"

23

உடலில் எந்த உறுப்பிலும் நோய் கிடையாது. இரத்தத்தில் தான் நோய் எனவே உறுப்புகளில் ஆராய்ச்சி செய்து நேரத்தை விரயம் செய்வதை விட்டு விட்டு மேலே கூறிய ஐந்து காரணத்தை ஆராய்ச்சி செய்து நம் நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம், இருதயத்தில் ஓட்டை, கண்ணில் குறைபாடு, சிறுநீரகம் பழுதடைதல் ஆகிய நோய்களுக்கு அந்த உறுப்பு காரணமில்லை என்பதைப் பார்த்தோம், உடனே மற்ற உறுப்புகளைப் பற்றிச் சொல்வோம் என்று எண்ணிக் காத்திருக்க வேண்டாம் ஏனென்றால் இது புரிந்து விட்டால் அனைத்து உறுப்புகளும் இதே தான் காரணம். எந்த உறுப்பில் நோய் என்று கூறுகிறீர்களோ அந்த உறுப்பில் நோய் இல்லை, இரத்தத்தில் தான் நோய். சரி இந்த ஐந்து காரணத்தையும் சரி செய்துவிட்டால் நோய்கள் குணமாகும் என்று கூறுகிறீர்களே, நான் இந்த ஐந்தையும் கற்றுக் கொள்கிறேன். சரி செய்கிறேன், ஆனால் இனிமேல், புது நோய் வராது என்று கூறுங்கள் ஏற்றுக் கொள்வேன். ஆனால் வந்த நோய் குணமாகுமா? என்று உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வரலாம். இந்தச் சிகிச்சை வருமுன் காப்போம் சிகிச்சை, வந்த நோய்கள் எவ்வளவு பெரிய பாதிப்பாக இருந்தாலும் அதைச் சரி செய்யும் சிகிச்சை, சிறுநீரகம் பழுதடைந்து விட்டது, இந்த ஐந்தையும் சரி பண்ணுவதன் மூலமாக எப்படி சிறுநீரகம்

தன் நோயை குணப்படுத்தும்? என்று மனதில் சந்தேகம் வரலாம்.

உங்கள் உள்ளங்கையில் இருக்கும் தோல் நீங்கள் பிறக்கும் பொழுது இருந்ததா? இல்லை புதியதா? நம் கைகளில் உள்ள தோல்கள் அடிக்கடி உரிந்து புதிதாக மாறுகிறது, இதை நாம் பார்க்கிறோம் அதேபோல் நகம் பழைய நகமா? புது நகமா? முடி ஐந்து வருடத்திற்கு முன்னால் இருந்ததா புதியதா? தோல், நகம், முடி அடிக்கடி மாறுகிறது அதே போல் முடியிலிருந்து கால் நகம் வரை நம் உடம்பிலிருக்கும் அனைத்து உறுப்புகளும் தம்மை புதுப்பித்துக் கொள்கிறன்றன. இதைப்பற்றிப் பொதுவாக எந்த மருத்துவரும் அதிகமாகப் பேசுவதில்லை. பாம்பு சட்டை உரித்துப் புதியதாக மாற்றுவது போல நம் உடல் உறுப்புகள் அனைத்தும் தம்மைத்தாமே புதுப்பித்து கொள்கின்றன.

நமது உடலில் இருக்கும் குடல் 36 மணி நேரத்திற்கு ஒரு முறை மொத்தமாக புதியதாக மாறுகிறது, உங்களுக்கு இப்போது இருக்கும் குடல் இரண்டு நாட்களுக்கு முன்னால் இருந்த குடலே கிடையாது, இரத்தத்தின் வெள்ளை அணுக்கள் 13 நாட்களில் தம்மை புதுப்பித்துக் கொள்கின்றன, இரத்தத்தின் சிவப்பு அணுக்கள் 120 நாட்களில் தம்மை புதுப்பித்துக் கொள்கின்றன, கல்லீரல் ஒரு வருடத்தில் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. இதே போல் தலை முடி முதல் கால் நகம் வரை உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் சராசரியாக ஒரு வருடத்திற்குள் தன்னைத்

தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஆக மொத்தம் நம் உடலில் இருக்கும் உறுப்புகள் புது உறுப்புகளே.

