"

17

நாம் ஒரு அம்மா பெற்றெடுத்த குழந்தை, உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஒரு அம்மாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்கள் ஒரு தாய் எப்படிவு குழந்தை பெற்று கொள்கிறார் ? வாய் வழியாக உணவை சாப்பிடுகிறார், அது உள்ளே சென்று கண், காது, மூக்கு, வாய் போன்ற உடல் உறுப்புகளாக மாறி ஒரு முழு குழந்தை வெளியே வருகிறது. உணவை குழந்தையாக மாற்றியது அம்மாவின் அறிவா ? அம்மாவின் உடல் அறிவா ? என்ற கேள்வி எழுந்தால் இதற்குப் பதில் என்ன? அம்மாவின் அறிவு கிடையாது, அம்மாவின் உடல் அறிவுதானே நாம் பல புத்தகங்களில் படிப்பதன் மூலமாகவு அனுபவத்தின் மூலமாக கிடைப்பது நம் அறிவு, பிறக்கும்போதே நம் உடலுக்கு இருக்கும் அறிவு உடலறிவு, முதலில் நாம் அறிவை இரண்டாகப் பார்க்க வேண்டும். உடல் அறிவு வேறு. நம் அனுபவ அறிவு வேறு.

எந்த அம்மாவாவது உணவை குழந்தையாக மாற்றியது என்னுடைய அறிவு என்று கூற முடியுமா ? முடியாது, உடல் அறிவு மூலமாகத்தான் உணவு குழந்தையாக மாறுகிறது. ஒரு வேளை ஒரு தாய் என்னுடைய அறிவில்தான் நான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று கூறினால் அந்த அம்மாவிடம் ஒரு கேள்வி கேளுங்கள், உடல் உறுப்புகள் அனைத்தையும் படம் வரைந்து பாகத்தை குறிக்க முடியுமா? முடியாது என்று கூறுவார்கள் அல்லவா ? அப்போது உடல்

உறுப்புகள் அனைத்தையும் தெளிவாகத் தெரியாத ஒரு அம்மா உணவை கொண்டு எல்லா உடல் உறுப்புக்களும் ஒழுங்காக இருக்குமாறு ஒரு குழந்தையை எப்படிப் பெற்றெடுக்க முடியும் ?

இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் உணவை சாப்பிடுவது மட்டும்தான் அம்மாவின் வேலை உணவைக் குழந்தையாக மாற்றுவது உடலின் வேலை, னி...றீ., படித்து மேற்கொண்டு நான்கு Pஜு.ம்., வாங்கிய ஒரு அம்மாவும், படிப்பறிவே இல்லாத ஒரு அம்மாவும், பெற்றுக்கொள்ளும் குழந்தைகள் இரண்டும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. இதிலிருந்து என்ன புரிகிறதென்றால், நம் மூளைக்கு புத்தகங்கள், இன்டர்நெட் மற்றும் அனுபவம் மூலமாக கிடைக்கும் அறிவு எவ்வளவு தான் கிடைத்தாலும் அது வேறு, உடலறிவு வேறு, உடலறிவு பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஞானியாகத்தான் இருக்கிறது. நமது அறிவு தான் ஒரு சில நேரங்களில் புத்தசாலித்தனமாகவும். ஒரு சில நேரங்களில் முட்டாள்தனமாகவும் இருக்கிறது.

அப்பொழுது உணவை கண், காது, மூக்கு, வாய் ஆகிய உடல் உறுப்புகளோடு குழந்தையாகப் பெற்றுக் கொடுக்கும் ஒரு உடம்பு எவ்வளவு பெரிய ஞானி என்பதை சிறிது யோசித்துப் பாருங்கள். உலகத்தில் யாராவது ஒரு கருவி கண்டுபிடித்து இருக்கிறார்களா ? உணவை அந்தக் கருவியில் ஒரு பக்கம் அனுப்பினால் அடுத்த பக்கம் ஆண் குழந்தை அல்லது பெண்குழந்தையயன்று வெளியே வருமாறு ஒரு கருவி உலகத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதா ? இல்லையல்லவா ? அந்த மாதிரி ஒரு கருவியை ஒரு வேளை யாராவது கண்டுபிடித்தால் அவருக்கு எவ்வளவு நோபல் பரிசு கிடைக்கும் ? அந்தக் கருவி இதுவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள் இல்லையயன்று சொல்வீர்கள். ஆனால் நான் பார்த்திருக்கிறேன். குழந்தை பெற்றுக் கொண்ட அனைத்து அம்மாக்களும் அந்த கருவிகள் தான், எனவே குழந்தை பெற்றெடுத்த அனைத்துத் தாய்மார்களும் உங்களை நீங்கள் கண்ணாடியில் பார்த்துக் கொண்டு உங்களுக்கு நீங்களே நோபல் பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உணவை கண், காது, மூக்கு, கிட்னி போன்ற உடல் உறுப்புக்களோடு முழு குழந்தையாக பெற்றுக் கொடுக்கும் இந்த உடம்பு எவ்வளவு பெரிய ஞானி, புத்திசாலி, அறிவாளி எவ்வளவு ஆற்றல் இருக்கிறது. இந்த உடம்புக்கு.

உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களை விட அனைத்து ஞானிகளை விட அனைத்து ஆராய்ச்சியாளர்களை விட புத்திசாலிகளை விட மிகப்பெரிய புத்திசாலி நமது உடலறிவு, இவ்வளவு அறிவுள்ள நமது உடம்பு போயும் போயும் சாதாரண சர்க்கரை, இரத்த அழுத்தம். ஆஸ்துமா, தைராய்டு, மூட்டுவலி, முழங்கால் வலி, தலைவலி, கர்ப்பபையில் கட்டி, கேன்சர், எய்ட்ஸ் போன்ற நோய்களை குணப்படுத்த தெரியாது என்றால் ஒத்துக்கொள்ள முடியுமா? நமது உடலறிவு உலகிலுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

ஒரு மனிதனுக்கு ஒரு நோய் வந்துவிட்டது என்றால் அதற்கு காரணம் வேறொன்றுமில்லை. நமது உடலறிவில் ஏதோ ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அந்த

சிக்கலை சரி செய்வது மூலமாக உலகிலுள்ள அனைத்து நோய்களையும் எந்த மருந்து மாத்திரை மருத்துவர் இல்லாமல் கூட நமக்கு நாமே குணப்படுத்தி கொள்ள முடியும். ஒரு அம்மாவின் இரத்தம்தான் குழந்தைக்குப் பல உறுப்புகளாக மாறுகிறது. உணவை குழந்தையாக மாற்றத் தெரிந்த ஒரு அம்மாவின் உடலறிவுக்குக் கண்டிப்பாக

நோய்களை குணப்படுத்த தெரியும்.

ஒரு தாய் எப்படி குழந்தை பெற்றுக் கொள்கிறார் ? கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தை தாயின் உடல் உறுப்புகள் ஒன்று சேர்ந்து அந்த ஒரு செல்லைப் பல கோடி செல்களாக மாற்றி கண், காது, மூக்கு, கிட்னி, கணையம் ஆகிய உடல் உறுப்புகளைச் செய்து முழு குழந்தையாக உருவாக்குகிறது. நமது சமையல் அறையில் சுமார் ஐம்பது வகையான பொருட்கள் உள்ளன. அனைத்து வீட்டு சமையல் அறையிலும் இந்த 50 பொருட்கள் தான் இருக்கும். இந்த 50 பொருட்களை வைத்து 50,000 வகையான உணவுகளை நாம் தயாரிக்கிறோம்.

ஒரு சிறு கற்பனை செய்யுங்கள், சமையலறைதான் இரத்தம். உடலிலுள்ள உறுப்புகள் சமையல் செய்யும் நபர். இரத்தத்திலுள்ள பொருட்கள் சமையலறையில் இருக்கும் பொருட்கள். கர்ப்பப்பையில் உருவாகும் குழந்தையின் உறுப்புகள் உணவு வகைகள். இப்படிக் கற்பனை செய்து பார்த்தால் நம் உடலைப் பற்றி நாம் எளிமையாக புரிந்து கொள்ள முடியும், சமையல் செய்யும் நபராகிய உடல் உறுப்புகள் இரத்தம் என்ற சமையலறைக்குச் சென்று அங்கேயுள்ள கால்சியம், இரும்பு, சோடியம் போன்ற பொருட்களை எடுத்து கண், காது, மூக்கு போன்ற உறுப்புக்களை உருவாக்கி குழந்தையை உருவாக்குகிறது. நாம் சமையலறையில் சென்று வெந்தயம், அரிசி, கோதுமைபோன்ற பொருட்களை எடுத்து இட்லி, தோசை, பொங்கல் ஆகிய உணவுகள் செய்வது போல நம் உடல் செய்கிறது.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.