"

20

ஒரு அம்மா ஐந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார். அப்பொழுது என்ன அர்த்தம் ? ஒரு தாய் தன் உடலறிவைக் கொண்டு ஐந்து புது இருதயங்கள் செய்து கொடுக்கிறாள். ஐந்து கல்லீரல், பத்து கிட்னி, பத்து கண்கள் செய்து கொடுக்கிறாள். எப்போது ஒரு தாய் உணவைக் கொண்டு பலவகையான உறுப்புகளைப் புதிதாக உருவாக்கி கொடுக்கிறாளோ அவளொரு புது உறுப்புகளைச் செய்யும் தொழிற்சாலை போல் இல்லையா ? ஒரு தாய்க்கு இருதயத்தில் ஓட்டையயன்று வைத்துக் கொள்வோம். மருத்துவர் திடீரென்று ஓட்டை வந்துவிட்டது. இதை ஆறு மாதத்தில் அடைக்க வேண்டும் இல்லையயன்றால் உயிருக்கு ஆபத்தென்று கூறுகிறார்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், புதிதாக ஐந்து இதயத்தைஉருவாக்கிக் கொடுக்க அறிவு இருக்கும் உடலுக்கு இந்த தாயின் உடலிள்ள ஒருஇருதயத்தில் உள்ள சிறு ஓட்டையை அடைக்கத் தெரியாதா? என்ன பிரச்சனையயன்று பார்ப்போம்.

சில வி­யங்களை சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மை. இருதய ஓட்டை என்ற நோய் இருதயம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. அதாவது இருதய ஓட்டையை அடைப்பதற்கு உடலுக்கே தெரியும். ஆனால் அதற்கு சில தடைகள் உள்ளன. அந்த தடைகள் என்ன என்பதை கண்டறிந்து அதை சரி செய்தால் எந்தவொரு மருந்து மாத்திரை ஆப்ரே­ன் இல்லாமலே கூட இருதய ஓட்டையை அடைக்க முடியும்.

உண்மையிலேயே இருதய ஓட்டையை அடைப்பதற்கு உடலுக்கு தெரியும் அதை அடைப்பதற்குத் தேவையான ஒரு பொருள் இரத்தத்தில் கெட்டுப்போய் இருக்கும் பொழுது இந்த கெட்டுப் போன பொருளை எடுத்துச் சென்று இருதய ஓட்டையை அடைக்க முயற்சி செய்கிறது. ஆனால் ஓட்டை அடைவதில்லை. இப்பொழுது சொல்லுங்கள். இருதய ஓட்டை என்பது இருதயம் சம்பந்தப்பட்ட நோயா ? அல்லது இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுபோன நோயா ? இருதயத்தில் சிகிச்சை செய்வீர்களா ? அல்லது இரத்தத்தில் சிகிச்சை செய்ய வேண்டுமா? நம் இந்த செவிவழித் தொடு சிகிச்சை மூலமாக இரத்தத்தில் கெட்டுப் போன அந்த பொருளை நல்ல பொருளாக மாற்றுவதற்கு சில முறைகள் கற்றுக் கொடுக்கிறோம். அந்த முறைகளைக் கற்றுக்கொண்டு அந்த பொருளின் தரத்தை சரி செய்தால் எந்தவொரு செலவும் இல்லாமல் ஆப்ரே­ன், மருந்து மாத்திரை இல்லாமல் கண்டிப்பாக இருதய ஓட்டையை அடைக்க முடியும் இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் . ஒரு வேளை இருதயத்தை அடைக்க ஒரு பொருள் தேவைப்படுகிறது. அந்தப் பொருள் இரத்தத்தில் இல்லை அல்லது குறைவாக உள்ளது என்றால் உடல் அந்தப் பொருள் இல்லை என்பதால் இருதய ஓட்டையை அடைக்காமல் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. என்றாவது ஒரு நாள் அந்தப் பொருள் இரத்தத்தில் வரும் பொழுது நாம் இருதய ஓட்டையை அடைக்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. இப்பொழுது சொல்லுங்கள் இது இருதயம் சம்பந்தப்பட்ட நோயா ? அல்லது இரத்தத்தில் ஒரு பொருள் இல்லை என்பது சம்பந்தப்பட்ட நோயா ? நாம் இல்லாத ஒரு பொருளை இரத்ததில் எப்படி வைப்பது என்பதை இந்த சிகிச்சையில் தெளிவாக கற்றுக் கொள்ளப்போகிறோம். அப்படி கற்றுக் கொண்டு அதை யார் சரி செய்கிறார்களோ அவர்களின் இருதய ஓட்டை தானாக அடையும்.

