25
கார் ஓடுவதற்கு பெட்ரோல் தேவை. காற்றாடி (FAN) சுற்றுவதற்குக் கரண்ட் தேவை. பெட்ரோல் தீர்ந்த அடுத்த நிமிடம் கார் நின்று விடும். கரண்ட் இல்லாத அடுத்த நிமிடம் காற்றாடி FAN நின்று விடும். என்னதான் புது காராக இருந்தாலும், புது காற்றாடி FAN ஆக இருந்தாலும் ஏன் இயங்குவதில்லை. உலகத்திலுள்ள அனைத்து பொருள்களும் ஒரு எரிபொருள் மூலமாக வேலை செய்கிறது. எரிபொருள் இல்லை யென்றால் உடனே அது தன் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது. அதே போல் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு எரிபொருள் மூலமாக வேலை செய்கிறது. நமது உடல் பல கோடிக்கணக்கான செல்கள் என்ற வீடுகளாலும் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள இரத்தம் என்ற ரோடாலும் உருவாக்கப்பட்டது. செல்களை வீடு போல் கற்பனை செய்யுங்கள். இரத்தத்தை ரோடு போல் கற்பனை செய்யுங்கள். ஒரு ஊரின் மேலே ஹெலிக்காப்டரில் இருந்து பார்த்தால் பல லட்சக்கணக்கான வீடுகளும் பல ரோடுகளும் தெரியும். அது போல் நமது உடல் பல கோடிக்கணக்கான செல் என்ற வீடுகளாலும் இரத்தம் என்ற ரோடுகளாலும் உருவாக்கப்பட்டது.
ஒரு செல் என்ற வீடு கதவைத் திறக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எடுக்கும். சர்க்கரைக்கு குளுக்கோ°, சுகர் என்ற பெயர்கள் உள்ளது. கண்ணுக்கே தெரியாத செல்லுக்குள் ஒரு °டவ் (அடுப்பு) இருக்கிறது. அதற்கு மைட்டோ காண்டீரியா என்று பெயர். அந்த அடுப்பிற்கு விறகு என்ற சர்க்கரை தேவை. ஒரு பொருள் எரிவதற்குக் காற்று தேவை. சர்க்கரை என்ற பொருள் எரிவதற்குக் காற்று தேவை. எனவே செல் கதவை திறந்து இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் என்ற காற்றை எடுத்து வந்து சர்க்கரை என்ற விறகை மைட்டோ காண்ட்ரியா என்ற அடுப்பில் வைத்து எரிக்கிறது. ஒரு மெழுகுவர்த்தி எரிவதற்குக் காற்று தேவை. மெழுகுவர்த்தி எரியும் பொழுது ஒரு டம்ளரை தலை கீழாக மூடி வைத்தால் அந்த மெழுகுவர்த்தி அணைந்து விடும். அதே போல் வெறும் சர்க்கரையால் எரிய முடியாது. அதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. செல்லுக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியா என்ற அடுப்பில் சர்க்கரை என்ற விறகும் ஆக்ஸிஜன் என்ற காற்றும் சேர்ந்து எரியும் பொழுது ஒரு தீ உருவாகிறது. இந்தத் தீயினால் வெப்ப ஆற்றல் உருவாகிறது. அது இயக்க ஆற்றலாக மாறுகிறது. இந்த ஆற்றலுக்குப் பெயர்தான் பிராணசக்தி இந்த சக்திக்கு லைப்ஃபோர்° (டுகைந குடிசஉந), கா°மிக் எனர்ஜி, உயிர்ச் சக்தி என்று பல இடங்களில் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்படுகிறது. இதுவரை யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகளில் பிராணசக்தியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனுடைய அறிவியல் (ளுஊஐநுசூகூஐகுஐஊ) விளக்கம் இதுதான்.
தலைமுடி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உள்ளே இருக்கும் செல்களும் இந்த வேலையைத்தான் செய்கின்றன. செல்கள் உயிரோடு இருப்பதற்கு அவசியமான, அத்தியாவசியமான உணவு சர்க்கரையும் ஆக்ஸிஜனும். கண்ணில் உள்ள செல்கள் சர்க்கரையும் ஆக்ஸிஜனையும் சாப்பிட்டு அதன் மூலம்
கிடைக்கும் பிராண சக்தியை வைத்துப் பார்க்கும் வேலையை செய்கிறது. எலும்பில் உள்ள செல்கள் சக்கரையும் ஆக்ஸிஜனையும் சாப்பிட்டு அதனால் கிடைக்கும் சக்தியின் மூலம் எலும்பு வேலையைச் செய்கிறது. இருதயம் சர்க்கரை, ஆக்ஸிஜனையும் சாப்பிட்டு அதனால் கிடைக்கும் பிராண சக்தியை வைத்து இருதய வேலையைச் செய்கிறது. நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், உடல் முழுவதும் இருக்கும் அனைத்து செல்களும் சாப்பிடுவது ஒரே பொருளைச் செய்யும் வேலை மட்டும்தான் வேறு வேறு நமது வீட்டில் இருக்கும் அனைவரும் ஒரே உணவை சாப்பிடுகிறோம். ஆனால் செய்யும் வேலைவேறு வேறு தானே.