உடனே ஒரு சந்தேகம் வரும் லிவர் எப்போது புதியதாக மாறியது, நம் மலத்துவாரம் வழியாக இதுவரை லிவர் வெளியே வரவே இல்லையே எப்படி புதுப்பித்தது என்ற சந்தேகம் எழலாம். ஒரு காரில் உள்ள °பேர் பாட்° போலஒரு பொருளைக் கழற்றி வெளியே வீசி விட்டு கடையில் சென்று புதிய பொருள் வாங்குவது போல் இல்லை நம் உடம்பு.

ஒரு கம்பெனியில் ஒரு லட்சம் பேர் வேலை செடீநுகிறார்கள், ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் வேலையிலிருந்து நீக்கி மீண்டும் புதிய ஆட்களைச் சேர்த்தால் கம்பெனி வேலை கெட்டுப்போகும், ஆனால் தினமும் 10 பேரை வேலையிலிருந்து நீக்கி புதிய 10 பேரை சேர்த்து வந்தால் ஒரு குறிப்பிட்ட நாளில் அந்தக் கம்பெனியிலிருக்கும் அனைத்து வேலை ஆட்களும் புதியதாக மாறிவிடுவார்கள், அதே போல் கல்லீரல் என்ற உறுப்பு தொழிற்சாலையில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் (செல்கள்) வேலை செய்கிறார்கள், நமது உடல் ஒவ்வொரு வினாடியும் கல்லீரலில் உள்ள பல லட்சக்கணக்கான செல்களை புதுப்பிக்கிறது. இப்படிப் புதுப்பித்துப் புதுப்பித்து ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்த கல்லீரலில் இருக்கும் அனைத்து செல்களும் புதியதாக மாறிவிடுகின்றன, இதே போல் தான் தலை முடி முதல் கால் நகம் வரை உள்ள ஒவ்வொரு உறுப்பும் சராசரியாக ஒரு வருடத்தில் தன்னைத் தானே புதுப்பித்து கொள்கிறது.

ஒரு நிமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்கள் தாமாகவே புதுப்பித்துக்கொள்கின்றன, கையில் தேய்த்தால் அழுக்கு போல் கருப்பாக ஒரு பொருள் வரும் இது அழுக்கு அல்ல, செத்துப்போன செல்கள் வேர்வை வழியாக வெளியே வருகிறது, மலம் மஞ்சளாக போவதற்குக் காரணம் செத்துப் போன செல்களின் நிறம் மஞ்சள், மலம் வழியாக செத்துப்போன செல்கள் உடலை விட்டு வெளியேறுகின்றன, மூத்திரம் வழியாக வெளியேறுகிறது, சளி வழியாக வெளியேறுகிறது இப்படி ஒரு நிமிடத்தில் 300 கோடி செல்கள் உடலை விட்டு வெளியே சென்று தம்மை தாமே புதுப்பித்து கொள்கின்றன, எப்பொழுது உங்கள் நோய் ஒரு வருடத்திற்கு மேலாக குணமாகவில்லையோ அது உறுப்பு சம்பந்தப்பட்ட நோய் அல்ல இரத்தம் சம்பந்தப்பட்ட நோய். நாம் பெருமையாகச் சொல்கிறோம் நோய் எனக்கு 5 வருடமாக இருக்கிறது என்று, உண்மையில் அந்த உறுப்பில் நோய் கிடையாது, 5 வருடமாக உங்கள் இரத்தம் கெட்டுப்போயிருக்கிறது. நாம் உறுப்புகளில் °கேன் செய்து ஆராய்ச்சி செய்து ஆபரேஷன் செய்து மருந்து மாத்திரை சாப்பிட்டு நோய்களைப் பெரிதுபடுத்துகிறோமே தவிர, குணப்படுத்துவது கிடையாது. அதனால் இந்தச் சிகிச்சை வருமுன் காப்போம் சிகிச்சை கிடையாது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த சிகிச்சை வந்த நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தும் சிகிச்சை. எனவே நமது உடல் உறுப்புகளில் எந்த உறுப்பு எவ்வளவு பாதித்திருந்தாலும் அந்த உறுப்பை எந்த ஒரு மருந்து, மாத்திரை, ஆப்ரேஷன். மருத்துவர் இல்லாமலே தன்னைத்தானே புதுப்பிக்கும் வழிமுறைகள் இருப்பதால் அதைப் பயன்படுத்தி நாம் நம் உறுப்புகளை புதுப்பிப்பதன் மூலமாக நோய்களைக் குணப்படுத்தி கொள்ளலாம். உறுப்புகளையே புதுப்பிக்கும் வித்தை தெரியும் பொழுது உறுப்புகளுக்கு வரும் நோய்க்குப் பெயர் வைப்பது தேவையா? உலக மருத்துவர்கள் நோய்களுக்குப் பெயர் வைக்கிறார்கள் ஆனால் குணப்படுத்துவதில்லை நமது சிகிச்சையில் நோய்களுக்குப் பெயர் கிடையாது, ஆனால் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும்.

