"

24

நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டி, சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நிகடிநச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் கலர் கலராக ஆடை அணிந்து ஒன்றாகச் சேரும் பொழுது தூரத்தில் இருந்து பார்த்தால் பூ போல தெரியும். மீண்டும் கலைந்து நிற்கும் பொழுது தூரத்தில் இருந்து பார்த்தால் பூ போல தெரியும். மீண்டும் கலைந்து நிற்கும் பொழுது மயில் போலத் தோன்றும் மீண்டும் கலைந்து நிற்கும் பொழுது ஒரு தேசியக்கொடிபோலத் தோன்றும். ஆனால் அங்கு பூவோ, மயிலோ, தேசிய கொடியோ கிடையாது. 500 மனிதர்கள் கும்பலாக நிற்கும் பொழுது நம் கண்ணிற்கு ஒரு பொருள் போலத் தோற்றம் தெரிகிறது, இதைப் புரிந்து கொண்டால் உடலைப் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம், உடலில் முடி என்பது பல கோடிக்கணக்கான செல்கள் கருப்புக் கலர் ஆடை அணிந்து நிற்பதாகக் கற்பனை செய்யுங்கள். கண் என்பது பல கோடிக்கணக்கான செல்கள் கும்பலாக நிற்கும் பொழுது நமக்குக் கண் போன்று தோற்றம் ஏற்படுகிறது. மூக்கு, இருதயம், சிறுநீரகம் ஆகிய அனைத்து உறுப்புகளும் செல்களால் ஆனவையே. நமது உடலில் அனைத்து உறுப்புகளுக்குள்ளேயும் இருப்பது செல்கள் மட்டுமே மைக்ரோ°கோப் மூலமாக தலை முடி முதல் உள்ளங்கால் வரை எந்த உறுப்பில் பார்த்தாலும் வெறும் செல்கள் மட்டுமே தெரியும். எனவே நமது உடலில் உறுப்புகள் என்று எதுவும் கிடையாது, பல கோடிக்கணக்கான செல்கள் ஒன்று சேர்ந்தால் அதை திசுக்கள் என்று கூறுவார்கள். பல ஆயிரக்கணக்கான திசுக்கள் ஒன்று சேர்ந்தால் அது ஒரு உறுப்பாகும். உறுப்புகள் ஒன்று சேர்ந்தால் மண்டலம் இரத்த ஓட்ட மண்டலம். ஜீரண மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம் போன்றவைகள் இந்த மண்டலங்கள் ஒன்று சேர்ந்தால் மனித உடம்பு. எனவே மனித உடலில் செல்கள் மட்டுமே உள்ளன உறுப்புகளே கிடையாது.

நமது உடலில் உள்ள அனைத்துச் செல்களும் நிறத்தால் வேறு பட்டிருக்கும். சில செல்கள் கருப்பு, சிவப்பு, வெள்ளை போன்ற நிறங்கள் சில செல்கள் உருவத்தால் வேறு பட்டிருக்கும் வட்டமாக, நீளமாக, உருண்டையாக, குட்டையாக, நூடுல்° போல. அமீபா போல இருக்கும். செல்களின் வேலை வேறு வேறு இருக்கும். கண்களில் உள்ள செல்கள் பார்க்கும் வேலையைச் செய்கின்றன. காதுகளில் உள்ள செல்கள் கேட்கும் வேலையைச் செய்கின்றன. இரைப்பையில் உள்ள செல்கள் ஜீரண வேலையைச் செய்கின்றன. எனவே செல்களின் வேலை வேறு வேறு, ஆனால் அனைத்து செல்களின் கட்டமைப்பும் (டிசைன்) ஒன்று தான்.

