9
டி.பிக்கு மருத்துவம் செய்து அதை குணப்படுத்தாமல் பல வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் கேன்சர் என்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.
இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது என்றால் தும்மலுக்கு வைத்தியம் பார்த்தால் மூக்கு ஒழுகும் நோய் வரும். மூக்கு ஒழுகும் நோய்க்கு வைத்தியம் பார்த்தால் சளி பிடிக்கும். சளிக்கு வைத்தியம் பார்த்தால் நெஞ்சு சளி வரும். நெஞ்சு சளிக்கு வைத்தியம் பார்த்தால் இருமல் வரும். இருமலுக்கு வைத்தியம் பார்த்தால் வீசிங் வரும் வீசிங்கிற்கு வைத்தியம் பார்த்தால் ஆ°துமா வரும். ஆ°துமாவிற்கு வைத்தியம் பார்த்தால் டி.பி. வரும். டி.பிக்கு வைத்தியம் பார்த்தால் கேன்சர் வரும். ஆனால் கேன்சர் வந்தபிறகு இதற்கு காரணம் தெரியவில்லை. இதை குணப்படுத்த முடியாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் உடல் கழிவை வெளியே தூக்கி வீசும்பொழுது அதற்கு ஒரு நோய் என்று பெயர் வைத்து அந்த நோயை குணப்படுத்துவற்கு வைத்தியம் செய்கிறோமல்லவா?, அந்த வைத்தியம் தான் இதற்கு காரணம்.
எனவே மேலே குறிப்பிட்ட எந்த ஒரு விஷயமும் நோயே கிடையாது. உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு முயற்சியை செய்யுமே தவிர, நோயை உண்டு பண்ணுவதற்கு எந்த ஒரு முயற்சியும் செய்யாது. எனவே இனிமேல் தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி இது மூன்றும் வரும்பொழுது இதை வெளியேற்றிவிட்டால், அதன் பிறகு வரும் கொடுமையான நோய்களிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம். இன்று முதல் கூச்சப்படாமல் மூக்கில் எந்த கழிவு வெளியே வந்தாலும் அதை வெளியேற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள். உள்ளே வைத்துக் கொள்வதற்கு எந்த ஒரு வேலையும் செய்யக்கூடாது. இன்றிலிருந்து ஆரம்பித்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த கழிவுகள் வெளியே வந்து உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.