12
இப்படி மூக்கின் வழியாக சளியாகவும், வாயின் வழியாக வாந்தியாகவும், மலக்குடல் வழியாக மலமாகவும் வெளியேறும் கழிவுகளை சிகிச்சை என்று நாம் நிறுத்தி வைப்பதால் உடலுக்குள்ளே தங்க அனுமதிப்பதால் நம் உடலில் கழிவுகள் அதிகமாகிறது. எந்த வழியாகவும் வெளியே செல்லமுடியாத கழிவுகள் அதிகமாகும் பொழுது நாம் அதை வெளியேற அனுமதிக்காதபொழுது நம் உடல் ஒரு முடிவு எடுக்கிறது. நம்மை படுக்கவைத்து உடலிலுள்ள அனைத்து கழிவுகளையும் வெப்பப்படுத்தி போகிப் பண்டிகையின்போது பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்குவதுபோல நமது உடல் கழிவுகளை வெப்பப்படுத்தி காற்றாக மாற்றி மூக்கின் வழியாக இந்தக் காற்றை வெளியே அனுப்பும் ஒரு அற்புதமான கழிவு நீக்க சிகிச்சைதான் காய்ச்சல்.
காய்ச்சல் என்பது ஒரு நோயே கிடையாது. காய்ச்சலை ஒரு நோய் என்று கூறுபவர்கள் மருத்துவரே கிடையாது. ஏனென்றால் உடல் பார்க்கும் மருத்துவத்திற்கு பெயர்தான் காய்ச்சல். ஒவ்வொரு மனிதனுடைய உடல் வெப்பநிலையும் 24 மணிநேரமும் 37 டிகிரிசெண்டிகிரேட் இருக்கும் அதாவது 98.4 டிகிரி பாரன் ஹீட். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த நாட்டில் வசித்தாலும், உங்களது வெப்பநிலை 37 மட்டுமே இருக்கும். இப்படி ஒவ்வொரு விலங்கிற்கும் பறவைக்கும் ஒவ்வொரு வெப்ப நிலை இருக்கும். இப்படி இமயமலை போன்ற குளிர் பிரதேசத்திற்கு சென்றாலும் 370 இருக்கும், வெயில் நாட்டிற்கு சென்றாலும் 37 0 இருக்கும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நமது உடலில் ஒரு உறுப்பு இருக்கிறது. அதன் பெயர் உடல் வெப்பக்கட்டுப் பாட்டு உறுப்பு. இதனது வேலை நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் 24 மணிநேரமும் 37 டிகிரி மெயின்டைன் செய்வது.
இப்படி அறிவுடன் இயங்கிக் கொண்டிருக்கும், நமது உடல் அறிவுக்கெட்டத்தனமாக திடீரென்று 101, 1020 என்று வெப்பநிலை அதிகரித்தால், இதற்குக் காரணம் என்ன? உடல் அறிவுகெட்டதனமாக வெப்பத்தை அதிகரிக்கவில்லை. அறிவுடன் நம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்று வதற்காக இந்த வெப்பநிலை அதிகரிக்கிறது. நமது உடலுக்கு தேவை என்பதால் அதிகரிக்கிறது.எனவே காய்ச்சல் வரும்பொழுது வெப்பநிலை அதிகரிப்பதால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படுமே தவிர நாம் அதைப் பார்த்து பயப்பட அவசியமில்லை.
நீங்கள் காய்ச்சல் வரும்பொழுது சோதித்துப்பாருங்கள் மூக்கின் வழியாக அதிகப்படியான காற்று வெளியேறிக் கொண்டிருக்கும். நீங்கள் மூக்கிற்கு அருகில் ஒரு வெள்ளைத்துணியை வைத்துப்பார்த்தால், அந்த வெள்ளைத் துணியில் மஞ்சள் நிற படிவங்கள் தோன்றும். ஏனென்றால் சாதாரணமாக மூச்சுக்காற்றில் கழிவுகள் வெளியே வராது. காய்ச்சல் இருக்கும்பொழுது கழிவுகள் மூக்கின் வழியாக வெளியேறுவதால் இந்த மஞ்சள் கறை ஏற்படுகிறது. எனவே புரிந்து கொள்ளுங்கள். காய்ச்சல் என்பது ஒரு நோயே கிடையாது. காய்ச்சல் என்பது உடல் பார்க்கும் வைத்தியம். எனவே காய்ச்சல் வரும்பொழுது நாம் என்ன செய்யவேண்டும் என்றால், முதலில் உடல் சோர்வாக இருக்கிறது. எனவே உடல் நம்மிடம் கூறுகிறது வேலை செய்யாதீர்கள். உடல் சோர்வாக இருக்கிறது. ஓய்வு எடுங்கள் என்று அதை புரிந்து கொண்டு படுக்கையில் படுக்க வேண்டும்.
