16
மூட்டு முழங்கால் வாதம் என்பது என்னவென்றால், ஹெல்பர், கில்லர் என்ற மருந்தை அனுப்பிவிட்டு, சப்ரசர் என்ற ஒரு மருந்தை நம் உடல் அனுப்பாமல் இருந்தால் இந்த கில்லர் என்ற ஒரு மருந்து நோய்க்கிருமியை அழித்த பிறகு, நமது மூட்டு முழங்கால்களையும் அழிக்க ஆரம்பிக்கிறது. இதுதான் ரொமேட்டேட் ஆர்த்தரெட்டீ°ஸ் என்ற நோயாகும். எவர் ஒருவர் உடலில் நாம் மேலே கூறிய ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் அவருக்கும் இந்த ஆர். ஏ. என்ற இந்த நோய் வராது. ஒரு வேளை வந்து விட்டால் இந்த ஐந்தையும் சரிசெய்வது மூலமாக நமது உடல் சப்ர°ஸர் என்ற மருந்தை எப்பொழுது அனுப்புகிறதோ அன்று முதல் அவருக்கு அந்த நோய் குணமாகும்.
எனவே நமது உடலில் ஐந்து விஷயங்களும் சரியாக இருந்தால் நோய்க்கிருமியால் உலகத்தில் உள்ள எந்த ஒரு மனிதருக்கும் நோய் வராது என்பதை புரிந்து கொண்டு நோய்க் கிருமிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து நமது நேரத்தை வீணடிப்பதை விட்டு விட்டு, நமது உடலில் இந்த ஐந்து விஷயங்களும் சரியாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்வது மூலமாக நாம் ஆரோக்கிய மான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.