நமது வீட்டில் அடுப்பு எரிப்பதற்கு வீட்டுக் கதவைத் திறந்து ரோட்டுக்கு சென்று கடையில் விறகு வாங்கி வருகிறோம். விறகு எரிந்தவுடன் கரிக்கட்டையாக மாறுகிறது. கரிக்கட்டை நமக்குத் தேவை இல்லை. எனவே, வீட்டுக் கதவைத் திறந்து ரோட்டிலுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுகிறோம். கடையிலிருந்து காய்கறி போன்ற நல்ல பொருட்களை வீட்டிற்குள் எடுத்து வருகிறோம். அதைப் பயன்படுத்திய உடன் கழிவுப் பொருட்களாக மாறிய உடன் அதை மீண்டும் ரோட்டிற்குச் சென்று கொட்டுகிறோம். இதேபோல் சர்க்கரை என்ற விறகு செல்கள் என்ற வீட்டுக்குள் சென்று எரிந்த பிறகு யூரியா என்ற கழிவுப்பொருளாக மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது. மேலும் ஆக்ஸிஜன் என்ற பொருள் செல்லிற்குள் புகுந்த பிறகு கார்பன்–டை ஆக்ஸைடு–ஆக மாறுகிறது. மீண்டும் வெளியே வரும் போது இரத்தத்தில் கலக்கிறது. எனவே, நமது ஊரில் உள்ள ரோட்டில் நல்ல பொருளும் செல்லும் கெட்டப் பொருளும் செல்லும். விளைச்சல் உள்ள இடத்திலுள்ள பொருட்களை எடுத்து வாகனங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும் நாம் அனுப்புகிறோம். ஓவ்வொரு வீட்டு கழிவும் வெளியே இருக்கும் பொழுது குப்பை வண்டி மூலமாக வீட்டிற்கே எடுத்துச் செல்கிறோம்.
எனவே, சாலையில் நல்ல பொருளை எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. கழிவுப் பொருளை எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. அது போல இரத்தம் என்ற ரோட்டில் நல்ல பொருட்கள் அனைத்து செல்களுக்கும் எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. கெட்ட பொருளை வியர்வை, சளி, மூத்திரம், மலம் போன்ற குப்பை தொட்டியில் எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. இரத்தத்தில் நல்ல பொருளும் இருக்கும் கெட்ட பொருளும் இருக்கும். ஒரு செல் உயிரோடு இருப்ப தற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தன் நோயைத் தானே குணப்படுத்து வதற்கும் இரத்தத்தைத் தான் பயன்படுத்துகிறது. இரத்தம் தான் ஒரு செல்லின் அடிப்படைத் தேவை.
பத்து வீடு வரிசையாக இருக்கும் பொழுது பத்து வீட்டுக்காரர்களும் மளிகைக் கடையில் ஒரே மாதிரிப் பொருளை வாங்குகிறார்களா? அல்லது ஒரே மாதிரிக் குப்பையை தான் போடுகிறார்களா? ஓவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்?. அவர்கள் தேவை என்ன? வாழ்க்கை முறை என்ன? இதைப் பொருத்து அவர்கள் வாங்கும் பொருளும் வேறு வேறு ஆக இருக்கும். கழிவுப் பொருளைக் கொண்டு வந்து வெளியே கொட்டும் பொழுதும், அது வேறு வேறு பொருட்களாக இருக்கும். அதே போல செல்கள் கோடிக்கணக்கான வரிசையாக நிற்கும் பொழுது ஒவ்வொரு செல்லுக்கும் தேவைப்படும் பொருளும் வேறு, கழிவும் வேறு, நீங்கள் உங்கள் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்களை தினமும் ஒரே மாதிரி வாங்குகிறீர்களா?. அதே போல் செல்கள் என்ற வீடு அதன் வேலை, அதன் நோய் மற்றும் பல விஷயங்களைப் பொருத்து ஒவ்வொரு வினாடியும் வேறு வேறு பொருட்களை இரத்தத்தில் இருந்து எடுக்கும். வேறு வேறு கழிவுகளை இரத்தத்தில் கொட்டும். ஒரு செல் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தன் நோயைத் தானே குணப்படுத்திக் கொள்வதற்கும் அத்தியாவசியத் தேவை இரத்தம்.
தலைமுடி முதல் உள்ளங்கால் வரை நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளில் இருக்கும் அனைத்து செல்களும் இரத்தத்தை நம்பிதான் வாழ்கிறது.
ஒவ்வொரு செல்லுக்கும் தனித்தனி அறிவு உண்டு. ஒவ்வொரு செல்லும் தனித்தனியாக இயங்குகிறது. ஓவ்வொரு செல்லுக்கும் தன்னைத்தானே புதுப்பித்து கொள்வதற்கும் நோயை குணப்படுத்துவதற்கும் அறிவு உள்ளது. எனவே, செல்களுக்கு வரும் நோய்களை செல்களில் சிகிச்சை செய்தால் குணப்படுத்த முடியாது. இரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகளே செல்லுக்கான நோய். எனவே இரத்தத்தில் சிகிச்சை செய்தால் மட்டுமே செல்களைத் குணப்படுத்த முடியும். இதுவரை நாம் உடல் என்றால் என்ன? செல்கள் என்றால் என்ன? இரத்தம் நாளங்கள் என்றால் என்ன? என்பதைப் பற்றி விளக்கமாக பார்த்தோம். இனி நாம் ஒவ்வொரு நோய்களை பற்றியும் பார்க்க போகிறோம்.