மூன்றாவது காரணம் . இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும்பொழுது நம் உடலில் எந்த நோய்களையும் குணப்படுத்தாது எந்த உறுப்புகளையும் புதுப்பிக்காது. நாம் ஏற்கனவே பார்த்தது போல ஒவ்வொரு மனிதனுடைய வயது, எடை, உயரம் இதைப் பொறுத்து இரத்தத்திற்கு ஒரு அளவு உண்டு. இந்த அளவு குறையும் பட்சத்தில் நமது உடலிலுள்ள உறுப்புகளைசரி செய்வது தடைபடுகிறது. எனவே மூன்றாவது காரணம் இரத்தத்தின் அளவை ஒழுங்காக வைத்து கொள்வது எப்படியயன்பதை இந்த சிகிச்சை மூலமாக கற்றுக் கொள்ள போகிறோம். அதை கற்றுக் கொண்டு சரி செய்தால் சுலபமாக இருதய ஓட்டையை அடைக்கலாம்.

நான்காவது காரணம். உங்கள் இருதயம் வலிக்கிறது, மருத்துவமனைக்குச் செல்கிறீர்கள் சந்தேகத்தில் °கேன் எடுக்கக் கூறுகிறார். அந்த °கேன் ரிப்போர்ட்டில் எந்த ஓட்டையும் கிடையாது, ஆனால் அந்த மருத்துவமனையில் வேலை செய்யும் நர்° உங்கள் ரிப்போர்ட்டை எடுத்து வருவதற்குப் பதிலாக வேறு ஒருவருடைய இருதயத்தில் ஓட்டை உள்ள ஒரு ரிப்போர்ட்டைத் தவறுதலாக எடுத்து வந்து மருத்துவரிடம் கொடுத்துவிட்டார். என்று வைத்துக் கொள்ளுங்கள். இப்போது என்ன நடக்கும். உங்கள் மருத்துவர் அந்த தவறான °கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து உங்களிடம் கூறுவார் உங்கள் இருதயத்தில் ஓட்டை உள்ளது 6 மாதத்திற்குள் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது முதல் தூங்கும்போது சாப்பிடும் போது மற்றும் வேலை செய்யும் போது இல்லாத இருதய ஓட்டையை பற்றியே கவலைப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள். இப்படி 3 மாதங்கள் கவலைப்பட்டு பிறகு ஒரு °கேன் செய்து பார்த்தால் உண்மையிலேயே அங்கு ஓட்டை இருக்கும், எப்படியென்றால் மனது ஓட்டையை உற்பத்தி செய்யும். உண்மையிலேயே மனதிற்குத்தான் முதலில் நோய் வருகிறது, பின்புதான் உடலுக்குச் செல்கிறது. இல்லாத ஓட்டையை கற்பனை செய்து பார்க்கும் பொழுது மனது ஒரு ஓட்டையை இருதயத்தில் உற்பத்தி செய்கிறது.

உங்களுக்கு ஆச்சாரியமாக இருக்கும் ! மனசு எப்படி ஓட்டையை ஏற்படுத்துமென்று, ஒரு உதாரணம் நாம் சாதாரணமாக சிறுநீர் போகும் பொழுது நம் உடம்பிலுள்ள எந்த ளுறவைஉh –ஐ அழுத்தி சிறுநீர் வெளியேற்றுகிறோம்? எந்த ளுறவைஉh ம் இல்லை இல்லையா? பாத்ரூமிற்குள் சென்றவுடன் மனதால் சிறுநீர் என்கிற ருசiயேசல க்ஷடயனனநச டீயீநn ஆகி சிறுநீர் வருகிறதல்லவா? இதை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. மனதிற்கு தான் முதலில் நோய் வருகிறது, மனம்தான் உடலில் நோயை உற்பத்தி செய்கிறது.

