10
நமக்கு எப்பொழுதாவது ஒரு முறைதான் வாந்தி வருகிறது. தினமும் வருவது கிடையாது. வாந்தி எப்பொழுது வருகிறது என்று சற்று யோசித்து பாருங்கள். நாம் ஏதாவது கெட்டுப்போன பொருட்களை சாப்பிட்டால் வரும். அளவுக்கு மீறி சாப்பிட்டால் வரும். பசி இல்லாமல் சாப்பிட்டால் வரும். உடல்நிலை சரியில்லாதபொழுது சாப்பிட்டால் வரும். எனவே வாந்தி என்பது என்னவென்றால் நாம் ஒரு கழிவுப்பொருளை கெட்டுப்போன ஒரு உணவை ஒரு ஹோட்டலில் சூடு செய்து கொடுக்கும்பொழுது நமக்கு தெரியாமல் சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் நம் வயிற்றுக்கு ஒரு அறிவு உள்ளது. ஒரு உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் நல்ல உணவாக இருந்தால் மட்டுமே ஜீரணம் செய்யும். கெட்டுபோன உணவுகளை நம் வயிறு ஜீரணம் செய்யாது. நம் வயிற்றுக்கு உள்ள அறிவு நாம் சாப்பிட்ட உணவை நல்லதா? கெட்டதா? என ஆராய்ச்சி செய்யும். நல்ல உணவாக இருந்தால் ஜீரண சுரப்பிகளை சுரக்க வைத்து அதை ஜீரணம் செய்து சிறு குடலுக்குள் அனுப்பும். கெட்டுபோன உணவாக இருந்தால் உடனே ஜீரண சுரப்பிகளை நிறுத்திவிட்டு வாந்தி எடுப்பதற்கு என்று சில சுரப்பிகள் உள்ளது. அதை சுரக்க வைக்க ஆரம்பிக்கும்.
வயிற்றில் உள்ள உணவை நாம் பற்களால் நன்றாக அரைக்காமல் குண்டு குண்டாக சாப்பிட்டு இருப்போம். வாந்தி எடுப்பதற்காக அந்த உணவை கட் செய்து சிறிதுபடுத்தும். மேலும் வயிற்றில் நீரை அதிகரிக்கும். நாம் இரவு சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருப்போம். ஆனால் வாந்தி வரும் பொழுது பாருங்கள் அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் இருக்கும். இந்த நான்கு டம்ளர் தண்ணீர் எங்கு இருந்து வந்தது. நம் வயிறு உடலில் உள்ள அனைத்து உறுப்புகளில் உள்ள தண்ணீரையும் எடுத்து வயிற்றில் ஊற்றி விடும். மேலும் வேகமாக வயிற்றிலிருந்து உணவுக்குழாயிலிருந்து வாயின் வழியாக வெளியே வரும் பொழுதும் உணவுக்குழாயும், வாயும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக லூப்ரிகேசன் எண்ணெய்களை ஊற்றி பத்திரமாக வெளியனுப்ப சில சுரப்பிகளை சுரக்க வைக்கும்.
இப்படி உடல் கெட்டுப்போன உணவை அல்லது தேவையில்லாத உணவை, அளவுக்கு அதிகமான உணவை ஜீரணம் செய்தால் குடல் மற்றும் இரத்தத்தில் கழிவுகள் தேங்கி உடலுக்கு ஆபத்து வரும் என்ற நல்ல எண்ணத்தில் நமது உடலில் உள்ள மருத்துவர் வாந்திக்கான சுரப்பிகளை சுரக்க வைத்து நமக்கு தெரியாமல் நம்மை மீறி ரெடி 1, 2, 3 என்று கூறிவிட்டு நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து வயிற்றில்இருக்கும் கழிவுப் பொருட்களை வாய் வழியாக வேகமாக வாந்தி என்ற ஒரு சிசிச்சை மூலமாக வெளியேற்றுகிறார். நாம் அறிவில்லாமல் சாப்பிட்ட ஒரு கழிவுப் பொருளை நம் வயிறு அறிவுடன் தூக்கி வெளியே வீசும் ஒரு சிசிச்சைக்கு பெயர்தான் வாந்தி. வாந்தி என்பது ஒரு நோய் கிடையாது. வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் சிசிச்சை.