உலகிலுள்ள அனைத்து மனிதர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். சிலர் குண்டாக, ஒல்லியாக, சிலர் கருப்பாக, சிலர் சிவப்பாக, சிலர் கம்ப்யூட்டர் இன்ஜினியர், சிலர் கட்டட வேலைக்காரர். சிலர் இந்தியா, சிலர் பாகி°தான் இப்படி மனிதர்களை நிறம், உருவம், தொழில், ஊர், ஜாதி, மதம் போன்ற விஷயங்களில் வேறு படுத்தலாம். ஆனால் உலகிலுள்ள அனைத்து மனிதர்களின் கண், காது, மூக்கு அனைத்தும் ஒரே டிசைன் தான் என்பதைப் புரிந்து கொண்டால் இதே விஷயத்தை நம் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் பொருத்தி பார்க்கும் பொழுது நமக்கு ஒரு உண்மை புரியும் உடலிலுள்ள அனைத்து செல்களும் நிறத்தால், உருவத்தால். வடிவத்தால், தொழிலால் வேறு. ஆனால் கட்டமைப்பு ஒன்று.

ஒரு செல்லைக் கால் பந்து போல கற்பனை செய்து பாருங்கள். அந்தக் கால் பந்தின் மேல் உள்ள தோல் மெம்பரைன் என்ற ஜவ்வு படலம். நம் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் மெம்பரைன் இருக்கும். இது கண்ணிலும் இருக்கும் இருதயத்திலும் இ ரு க் கு ம் அ i ன த் து b ச ல் க ளு க் கு ம் உ ள் n ள சைட்டோபிளாசம். புரோட்டாபிளாசம் இருக்கும் காது செல்களுக்கும் இருக்கும் மூக்கு செல்களுக்கும் இருக்கும், அனைத்து செல்களுக்கும் நியூக்ளிய° என்ற உட்கரு இருக்கும். அனைத்து செல்களுக்கும் குரோமசோம் னுசூஹ, சுசூஹ ஜீன்° ஆகியவை இருக்கும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உடலிலுள்ள அனைத்து செல்களும் ஒரே கட்டமைப்பு, அனைத்து செல்களும் ஒரே மாதிரி தான் உயிர் வாழ்கிறது, சாப்பிடுகிறது, மலம், ஜலம் கழிக்கிறது, நோய் வருகிறது, இறந்து போகிறது, இப்படி தலை முதல் உள்ளங்கால் நகம் வரை நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக் குள்ளேயும் இருக்கும் செல்கள் ஒரே மாதிரி இருக்கும் பொழுது தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை எப்படி செய்ய முடியும்? நமது சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனி சிகிச்சை கிடையாது.

உணவு சாப்பிடும் பொழுது யாராவது இந்த உணவு கண்ணிற்கு இந்த உணவு இருதயத்திற்கு என்று பிரித்து சாப்பிடுகிறீர்களா? தண்ணீர் குடிக்கும் பொழுது இந்தத் தண்ணீர் மூட்டுக்கு ! இந்தத் தண்ணீர் கைக்கு ! என்று தனித் தனியாக குடிக்கிறீர்களா? மூச்சுக் காற்று இழுக்கும் பொழுது இந்த மூச்சு கணையத்துக்கு என்று இழுக்கிறீர்களா? தனித்தனி உறுப்புகளுக்கு நாம் சாப்பிடுவதுமில்லை, நீர் அருந்துவதுமில்லை மூச்சுக் காற்று இழுப்பதுமில்லை என்ற உண்மையைப் புரிந்து கொண்டால் தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனி சிகிச்சை இல்லை என்ற உண்மையும் புரியும்.

