிடுமா ? கண்டிப்பாகக் குணமாகும். இந்தப் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படித்து முடித்த அடுத்த வினாடி முதல் நீங்கள் இனிப்பு சாப்பிடலாம், வாழ்க்கை முழுவதும். அடுத்த வினாடி முதல் உங்களுக்கு சர்க்கரை நோய் என்ற நோய் கிடையாது. அதே போல் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தை படித்த அடுத்த வினாடி முதல் உணவில் உப்பைச் சேர்த்துக் கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு ஒன்றும் ஆகாது.
வாயுத் தொல்லை உள்ளவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்த அடுத்த வினாடி முதல் மூன்று நேரமும் உருளைக்கிழங்கு போண்டா சாப்பிட்டாலும் உங்களுக்கு வாயுத் தொல்லை இருக்காது. கொழுப்புக் கட்டிகள், HDL / LDL போன்ற கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், இந்தப் புத்தகத்தைப் படித்த அடுத்த வினாடி முதல் எண்ணெய் பலகாரமும் தேங்காயையும் தாராளமாகச் சாப்பிடலாம் அது உங்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. நோய்களைக் குணப்படுத்தும்.
தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், காரம் போன்றவற்றை இந்தப் புத்தகத்தை படித்த அடுத்த வினாடி முதல் சாப்பிடலாம் உங்களுக்கு ஒன்றும் ஆகாது வாழ்நாள் முழுவதும்.
எனவே இந்தச் சிகிச்சையில் பத்தியம் கிடையாது. எந்தெந்த நோய்க்கு எதையும் சாப்பிடக்கூடாது என்று கூறினார்களோ அதைச் சாப்பிட்டே நம் நோய்களை குணப்படுத்தலாம். மேலும் நோய்களின் தன்மையும் வீரியத்தையும் பொறுத்து படிப்படியாக 3 மாதம் முதல் 6 மாதத்திற்குள் மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடலாம். சர்க்கரை, B.P. ஆஸ்துமா, தைராய்டு, கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் கன்ட்ரோல் மட்டுமேசெய்ய முடியும் என்று தான் இதுவரை மருத்துவர்கள் கூறி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்தப் புத்தகத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பொறுமையாகப் படிக்கும் நீங்கள் படித்து முடிந்த அடுத்த வினாடி இது போன்ற அனைத்து நோய்களையும் கண்டிப்பாக நீங்களே குணப்படுத்திக் கொள்ளலாம். மிகவும் ஆச்சரியமாக இருக்கும். பலர் அது “சாத்தியமே கிடையாது என்ன உளறுகிறீர்களா‘? என்று கூட மனதில் எண்ணம் வரும். தயவு செய்து இந்தப் புத்தகத்தை ஆரம்பம் முதல் கடைசி வரை, முழுவதும் படிக்காமல் இந்தச் சிகிச்சையைப் பற்றி யாரும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க வேண்டாம். அப்படியாராவது புத்தகத்தைப் படிக்காமல் உங்கள் கருத்துகளை கூறினால் அதை கேட்பதற்கு நாம் தயாராக இல்லை.
நோய்களைக் குணப்படுத்த முடியாது என்று கூறுவதற்கு மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் தேவை இல்லை. குணப்படுத்த முடியும் என்று சொல்லிக் கொடுப்பவர் மட்டுமே மருத்துவர், ஆராய்ச்சியாளர்கள்.
உங்கள் நோயைக்குணப்படுத்தும் மருத்துவர் 60 வயதிற்கு மேலே இருக்க வேண்டும். வெள்ளை தாடி வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்களா? அல்லது பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மட்டுமே நான் நோய்களை குணப்படுத்திக் கொள்வேன் என்று உங்களுக்கு வைராக்கியம் இருக்கிறதா? மருந்து, மாத்திரை சாப்பிட்டுத் தான் நோய்களை குணப்படுத்திக் கொள்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை நமக்கு தேவை என்ன? நமக்கு வந்த நோயை குணப்படுத்தினால் போதும். இந்த புத்தகத்தை முழுவதும் படிப்பது மூலமாக எந்த ஒரு மருந்து, மாத்திரை, இரத்த சோதனை, ஸ்கேன் மற்றும் மருத்துவரின் உதவி கூட இல்லாமல் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கு ஒரு இரகசியம் உள்ளது என்றால் இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்தே ஆக வேண்டும். எனவே நோயாளிகள் இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படித்தால் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் அதை நீங்களே சுலபமாகக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவத் துறையில் உள்ளவர்களும், மருத்துவர்களும் நீங்கள் எந்த மருத்துவத்தைப் படித்து இருந்தாலும், இந்தப் புத்தகத்தை படித்து விட்டால் இனி உங்கள் வாழ்க்கையில் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்று நீங்கள் கூறமாட்டீர்கள். எனவே நம்மைப் பொறுத்தவரை இதை ஒரு நோயாளி படிப்பதைவிட மருத்துவர்கள் படித்தால் அவர்கள் மூலமாகப் பல லட்சம் மக்களுக்கு இந்தச் சிகிச்சை சென்று அடையும் என்று நம்புகிறோம். எனவே மருத்துவர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் படித்த படிப்பை நினைத்து நமக்கு தெரியாதது என்ன இருக்கிறது என்று யோசிக்காமல் புத்தகத்தை முழுவதுமாக படித்த பிறகு தனியாக அமர்ந்து யோசித்து பாருங்கள். உண்மைஉங்களுக்கு புரியும். எனவே யாருக்கு நோய் இருந்தாலும் இந்த புத்தகத்தை முழுவதும் படித்து உங்கள் நோய்களை நீங்களே குணப்படுத்திக் கொள்ளுங்கள்.