ஃபோம் பெட், சோபா போன்ற பொருட்களில் படுக்கக்கூடாது. கோரைப்பாயில் அல்லது ஈச்சம்பாயில் மட்டுமே படுக்கவேண்டும். தேவைப் பட்டால் பருத்தி அல்லது இலவம்பஞ்சு மெத்தையில் படுத்துக்கொள்ளலாம். நைலான் ரப்பர் சீட்டுகளில் படுக்கக்கூடாது. காற்றோட்டமான இடத்தில் படுக்கவேண்டும். டி.வி. பார்ப்பது. செல்போன் பேசுவது போன்ற வேலைகளை தவிர்க்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். கம்பளி அல்லது போர்வை மூலமாக உடலைப் போர்த்தி வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். பலர் காய்ச்சல் வரும்பொழுது பச்சைத் தண்ணீரில் தலைக்கு குளித்தால் உடனே சரியாகிவிடும் என்று வைத்தியம் கூறுவார்கள். இது ஒரு தவறான வைத்தியம். காய்ச்சல் இருக்கும் பொழுது பச்சைத் தண்ணீரில் தலைக்குக் குளித்தால், உடனே காய்ச்சல் குணமாவதைப் போல் தோன்றும். ஆனால் குணமாவது கிடையாது. நமது உடல் தேவை என்று வெப்பநிலையை அதிகப்படுத்தி வைத்திருக்கும் பொழுது நீங்கள் தலைக்கு தண்ணீர் ஊற்றும் பொழுது நீங்கள் அந்த வெப்பநிலையை குறைக்கிறீர்கள். எனவே உடல் பயந்துபோய் நான் இப்பொழுது செல்கிறேன். மீண்டும் வந்து உனக்கு காய்ச்சலை கொடுப்பேன் என விலகிச்செல்கிறதே தவிர குணப்படுத்திச் செல்லவில்லை.
இப்படி உடல் தன் வெப்பநிலையை வேண்டுமென்று அதிகப்படுத்தி வைக்கும் பொழுது நாம் அதைக்குறைக்கக்கூடாது. சிலர் ஒரு துணியில் பச்சைத்தண்ணீரில் பிழிந்து கக்கத்தில் வைத்துக்கொண்டால் காய்ச்சல் குறையும் என்று கூறுவர். இதுவும் தவறான வைத்தியம். இப்படிச் செய்யக்கூடாது. அதாவது நமது உடலின் வெப்பநிலையை அதிகரித்து நோயை குணப்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது அதைக் குறைப்பதற்கு முயற்சி செய்யகூடாது. நாம் பொதுவாக காய்ச்சல் வந்தால் ஒரு மருத்துவரிடம் செல்வோம். உலகில் மருத்துவர்கள் ஒரு ஊசி போடுவார்கள். ஏதாவது ஒரு மருந்து மாத்திரை கொடுப்பார்கள். ஊசி போட்ட அடுத்த ஒரு மணி அல்லது மூன்று மணி நேரத்தில் நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் உங்களுக்கு வியர்வை குப்பென்று வரும். நன்றாக வியர்வை வந்தவுடன் உங்கள் காய்ச்சல் காணாமல் போய்விடும்.
நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் எடுத்துக் கொண்ட ஊசி அல்லது மருந்து மாத்திரை மூலமாக நோய் குணமாகிவிட்டது என்று. அது தவறு. காய்ச்சலுக்காக உலக மருத்துவர்கள் கொடுக்கும் ஊசியில், மருந்து மாத்திரையில் காய்ச்சலை அதாவது நோய்கிருமியை குணப்படுத்தும், நோய்கிருமியை அழிக்கும் எந்த ஒரு மாத்திரை மருந்தும் இருப்பதில்லை. நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பியை வேலைசெய்ய வைப்பதற்கான மருந்துகள் மட்டுமே இருக்கிறது. இந்த மருந்துகள் திடீரென நம் உடலில் உள்ள அனைத்து வேர்வை சுரப்பியையும் சுரக்க வைத்துவிடும். நம் உடல் பயப்படுகிறது. நமது உடல் நாம் சிரமப்பட்டு அதிகப்படுத்திய வெப்பத்தை யாரோ நமது அனுமதியில்லாமல் வியர்வை சுரப்பியை துhண்டிவிட்டு குறைத்து விட்டார்களே என்று நம்மை திட்டிக்கொண்டு என்று கூறிவிட்டுத்தான் செல்கிறது.
இப்படி யார்யாரெல்லாம் காய்ச்சல் வரும்பொழுது பாட்டி வைத்தியம் அல்லது தவறான மருந்துகளைப் பயன்படுத்தி காய்ச்சலை குணப்படுத்துவதாக கற்பனை செய்து கொண்டிருக்கிறார்களோ அது நமக்கு நாமே நம் உடலுக்கு செய்யும் துரோகம் ஆகும். எனவே காய்ச்சல் வரும் பொழுது நமக்கு நாக்கு கசக்கிறது. இப்பொழுது உங்கள் நாக்கு கசக்கிறதா? இல்லை காய்ச்சல் வரும்பொழுது மட்டும் ஏன் கசக்கிறது என்றால் நமது உடல் நம்மிடம் பேசுகிறது. தயவுசெய்து எதையும் சாப்பிட வேண்டாம். ஆனால் நாம் என்ன செய்வோம் சாதாரணமாக பலவேலை செய்யும்பொழுது இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுவோம். ஆனால் நமக்குக் காய்ச்சல் வரும்பொழுது நம்மை சுற்றி பால், ரொட்டி, பன், பி°கட், பழவகைகள் அனைத்தையும் வைத்துக் கொண்டு நிறைய சாப்பிடுவோம். எப்பொழுது சாப்பிட வேண்டுமோ அப்பொழுது குறைவாக சாப்பிடுகிறோம். எப்பொழுது சாப்பிடவே கூடாதோ அப்பொழுது நிறைய சாப்பிடுகிறோம்.
நாக்கு கசக்கும்பொழுது தயவுசெய்து எதையும் சாப்பிடாதீர்கள். அப்பொழுது சாப்பிடும் பொழுது உடல் தன் காய்ச்சலை தனது நோயை அதிகப்படுத்திக்கொள்கிறதே தவிர குறைப்பது கிடையாது. சாப்பிட்டவுடன்
சிலருக்குக் காய்ச்சல் குறைந்தது போல் தோன்றும். அது அப்படி அல்ல. சாப்பிட்டவுடன் அந்தச் சாப்பாட்டை ஜீரணம் செய்வதற்காக உடல் காய்ச்சலை தள்ளிப்போடுகிறது. இந்த ஜீரண வேலை முடித்தவுடன் மீண்டும் காய்ச்சல் வரும். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எப்பொழுது ஒரு மனிதனுக்கு காய்ச்சல் வந்து நாக்கு கசக்கிறதோ அப்பொழுது உணவு தேவையில்லை. அப்பொழுது உணவு வாயின் வழியாக உள்ளே சென்றால் அது நோயைப் பெரிதாக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே அந்த நேரங்களில் சாப்பிடக்கூடாது. படுத்து ஒய்வு எடுக்க வேண்டும். தாகம் எடுத்தால் லேசாக சூடு செய்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும் தண்ணீரைக் கொதிக்க வைக்கக்கூடாது. ஏன் கூடாது என்பதை இந்தப் புத்தகத்தில் தண்ணீர் சம்பந்தப்பட்ட தலைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதைப் படித்துக் புரிந்துகொள்ளுங்கள். அடுப்பில் வைத்த தண்ணீரை குடிக்கும் சூடு வந்தவுடன் உடனே எடுத்துக் குடித்துவிடவேண்டும். பசி எடுத்தால் அரிசி கஞ்சி, கோதுமை கஞ்சி மற்றம் இயற்கையான பழ வகைகள் அல்லது சமைக்காமல் சுவையாக சாப்பிட முடியும் காய்கறிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர பால், ரொட்டி, பன், பி°கட் போன்ற எந்த பொருளை எடுத்துக்கொண்டாலும் அது உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும்.