நாம் சாப்பிடுகிற சாப்பாடு அனைத்து செல்களுக்கும் சமமாக பிரித்து கொடுக்கப்படுகிறது, குடிக்கும் நீர் அனைத்து உறுப்புகளில் உள்ள செல்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது, இழுக்கும் மூச்சு காற்று அனைத்து செல்களுக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு செல்லில் இருந்து வெளிவரும் நீர் கழிவுகள் மூத்திரம் என்ற பெயரில் மொத்தமாக வருகிறது, யாராவது மூத்திரம் போகும் பொழுது இது கண்ணுடைய மூத்திரம் இது மூக்குடைய மூத்திரம் என்று பிரிக்க முடியுமா? எல்லா செல்களின் திடக் கழிவுகளும் மலம் என்ற பெயரில் வெளிவருகிறது யாராவது மலம் வந்த பிறகு எந்த உறுப்பிலிருந்து எந்த மலம் வந்தது என்று பிரிக்கமுடியுமா? உடலில் எதைக் கொடுத்தாலும் அனைத்து உறுப்புகளும் சமமாகப் பிரித்து கொள்கின்றன. எது வெளியே வந்தாலும் சமமாக வெளியே வருகிறது. நமது விரலை தீயில் வைத்தால் விரல் சுடுகிறது, வெளியே எடுத்த பிறகு சூடு குறைந்து விடுகிறது, என்ன நடந்தது விரலின் சூட்டை உடலிலுள்ள அனைத்து செல்களும் சமமாகப் பிரித்து கொண்டதால் விரலில் நமக்கு சூடு தெரிவதில்லை. எனவே தனித்தனி உறுப்புகளில் தனித்தனி சிகிச்சை என்ற பெயரில் நாம் பல வருடங்களாக பல நோய்களுக்கு சரியான மருத்துவம் கிடைக்காமல் துன்பப்பட்டு வருகிறோம்.

ஆச்சரியமாக இருக்கும், கண்ணில் நோய் வந்தால் கண் மருத்துவரைப் பார்க்க வேண்டும். சிறு நீரகத்தில் நோய் வந்தால் சிறுநீரக மருத்துவரைப் பார்க்க வேண்டும், என்று தான் உலகத்திலுள்ள பொது கருத்து. ஆனால் எல்லா நோய்களுக்கும். ஒரே தீர்வு என்பது இந்த சிகிச்சையில் முக்கியமான ஒரு கருத்து. தனித்தனி உறுப்புகளுக்கு தனித்தனி சிகிச்சை இருக்கிறது என்று யாராவது கூறினால். ஒரு சிறு உதாரணம். வாயில் விஷம் சாப்பிட்டால் வாய் மட்டும் உயிர் போகுமா? அல்லது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உயிர் போகுமா? வாயில் விஷம் வைத்தால் ஐந்து நிமிடத்தில் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் இறந்து போகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் எதுவாக இருந்தாலும் சமமாக பிரித்து கொள்கின்றன. அதே போல் நோயையும் சமமாகப் பிரித்து கொள்கிறது. சர்க்கரை, °துமா, தைராய்டு, கேன்சர் போன்ற நோய்கள் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் கிடையாது. மொத்த உடம்பிலும் சமமாக பிரித்து வைத்திருக்கும். எனவே உலகிலுள்ள எந்த நோய்க்கும் ஒரு குறிப்பிட்ட உறுப்பில் மட்டும் மருத்துவம் பார்ப்பது சரியான தீர்வு கிடையாது.

இதைப் படிக்கும் பலருக்கு மிகப்பெரிய சந்தேகமாக இருக்கும், நம்பமுடியாத ஆச்சர்யமாக இருக்கும். தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை கிடையாதா? எல்லா உறுப்புக்கும் ஒரே சிகிச்சையா எப்படி? இது, என்ன அதிசயம்? என்று மனதில் சந்தேகம் வரும். அதற்குக் காரணம் என்னவென்றால். மனிதனின் மனநிலை அப்படித்தான். நல்ல விஷயத்தை என்றுமே நம்பாது. கெட்ட விஷயத்தை உடனே நம்பும். உதாரணமாக நீங்கள் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கிறீர்கள், முன்பின் தெரியாத ஒருவர் உங்களிடம் வந்து மடையா அறிவு இருக்கிறதாஎன்று கேட்டால் என்ன செய்வீர்கள். அடுத்த நிமிடம் போடா மடையா உனக்குத்தான் அறிவு இல்லை, யாரிடம் வந்து என்ன பேசுகிறாய்? என்று திருப்பி உடனே திட்டிவிடுவீர்கள்.