நிறைய படித்தவர்களைக் குணப்படுத்துவது மிக, மிகக் கடினம், ஏனென்றால் இப்பொழுது மருத்துவ சம்பந்தப்பட்ட மற்றும் நோய் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் மனதை பயமுறுத்தி நோயை அதிகப்படுத்துகிறது. ஆனால் படிப்பறிவில்லாத ஒருவரை குணப்படுத்துவது மிக, மிக சுலபம். எப்படியென்றால் படிப்பறிவில்லாத ஒருவரை அழைத்து வந்து ளுரபயச கூநளவ செய்து உங்களுக்கு 400 இருக்கிறதென்று கூறினால் என்ன செய்வார்? சாமி எனக்கு 400 இருக்கா? நன்றி சாமி அப்படின்னுட்டு அவர் கிளம்பி சென்று சந்தோஷமாக இருப்பார், ஏனென்றால் சுகர் 400 இருந்தால் ஆபத்தென்று அவர் படிக்கவில்லை, ஆனால் நிறைய படித்தவர்கள் ளுரபயச கூநளவ செய்வதற்கு முன்னால் சந்தோஷமாக இருப்பார்கள் ஆனால் கூநளவ சுநயீடிசவ ல் 300 ஐ பார்த்தவுடனே என்னது முன்னூறா? என்று மனதிற்கு எப்போது புரியுதோ அதன் பிறகு தான் மயக்கம் வருகிறது, மனதில்தான் நோய் மனசு கெட்டால் உடம்பு கெடும், உடம்பு கெட்டால் மனசு கெடும் எந்த ளுஉயn சுநயீடிசவ லும் எந்த க்ஷடடிடின கூநளவ லும் மனசு எப்படியிருக்குமென்று யாராலும் சொல்ல முடியாது.

இந்த மனசு பத்தி தெரிஞ்சுக்காம, பேசாம, சிகிச்சை கொடுக்காம, உலகத்தில் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது, இருதயத்தில் நோய் வந்துவிட்டது, அதை ஆபரேஷன் செடீநுதுதான் குணப்படுத்த முடியும் என்று எப்போது நீங்கள் நம்புகிறீர்களோ இனி உங்கள் இருதயம் உங்கள் ஓட்டையை அடைக்காது, உலகத்தில் இதுவொரு முக்கியமான சைக்காலஜி. நாம் யாரை நம்பினோமோ அந்த நம்பிக்கைக்காக அவங்க வேலை செஞ்சு நமக்கு உதவி செய்யறாங்க. அதைப் போல உடம்பை யாரு நம்பி எந்த நோய் வந்தாலும் என் உடம்புக்கு அறிவிருக்கிறது. அது கண்டிப்பாக குணப்படுத்தும் என்று சும்மாயிருந்தால் பல நோய்கள் விரைவாக குணமாகின்றன.

ஆனால் இப்போதிருக்கும் மருத்துவம் சம்பந்தப்பட்ட அறிவு, இன்டர்நெட், புத்தகங்கள், டி.வி, பேப்பர் மூலமாகப் படித்து அதன் மூலம் நம் மனதைப் பாதித்து அந்த மனப் பாதிப்பு நமது உடலில் நோயை ஏற்படுத்துகிறது, இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மனசு பாதித்தால் இருதய ஓட்டை அடையாது.

ஐந்தாவது காரணம் நம் உடம்பிற்கு அறிவிருக்கு அந்த அறிவு கெட்டுப் போனாலும் இருதய ஓட்டை அடையாது, நம் உடம்பிற்கே இருதய ஓட்டை அடைக்கத் தெரியும், அந்த அறிவும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது, ஆக மொத்தம் இருதய ஓட்டை என்ற நோய் இருதயம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.

1. இரத்தத்தில் இருதய ஓட்டையை அடைப்பதற்கு தேவையான ஒரு பொருள் கெட்டுப் போயிருந்தால்.

2. இரத்தத்தில் ஓட்டையை அடைப்பதற்கு தேவையான ஒரு பொருள் இல்லாமல் போயிருந்தால் அல்லது குறைவாக இருந்தால்.

3. இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால்.

4. மனது கெட்டுப் போயிருந்தால்

5. உடலறிவு கெட்டுப் போயிருந்தால்.

நமது சிகிச்சையில் இந்த ஐந்தையும் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் சுலபமாக ஒழுங்கா வைத்துக் கொள்வது எப்படியென்பதை இந்தப் புத்தகத்தை முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக கற்றுக் கொள்ள போகிறோம், கற்றுக்கொண்டு அதை யார் ஒழுங்கு படுத்துகிறீர்களோ எந்த மருந்து, மாத்திரை, ஆபரேஷன், மருத்துவர் இல்லாமல் நமது இருதய ஓட்டையை நாமே அடைத்து கொள்ளலாம். கொள்ளலாம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.