ஆனால் நம்மில் பலர் வாந்தி வருவது போல் இருந்தால் உடனே எலுமிச்சம்பழத்தை எடுத்து மூக்கில் வைத்து நுகர்வார்கள் அப்படி செய்யக்கூடாது. அப்படி செய்தால் எலுமிச்சம்பழத்தில் இருக்கும் அந்த வாசம் மூக்கின் வழியாகஉடலுக்குள் சென்று வாந்தி எடுப்பதை நிறுத்துகிறது. வாந்திக்காக தயார் செய்யப்பட்ட ஒரு கழிவுப்பொருள் தயார் நிலையில் வயிற்றில் இருக்கும்பொழுது அதை ஜீரணம் செய்வதற்காக நாம் ஒரு வேலையைச் செய்தால் இது நம் உடலுக்கு செய்யும் துரோகம் அல்லவா? சிலர் வாந்தி வருவது போல் இருந்தால் ஒரு மருந்து கடைக்குச் சென்று “வாந்தியை நிறுத்துவதற்கு ஏதாவது ஒரு மருந்து கொடுங்கள். மாத்திரையை கொடுங்கள்” என்று சாப்பிடுவார்கள். அப்படி தயவுசெய்து செய்யாதீர்கள். சிலர் சில பாட்டி வைத்தியங்களை கடைபிடித்து வாந்தி வராமல் தடுப்பார்கள்.
வாந்தி எடுத்த பிறகு அதை யாராவது சாப்பிடுவீர்களா? நினைத்துப் பார்ப்பதற்கே எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது. வாந்தி வருவதுபோல் இருக்கும்போது, யார் யாரெல்லாம் மருந்தை மாத்திரையை சாப்பிட்டு வாந்தியை நிறுத்துகிறீர்களோ, அவர்கள் வாந்தி எடுத்து அதை வழித்து சாப்பிடுகிறீர்கள் என்று பொருள். எப்பொழுது நம் வயிறு இது கழிவு பொருள், இது உடலுக்கு தேவையில்லை என்று வெளியே தூக்கி வீச தயாராகிவிட்டதோ அந்த கழிவு வெளியே வந்தே தீர வேண்டும். அந்த வாந்தியை ஜீரணம் செய்வதற்கு நீங்கள் மருந்து மாத்திரையை சாப்பிட்டால், என்னவாகும்? வயிற்றை வாந்தியை ஜீரணம் செய்ய வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்த கழிவு ஜீரணம் செய்து உடலுக்குள் அனுப்பும் பொழுது குடலில் நோய்கள் ஏற்படுகிறது. மேலும் இந்த கழிவுப்பொருளும் இரத்ததில் கலந்து பல உறுப்புகளுக்கு நோயை ஏற்படுத்துகிறது. எனவே புரிந்து கொள்ளுங்கள் வாந்தி என்பது ஒரு நோயே கிடையாது. வாந்தி என்பது நம் உடல் பார்க்கும் ஒரு வைத்தியம் ஆகும்.
வாந்தி என்பதை நோய் என்றும், வாந்தி வந்தால் இதை செய்தால் குணமடையும் என்று கூறினால், அவர் மருத்துவரே கிடையாது. எனவே, வாந்தி வரும் பொழுது உலகத்தில் மிகச்சிறந்த சிசிக்சை ஒன்றே ஒன்றுதான். நன்றாக வாந்தி எடுக்கவேண்டும். உடல் கழிவை தூக்கி வெளியே வீசும்பொழுது அதை நாம் ஏன் தடுக்க வேண்டும். எனவே வாந்தி வரும்பொழுது தயவு செய்து ஓரமாக அமர்ந்து உங்கள் விரலை வாய்க்குள் விட்டால் நன்றாக வாந்தி வரும். வாந்தி எடுத்தவுடன் சாதாரண தண்ணீரை குடித்தால் மீண்டும் வாந்தி வரும். இப்படி உங்கள் வயிற்றிலிருக்கும் கழிவுபொருட்கள் வெளியே வரும் வரைக்கும் தான் வாந்தி வரும். என்றாவது உங்கள் வயிறு வெளியே வந்து விழுந்திருக்கிறதா? கழிவுதானே வெளியே வருகிறது. அது வெளியே சென்றால் நம் உடல் ஆரோக்கியமாகத் தானே இருக்கும். எனவே தயவுசெய்து வாந்தி வரும்பொழுது அதற்கு எந்த ஒரு சிகிச்சையும் செய்யக்கூடாது. வாந்தி என்பதே ஒரு சிகிச்சைதான் என்பதை புரிந்து கொண்டு வாந்தி எடுங்கள். இப்படி வாந்தி எடுத்து வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியே வந்து முடிந்தபிறகு சாதாரண தண்ணீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து கல் உப்பு தேவையான அளவு கலந்து குடிந்தால் ஒரு அரைமணி ஒருமணி நேரத்திற்குள் நம் வயிறு பழைய நிலைமைக்கு திரும்பும். நன்றாக பசிக்கும். இப்படி கழிவை வெளியேற்றிய பிறகு சுத்தம் செய்து பிறகு உணவு சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, வாந்தி வந்து கொண்டு இருக்கும் பொழுது அல்லது வருவது போல் ஒரு உணர்ச்சி இருக்கும்பொழுது எலுமிச்சம்பழம் ஜூ°ஸ் குடிக்கக்கூடாது. வாந்தி எடுத்து முடித்து வயிறு காலியான பிறகு மட்டுமே எலுமிச்சம்பழம் ஜூ° குடித்து வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும்.