அதே போல் வேறு ஒருவர், முன் பின் தெரியாத ஒருவர் உங்களிடம் திடீரென வந்து ஐ லவ் யூ என்று சொன்னால் என்ன செய்வீர்கள். கழுத்தை திருப்பிப் பின்னால் பார்ப்பீர்கள் இவர் நமக்கு தான் சொல்கிறாரா பின்னால் வேறு யாருக்காவது சொல்கிறாரா அடுத்து அவரிடம் கேள்வி கேட்பீர்கள். நீங்கள் யார்? உங்களை முன்பின் பார்த்ததே இல்லையே நீங்கள் யார் என்று எனக்கு தெரியாதே? என்னிடம் வந்து ஏன் ஐ லவ் யூ சொல்கிறீர்கள், உங்களுக்கு என்ன பைத்தியமா? என்று கேட்பீர்கள். ஏனென்றால் ஐ லவ் யூ என்பது நல்ல விஷயம். என்றாவது நம்மை யாராவது திட்டும் பொழுது நீங்கள் யார், நான் மடையன் கிடையாது என்னை ஏன் திட்டுகிறீர்கள், உண்மையாகவே திட்டுகிறீர்களா, நான் நம்ப மாட்டேன் என்று கூறுகிறோமா? இதிலிருந்து என்ன புரிகிறது என்றால் கெட்ட விஷயத்தை மனிதன் உடனே நம்புகிறான் நல்ல விஷயத்தை நம்புவதே கிடையாது.

சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது என்று கூறினால் கூட்டம் கூட்டமாக சென்று வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிடுவோம் ஆனால் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியும் என்று யாராவது கூறினால் மடையன். பைத்தியகாரன். உளறுகிறான் என்று கூறுகிறார்கள். நமது நோக்கம் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்பதா? குணப்படுத்தக் கூடாது என்பதா? சற்று சிந்தியுங்கள் சர்க்கரை, °துமா, தைராய்டு, கேன்சர், எய்ட்° போன்ற பல நோய்களை குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்களே நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு எதுக்குப் படிப்பு? மருத்துவர் என்றால் நோயைக் குணப்படுத்த முடியும் என்று சொல்ல வேண்டும், எனவே நல்ல விஷயங்களை தயவுசெய்து நம்புங்கள், கெட்ட விஷயங்களைத் தயவு செய்து ஆராய்ச்சி செய்து சில நாட்கள் யோசித்து தேவைப் பட்டால் மட்டும் நம்புங்கள். எனவே நமது சிகிச்சையில் தனித்தனி உறுப்புகளுக்குத் தனித்தனி சிகிச்சை கிடையாது, ஒரு சில வழி முறைகளை கடைப்பிடித்தால் உலகிலுள்ள அனைத்து செல்களுக்கும் உள்ள நோய்களை மொத்தமாகக் குணப்படுத்தலாம்.

நமது உடலைத் தனித்தனி உறுப்புகளாக பிரிக்க முடியாது கண்ணை இரண்டாக பிரித்துக் கொடுத்தால் இரண்டு மருத்துவரிடம் காட்டுவீர்களா? கண்ணில் கருப்பாக உள்ள பகுதிக்கு ஒரு ஊரிலும் வெள்ளையாக உள்ள பகுதிக்கு வேறு ஊரிலும். வேறு மருத்துவரிடமும், காண்பித்தால் கண்ணில் சிகிச்சை பெற முடியுமா? நான் இருதயத்தை எட்டாகப் பிரித்து கொடுக்கிறேன், இருதயத்தில் உள்ள நோய்க்கு எட்டு மருத்துவரிடம் காட்டுவீர்களா? ஒரு உறுப்பை எட்டாகப் பிரித்து எட்டு மருத்துவர் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொண்டால் உடல் என்ற உறுப்பை தனித்தனியாகப் பிரிக்கக் கூடாது, பிரிக்க முடியாது உடல் என்பது ஒரு உறுப்பு இந்த ஒரு உறுப்புக்கு ஒரு சிகிச்சை செய்தால் போதும்.

