"

3

மூக்கு ஒழுகும்பொழுது அதை நிறுத்துவதற்குத் தைலம் மருந்து மாத்திரை அல்லது ஏதாவது ஒரு வித்தை செய்து அதை நிறுத்தினால் என்ன அர்த்தம். நம் கழிவுகளை நாம் உள்ளே வைத்துக் கொள்ள நாம் முயற்சி செய்கிறோம் என்று அர்த்தம். இப்படி மூக்கு ஒழுகுவதற்கு மருத்துவம் செய்தால் சிகிச்சை செய்தால் நாலாயிரம் தூசும் சில நாட்களுக்கு பிறகு நாலு லட்சம் தூசாக மாறும். இப்படி தூசுகள் அதிகரித்தவுடன் மீண்டும் நம் உடலில் இருக்கும் மருத்துவர் சளி என்ற ஒரு சுரப்பியை அழைத்து நோயை குணப்படுத்த கூறுவார். சளி என்பது நமது வீட்டில் தரையில் கறை அதிகமாக இருந்தால் சோப்பு பவுடர் போட்டு கழுவுவது போல நுரையீரலில் இருக்கும் நான்கு இலட்சம் தூசுக்களை கெட்டியாக ஒட்டியிருக்கும் அந்த தூசுகளை சளி என்ற சோப்புப்பவுடர் போட்டு நன்றாக கழுவி மூக்கின் வழியாக வெளியே விடுகிறது. நாம் சளி வரும்போழுதும் உறிஞ்சி உறிஞ்சி அதை உள்ளே தள்ளவே முயற்சி செய்கிறோம். சளி என்பது ஒரு நோய் கிடையாது. சளி என்பது நம் உடல் பார்க்கும் வைத்தியம். சளிக்கு உலகத்தில் ஒரே ஒரு வைத்தியம் என்னவென்றால் நன்றாக சிந்த வேண்டும். இதை விட்டு விட்டு சளியை உள்ளே வைப்பதற்கு ஏதாவது ஒரு வைத்தியத்தை நீங்கள் பார்த்தால் அந்த வைத்தியத்திற்கு பெயர் தான் நோய். ஆனால் நாம் குழந்தைகளுக்கும் நமக்கும் சளி வந்தால் உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். யாராவது மலம் வருகிறது என்று உங்கள் மருத்துவரிடம் சென்று ஐயா எனக்கு மலம் வருகிறது அதை நிறுத்துவதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள் என்று கேட்பீர்களா? எனக்கு மூத்திரம் வந்து கொண்டே இருக்கிறது அதை நிறுத்தவேண்டும் என்ற கேட்பீர்களா? மலம் மூத்திரத்தை போல சளி என்பது வெளியே செல்ல வேண்டிய ஒரு கழிவுப்பொருள். எனவே சளி வரும்பொழுது தயவுசெய்து நன்றாக சிந்துங்கள் இதைத்தவிர சளிக்கு உலகில் சிகிச்சை வேறு கிடையாது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.