ஆனால் மருத்துவமனைகளிலும், மருத்துவர்களும் காய்ச்சல் வந்தால் பால்,
ரொட்டி சாப்பிட சொல்கிறார்கள். நமது அரசு மருத்துவமனையிலும் அதைத்தான் கொடுக்கிறார்கள். இந்த பொருட்கள் அனைத்தும் குளிர் பிரதேசங்களிலுள்ள நாடுகளான வெப்ப நிலை குறைவான மைன° 10 டிகிரி 20 டிகிரி உள்ள நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நாடுகளில் பயன்படுத்தி வந்த அந்தப் பழக்கத்தை மித வெப்ப நாடுகளிலும் மிக அதிகமான வெப்பம் உள்ள நாடுகளிலும் அதைப் பயன்படுத்தும்பொழுது உடலுக்கு அது கெடுதலை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனவே காய்ச்சல் வந்தால் சந்தோஷப்படுங்கள். ஒருவருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமான நேரத்தில் மட்டும்தான் காய்ச்சல் வரும். ஒரு காட்டுக்குள் நான்கு தீவிரவாதிகள் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அவர்களைப் பிடிப்பதற்காக இரண்டு போலீசை தடியுடன் அனுப்பினால் என்ன செய்வார். காட்டிற்குள் சென்று பார்ப்பார்கள். அங்கே நான்கு தீவிரவாதிகள் கையில் கத்தியுடன் இருந்தால் திரும்பி வந்து விடுவார்கள். சண்டை போட மாட்டார்கள். மீண்டும் நான்கு போலீசுக்குக் கத்தியைக் கொடுத்து அனுப்பும் பொழுது அங்கே நான்கு தீவிரவாதிகளும் துப்பாக்கியுடன் இருந்தால், திரும்ப வந்து விடுவார்கள். மீண்டும் நான்கு போலீசுக்குத் துப்பாக்கி கொடுத்து அனுப்பும்பொழுது அங்கே பத்துத் தீவிரவாதிகள் ஏ.கே 47 உடன் இருந்தால் திரும்பி வந்துவிடுவார்கள்.
இதிலிருந்து நாம்புரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், நம்மை விட நமது எதிரி பலசாலியாக இருக்கும் பொழுது நாம் என்றுமே சண்டையிடமாட்டோம். ஆனால் இப்பொழுது 15 போலீ°காரர்கள் ஏகே47 உடன் செல்லும் பொழுது அங்கே நான்கு தீவிரவாதிகள் கத்தியுடன் இருந்தால் கண்டிப்பாக சண்டையிட்டு ஜெயித்துவிடுவார்கள். இதைப் புரிந்து கொண்டால் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை புரிந்து கொள்ள முடியும்.
ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறது என்றால் நமது நோயின் அளவை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது என்று சந்தோஷப்பட்டு உங்கள் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் தயவு செய்து பாயாசம் செய்து பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுங்கள்.
ஆனால் காய்ச்சல் வந்தவருக்கு மட்டும் கொடுக்கவே கூடாது. ஒரு சிலருக்கு பலவருடமாக காய்ச்சல் வரவே இல்லை என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். இவர்கள் ஒன்று ஆரோக்கியமாக இருப்பார்கள். அல்லது நோய் எதிர்ப்புத் தன்மை சுத்தமாக ஒன்றுமே இல்லவாதவர்களாக இருக்க வாய்ப்புள்ளது. இவர்களுக்கு திடீரென வரும் காய்ச்சல் மிகக் கொடுமையானதாக இருக்கும். எனவே ஒவ்வொரு முறை காய்ச்சல் வரும் பொழுது எந்த ஒரு மாத்திரை மருந்தும் எடுக்காமல் இருந்தால் மட்டுமே நமது உடல் ஆரோக்கியமான தாக இருக்கும். ஏனென்றால் காய்ச்சல் என்பது நோயும் கிடையாது. அதற்கு சிகிச்சையும் கிடையாது. ஏனென்றால் காய்ச்சல் என்பதே சிசிக்சைதான்.
