86
இந்த செவிவழி தொடு சிகிச்சையினால் கடந்த 5 வருடங்களாக பல லட்சம் நோயளிகள் பயன் பெற்றுள்ளார்கள். இதை மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்து அதற்கு அவர்களாலான செயலை செய்தவர்கள் பலர்.
பல நாடுகளில், பல ஊர்களில் பல ஐயாக்கள் மற்றும் பல அம்மாக்கள், பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் “யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்று மற்றவர்களுக்கு கிடைக்க உதவி செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் ஆத்ம நன்றிகள் பல. அவர்களின் பெயரை பட்டியலிட இடம் போதாது.
ஆனால் இந்த செவிவழி தொடு தொடு சிகிச்சையை அதிக மக்களுக்கு சேர்த்த பெருமை பாண்டிச்சேரியில் வசிக்கும் முன்னாள் துணை மேயர் திரு. ஜான்குமார் ஐயாவையே சேரும். அவரின் இந்த சேவை உள்ளத்திற்கு எனது சிறப்பு நன்றிகள். மேலும் ஐயாவின் மூலம் பாண்டிச்சேரி மக்களுக்கு கிடைத்ததை போல விரைவில் உலக மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே நன்றி, நன்றி, நன்றி, திரு. ஜான்குமார் ஐயா அவர்களுக்கு.
டி.வி.டி. மற்றும் புத்தகங்களை விநியோகம் செய்யும் அனைவருக்கும், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தவர்களுக்கும், செய்பவர்களுக்கும், பல வழிகளில் பலரை விழிப்படைய செய்பவர்களுக்கும் மற்றும் பலவழிகளில் உதவி செய்பவர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
சுபம்
இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்தவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக,
அன்பாக, ஆனந்தமாக, மகிழ்ச்சியாக, வளமாக, அமைதியாக, நிம்மதியாக மற்றும்
சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
“எண்ணம் போல் வாழ்க்கை‘
`ஹீலர் பாஸ்கர்
சுபம் –