எனவே நாம் இனிமேல் உறுப்புகளைப் பற்றி அதிகமாகப் பார்க்க

மாட்டோம், ஒரு செல் என்றால் என்ன? ஒரு செல் எப்படி உயிரோடு இருக்கிறது? எதை சாப்பிடுகிறது? ஒரு செல் எப்படி வேலை செய்கிறது? ஒரு செல்லுக்கு எப்படி நோய் வருகிறது? வந்தால் நோயை எந்த ஒரு மருந்து மாத்திரையும் மருத்துவரும் இல்லாமல் எப்படி குணப்படுத்துவது? என்று பல விஷயங்களைத் தெளிவாகப் பார்க்கப் போகிறோம். உடலில் உள்ள ஒரு செல்லை குணப்படுத்த தெரிந்த ஒரு மருத்துவருக்கு அனைத்து உறுப்புகளையும் குணப்படுத்த தெரியும். நாம் சிகிச்சை என்று எண்ணி இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தோம் ஆனால் சைன்° கிளா° போல செல்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாரே என்று குழப்பம் வேண்டாம், இதுவரை யாரும் உடலைப் பற்றித் தெளிவான விளக்கத்தைக் கூறவில்லை.

உலகிலுள்ள அனைத்து மருத்துவர்களும் நோய்க்குப் பெயர் வைத்தார்கள். காலம் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட கட்டாயப் படுத்தினார்களே தவிர யாரும் உடலைப்பற்றிய உண்மையை சரியாக விளக்கமாக கூறவில்லை. எனவே தயவு செய்து புத்தகத்தை முழுவதுமாகப் படியுங்கள். ஆரம்பத்தில் செல்களைப் பற்றிப் படிக்கும் பொழுது சற்று மந்தமாக இருந்தாலும் போகப் போக ஏன் செல்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள். எனவே படித்தவர்களுக்கும், படிக்காதவர் களுக்கும் புரியும் வகையில் தான் இருக்கும் உடலைப் பற்றி ஞானம் இல்லை என்றால் வருவது நோய். உடலைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்து கொண்டால் அதுதான் சிகிச்சை. நமது சிகிச்சையில் மருந்து மாத்திரை கிடையாது, எனவே ஞானம் தான் மருந்து.

ஒரு கூட்டத்தில் திடீரென ஒரு பாம்பு வந்தால் அனைவரும் தலைதெறிக்க ஓடி மறைந்து போவார்கள் ஆனால் ஒருவர் மட்டும் பயப்படாமல் நின்று கொண்டிருப்பார் அவர் யார். ஒரு பாம்பாட்டி. பாம்பு என்றால் என்ன? பாம்பின் தன்மையென்ன? பாம்பை எப்படிக் கையாள்வது என்ற வித்தையைத் தெரிந்தவர் பாம்பைப் பார்த்து பயப்படமாட்டார், அதே போல் நோய் என்றால் நமக்கு ஏன் பயம் வருகிறது என்றால் நோயை பற்றி நமக்கு ஒன்றும் தெரியவில்லை. உடல் என்றால் என்ன? உறுப்புகள், செல்கள், இரத்த நாளங்கள் மற்றும் நோய்கள் என்றால் என்ன? நோய் எப்படி வருகிறது? அதை எப்படிக் குணப்படுத்துவது? என்ற அனைத்து விஷயங்களையும் சுலபமாக தெரிந்து கொள்வதன் மூலமாக நாம் நோயை பார்த்து இனி பயப்படத் தேவையில்லை. இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படித்தால் நீங்கள் நோயில்லாதவராக மாறுவீர்கள் நோயை பார்த்து பயப்பட மாட்டீர்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.