குழந்தை மற்றும் பெரியவர்களுக்குக் காய்ச்சல் அதிகமாகும் போது வெப்பநிலை அதிகரிக்கும்பொழுது வலிப்பு வந்து ஆபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரே போய்விடுகிறது என்று சிலருக்கு அச்சம் ஏற்படலாம். இதைத் தடுப்பதற்கு ஒரு சுலபமான வழி உண்டு. காய்ச்சல் வரும்பொழுது மூளை பகுதியில் வெப்பம் அதிகரித்தால் மட்டும் வலிப்பு வரும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். உடலில் எந்த உறுப்புகளிலும் வெப்பம் அதிகரித்தாலும் இந்த ஆபத்து வராது. எனவே காய்ச்சல் நேரங்களில் ஒரு வெள்ளை பருத்தித் துணியை எடுத்து அதை நெற்றி அளவிற்கு மடித்து சாதாரண பச்சைத்தண்ணீரில் நனைத்துப் பிழிந்து அதை நெற்றியின்மேல் பத்து போடவேண்டும். வெப்ப நிலை அதிகமாகும்பொழுது அந்த துணி காய்ந்து விடும். காய்ந்தவுடன் மீண்டும் நீரில் நனைத்து நெற்றியின் மேல் வைத்து விடவேண்டும். இப்படிச் செய்யும்பொழுது மூளைப்பகுதிக்கு மட்டும் வெப்ப நிலை அதிகரிக்காமல் உடல் பகுதிக்கு மட்டும் வெப்பநிலை அதிகரித்து வலிப்பு மற்றும் ஆபத்து ஏற்படாமல் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே நெற்றியில் பற்றுப்போடுபவர்களுக்கு யாருக்கும் வலிப்பு வந்ததே கிடையாது.
எனவே தயவு செய்து எப்பொழுது காய்ச்சல் வந்தாலும் நாம் மேலே கூறியுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி இரண்டு நாள் வீட்டில் ஓய்வு எடுத்து அலுவலகத்திற்கு பள்ளிக்கு விடுமுறை கொடுத்து நம் உடம்பை நாம் தான் குணப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆனால் நம்மில் பலர் மூன்று நாள் வீட்டில் படுக்க வேண்டுமா, எனக்கு நிறைய வேலை இருக்கிறது என்று கூறுகிறார்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள் உங்களுக்கு காய்ச்சல் வந்து பல டெ°டுகளை எடுத்து பின் உங்களுக்கு டைப்பாய்டு வந்து விட்டது, அட்மிட்டாகி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் பதினைந்து நாள் ஓய்வு எடுக்கிறீர்கள் அல்லவா? ஒரு நோய்க்கு பேர் வைத்து பூ வைத்து பொட்டு வைத்து அலங்காரம் செய்தால் மட்டும்தான் 10 நாள் படுப்பீர்களா? நோயின் பேர் தெரியாமல் உங்களால் அமைதியாக இருக்க முடியாதா? இது மனசு சம்பந்தப்பட்டது. மருத்துவமனையில் படுத்திருக்கும் பொழுது நாம் மருத்துவமனையில் இருக்கிறோம். மருத்துவர் இருக்கிறார். அவர் நமக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் உங்கள் நோயை குணப்படுத்து கின்றதே தவிர உண்மையில் நாம் தான் நம் நோயை குணப்படுத்துகின்றோமே தவிர எந்த மருந்து மாத்திரையும் உங்கள் காய்ச்சலைக் குணப்படுத்த முடியாது.
எனவே இந்தப் புத்தகத்தில் தடுப்பூசி என்ற தலைப்பில் படிக்கும்பொழுது உங்களுக்கு இது சம்பந்தமாக விளக்கமாகப் பல விஷயங்கள் தெரியவரும். இப்படி ஒவ்வொரு காய்ச்சலிலும் மருந்து மாத்திரையைப் பயன்படுத்தி நாம் காய்ச்சலை உள்ளே வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை வரும் காய்ச்சலும் சற்று பெரிதாகி கொண்டேயிருக்கும்.