"

11

இப்படி வாந்தி வரும்பொழுது அதை வெளியே அனுப்பாமல் வயிற்றை ஜீரணம் செய்வதற்காக எதாவது ஒரு வைத்தியம் செய்தால் அந்த வாந்தி ஜீரணமாகி சிறுகுடல் பெருங்குடல் மற்றும் இரத்ததில் கலக்கும். இப்படி வாந்திக்கு மருத்துவம் செய்தால் சில நாட்களுக்கு பிறகு இந்த கழிவு பொருட்கள் உடலில் தங்கி கெட்டியாகி மலச் சிக்கலை உண்டு செய்யும். இப்படி குடல் பகுதிகளில் கழிவுப்பொருள் அதிகமாகி தேங்கும்பொழுது நமது உடல் குடலைச் சுத்தம் செய்வதற்காக ஒரு சுரப்பியை சுரக்கவைக்கும். அதற்கு பெயர் வயிற்றுப்போக்கு சுரப்பி. சிலருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்கு என்பது ஒரு நோய் கிடையாது. பல நாட்களாக ஒழுங்காக மலம் போகாமல் அடைபட்டுக் கிடக்கும்பொழுது உடலில் உள்ள மருத்துவர் ஒரு நாள் முடிவு செய்து இந்தக் கழிவுகளை வெளியேற்றுவதற்காக சில சுரப்பிகளைச் சுரக்கவைத்துக் குடலில் உள்ள அனைத்துக்கழிவுகளை கழுவி சுத்தம் செய்து வெளியே அனுப்பும். குடல் சுத்தம் செய்யும் ஒரு சிசிக்சைக்கு பெயர்தான் வயிற்றுப்போக்கு.

ஆனால் நம்மில் பலர் இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே பயப்படுகிறோம். இப்பொழுது என்ன வெளியில் செல்கிறது? மானம், மரியாதையா போகிறது? மலம்தானே போகிறது. போனால் போகட்டுமே என்றாவது சிறுகுடல் பெருங்குடல் வெளியே வந்து விழுந்திருக்கிறதா நேரம் பார்த்து சாப்பிடுகிறோமே நேரம் பார்த்து மலம் கழிக்கிறோமா? நாம் எப்பொழுதும் நம் உடலுக்குள் உள்ளே செல்லும் பொருளை மட்டுமே யோசித்து அனுப்பிக் கொண்டிருக்கிறோம். உடல் என்றுமே கழிவுப்பொருட்ளை வெளியேற்றும் வேலையை மட்டுமே செய்கிறது. தினமும் ஒழுங்காக மலம் செல்பவருக்கு எப்பொழுதும் வயிற்றுப்போக்கு வரவே வராது. பல நாள் கழிவுகளை உடல் சுத்தம் செய்யும் ஒரு சுத்திகரிப்பே வயிற்றுப்போக்கு. எனவே எப்பொழுது வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதோ அது ஒரு நோய் அல்ல என்று புரிந்து கொண்டு வயிற்றுப்போக்கை நாம் அனுமதிக்க வேண்டும்.

இதில் ஒரே ஒரு பயம் என்னவென்றால் இரண்டு மூன்று முறை மலம் கழித்தால் உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டும்தானே அதற்கு ஒரு சிறிய வழி உள்ளது. வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நாம் நம் உடலுக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படும். இந்த

மூன்றையும் நாம் கொடுத்தால் உடல் சோர்வு ஏற்படாமல் நன்றாகத் தெம்பாக இன்னும் சிலமுறை மலம் கழிக்க முடியும். இந்த நேரங்களில் சாதாரண நீரில் பனங்கருப்பட்டி, வெல்லம், அச்சுவெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்ற ஏதாவது சர்க்கரையைக் கலந்து கொண்டு கல் உப்பு சிறிதளவு கலந்து நிறைய குடிக்க வேண்டும். ஆனால் வெள்ளைச் சர்க்கரை மற்றும் பொடி உப்பை தயவுசெய்து பயன் படுத்தாதீர்கள். அப்படி நாம் உடலுக்கு இந்த மூன்று விஷயத்தையும் அனுப்பினால் உடல் சந்தோஷப்பட்டு சீக்கிரமாகக் குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி நம்மை ஆரோக்கியப் படுத்தும்.

நன்றாகப் பரிசோதித்துப் பாருங்கள். வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நமக்கு மூத்திரம் அதிகமாக வராது. ஏனென்றால் மூத்திரம் வழியாக செல்ல வேண்டிய நீர் மலம் வழியாக சென்று கொண்டிருக்கும். மலம் தீர்ந்து விட்டது என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் மேற்கூறியவாறு திரவத்தைக் குடித்துக்கொண்டிருந்தால் மீண்டும் மீண்டும் மலம் வரும். ஒரு குறிப்பிட்ட நிலையில் அதிகமாக மூத்திரம் வரும். எப்பொழுது குடித்த நீர் மூத்திரமாக மட்டுமே அதிகமாக வருகிறதோ? நம் வயிற்றுப்போக்கு முற்றிலும் குணமடைந்து விட்டது என்று பொருள். நமது வயிறு குடல் ஆகியவை சுத்தமாக சுத்தப்படுத்திவிட்டது என்று புரிந்துகொண்டு இந்த உப்பு சர்க்கரை கரைசலை நிறுத்தவேண்டும். சிறிது நேரத்தில் நன்றாக பசி உண்டாகும். அப்பொழுது முதலில் கஞ்சி அல்லது இயற்கை உணவுகளை சாப்பிட வேண்டும். அடுத்தவேளை இட்லி பொங்கல் போன்ற லேசான உணவுகளை சாப்பிடவேண்டும். அடுத்தவேளை வழக்கம்போல நமது இயல்பான உணவை சாப்பிடலாம். இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நம் உடலுக்கு உதவி செய்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

ஆனால் நம்மில் பலர் வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது மருந்து மாத்திரை மற்றும் பாட்டி வைத்தியத்தை பயன்படுத்தி அதை நிறுத்த முயற்சி செய்கிறார்கள். 1) நீர் 2) குளுகோ° இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது நீங்கள் மருந்து மாத்திரையால் அதை நிறுத்தினால் நமது கழிவை நமது உடலிலேயே தங்குவதற்கு நாம் அனுமதிக்கிறோம் என்று அர்த்தம். இப்படி யார்யாரெல்லாம் மலத்தை உடலுக்குள் வைத்துக் கொள்கிறீர்களோ அதற்கு பெயர்தான் நோய். எனவே வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது அதை நிறுத்தக்கூடாது. அதை நிறுத்துவதற்கு நாம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அந்த சிகிச்சைக்குப் பெயர் தான் நோய்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.