சரி இந்த ஐந்து விஷயங்களையும் ஒழுங்கு படுத்துவது மூலமாக நமது உடலின் செல்களைப் புதுப்பித்து எல்லா உறுப்புகளையும் புதுப்பித்துக் கொண்டே இருந்தால் இறப்பு வராதா? என்று கேள்வி மனதில் தோன்றும். நமது சிகிச்சை 120 வயது வரை செல்லுபடியாகும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வயது உண்டு. நாய், கோழி, குரங்கு, பறவை ஒவ்வொரு உயிரும் ஒரு குறிப்பிட்ட நாள்வரை உயிரோடு இருக்கும், ஆமைக்கு அதிக வருடம் உயிர் வாழ இயற்கை சில வாய்ப்புகளை கொடுத்துள்ளது. நாய் குறுகிய காலத்தில் இறந்து விடுகிறது. அதாவது உயிர்களின் உடலில் உள்ள ஒரு செல் ஒரு குறிப்பிட்ட நாள் வரை தன்னைத்தானே புதுப்பித்து கொள்கிறது, மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் 120 வயது வரை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். நோயில்லாமல் வாழ முடியும் எனவே இந்த சிகிச்சை 120 வயது வரை நாம் பயன் படுத்தலாம்.

எனக்கு 80 வயது ஆகிவிட்டது, உறுப்புகள் பாதிப்பு அடைந்துவிட்டது இந்தச் சிகிச்சை பயன் அளிக்குமா என்று கேட்டால் கண்டிப்பாகப் பயன் அளிக்கும் 120 வயதுக்கு பிறகு கூட பயன் அளிக்கும். ஆனால் எத்தனை வருடங்கள் என்று கேரண்டி கொடுக்க முடியாது. ஒரு வேளை 120 வயதுக்கு மேல் நாம் உயிரோடு இருந்தால் அது நமக்குக் கிடைக்கும் போன°. எனவே தயவு செய்து எனக்கு வயதாகிவிட்டது என்று ஒதுங்கிக் கொள்ளாதீர்கள், இந்தச் சிகிச்சை மூலமாகக் கண்டிப்பாக வயதானவர்களுக்கும் உறுப்புகள் புதுப்பிப்பதன் மூலமாக நோய்களைக் குணப்படுத்தமுடியும், இந்த ஐந்து விஷயங்களை சரி செய்வதன் மூலமாக நமது உடலிலுள்ள அனைத்து செல்களையும் குணப்படுத்த முடியும். எனவே இந்தச் சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை கிடையாது இந்த ஐந்தையும் சரிபடுத்துவதன் மூலமாக உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரே நேரத்தில் குணப்படுத்த முடியும். வாழ்வோம் ஆரோக்கியமாக.!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.