"

28

நாம் சுவாசிக்கும் காற்றில் தூசு, குப்பை, செல்போன் அலைவரிசை, டி.வி அலைவரிசை, சேட்டிலைட் அலைவரிசை, காற்று சம்பந்தப்பட்ட எல்லா பொருள்களும், வைர°, பாக்ட்டீரியா மற்றும் அனைத்து பொருள்களும், உள்ளன. மூக்கின் வழியாக உள்ளே செல்லும் காற்று நுரையீரலுக்கு வரும் பொழுது நுரையீரல் காற்றிலுள்ள காற்று சம்பந்தப்பட்ட பொருள்களான ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், போன்ற பொருள்களை எடுத்து நுரையீரல் என்ற இரயில்வே °டேஷனில் இரத்தம் என்ற இரயில் வரும் பொழுது இரயிலில் ஏறுகிறார்கள். இரத்தத்தில் கலந்த காற்று சம்பந்தப்பட்ட பொருள்கள், இரத்தம் மூலமாக உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் செல்கிறது. ஒவ்வொரு செல்லுக்குள்ளும் செல்லும் நல்ல காற்று, கெட்ட காற்றாக மாறி வெளியே தள்ளுகிறது. உதாரணமாக ஆக்ஸிஜன் ஒரு செல்லுக்குள் செல்லும் பொழுது கார்பன்டைஆக்ஸைடு ஆக மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது. உபயோகிக்க பட்ட காற்று, இரத்தம் வழியாக மீண்டும் நுரையீரலுக்கு வரும் பொழுது நுரையீரல் என்ற இரயில்வே °டேஷனில் இறங்கி மூக்கு என்ற பாதை

வழியாக வெளியே செல்கிறது. எனவே, நுரையீரல் என்பது உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் காற்று என்ற உணவு கொடுக்கும் அம்மா. அதே போல் கெட்ட காற்றை வெளியேற்றும் அம்மா.

தியானம் செய்யும் பொழுது நுரையீரல் குறைவாக வேலை செய்கிறது. ஓடும் பொழுது வேகமாக வேலை செய்கிறது. நுரையீரல் சொந்தமாக என்றும் வேலை செய்யாது. எத்தனை செல்களுக்கு (குழந்தைகளுக்கு) காற்று என்ற உணவு வேண்டுமென்று அடம் பிடிக்கிறதோ அந்த அளவுக்கு நுரையீரல் என்ற காற்று அம்மா வேலை செய்வார்கள். நுரையீரலின் இயக்கம் உடலிலுள்ள அனைத்து செல்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆ°துமா, மூச்சு அடைத்தல், வீசிங், நெஞ்சு சளி, இருமல் ஆகிய நோய்கள் வரும் பொழுது நாம் நுரையீரலில் சிகிச்சை அளிக்கக் கூடாது. இவைகள் அனைத்தும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கிடையாது. உடலில் எத்தனை செல்களுக்குக் காற்று சம்பந்தப்பட்ட நோய் வருகிறதோ அப்பொழுது நுரையீரல் பாதிக்கப்படும். எனவே, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் காற்று சம்பந்தப்பட்ட குறையை நீக்கினால் நுரையீரலில் உள்ள நோய் குணமாகும்.

உதாரணமாக ஒருவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விட்டது. சிறுநீரகத்திலுள்ள செல்கள் தன் நோயைக் குணப்படுத்துவதற்காகக் காற்று வேண்டும், காற்று வேண்டும் என்று நுரையீரலிடம் கேட்கும். நுரையீரல் சிறு நீரகத்தின் செல்களுக்கு நோயைக் குணப்படுத்துவதற்காக காற்று கொடுத்துக் கொடுத்து நுரையீரல் கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. இப்பொழுது சொல்லுங்கள் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆ°துமா வீசிங் போன்றவை நுரையீரலில் சிகிச்சை அளிக்க வேண்டுமா? அல்லது சிறுநீரகத்தில் சிகிச்சை அளிக்க வேண்டுமா?. உடனே ஆ°துமா, வீசிங், என்பது சிறுநீரகத்தில் நோய் வந்தாதான் வரும் என்று தவறாக கணித்து விடாதீர்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. உடலில் எத்தனை இலட்சம் செல்களுக்கு நோய் ஏற்பட்டு அதற்குத் தீர்வாகக் காற்றை எதிர்பார்த்து செல்கள் காற்றைக் கேட்கிறதோ அப்பொழுது நுரையீரல் கெட்டுப் போகிறது.

எனவே, நுரையீரல் சம்பந்தப் பட்ட அனைத்து நோய்களுக்கும் நுரையீரலில் சிகிச்சை கொடுக்கக் கூடாது. தலைமுடி முதல் கால் நகம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் காற்று சம்பந்தப்பட்ட குறைகளை தீர்ப்பதன் மூலமாக மட்டுமே நுரையீரலில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். இது புரியாத மருத்துவர்கள் ஆ°துமா, வீசிங் போன்ற நோய்களுக்கு நுரையீரலில் தான் நோய் இருக்கிறது என்று தவறாக நினைத்து அங்கே ஆப்ரேஷன், °கேன் மற்றும் மருந்து மாத்திரைகளை கொடுத்து நோய்களைப் பெரிதுபடுத்துகிறார்கள். °துமா, வீசிங் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு ஒரு கேள்வி, நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரையின் டோ° போகப் போக அதிகமாகிறதா அல்லது குறைகிறதா? எப்பொழுது ஒரு மாத்திரையின் டோ° அதிகமாகிறதோ நீங்கள் நோயைப் பெரிதுபடுத்துகிறீர்கள். அது தவறான வைத்தியம் என்று பொருள். எனவே, நமது சிகிச்சையில் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைக்குத் தீர்வு காண்பதன் மூலமாக நுரையீரலில் வரும் அனைத்து நோய்களைக் குணப்படுத்த முடியும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.