13
மூக்கின் வழியாக, வாயின் வழியாக, மலத்தின் வழியாக மற்றும் காய்ச்சல் வழியாக வெளியேறும் கழிவுகளை நோய் என்று புரிந்து கொண்டு அதற்கு சிகிச்சை என்ற பெயரில் தவறான முறையில் கழிவுகளை உடலுக்குள் தங்க அனுமதிப்பதால் கடைசியாக உடல் எடுக்கும் முடிவு என்ன தெரியுமா? இந்தக் கழிவுகளை வியர்வை வழியாக வெளியேற்றுகிறது. இப்படிக் கழிவுகள் வியர்வை வழியாக வெளியே வரும்போது அது தோலில் தங்கி தோலில் அரிப்பு, புண் மற்றும் தோலிற்குக் கெடுதல் செய்து தோல் நோய்கள் உண்டாகிறது.
எப்பொழுது ஒரு மனிதனுக்குத் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதோ அவர் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமல் உடலில் தங்க வைத்துவிட்டார் என்று பொருள். எனவே தோல் நோய்களான சொரியாசி°, எக்ஸிமா போன்ற எந்த ஒரு தோல் நோய் இருந்தாலும், தயவு செய்து உடனே உடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றி தோல் நோயைக் குணப்படுத்த முடியும். இது புரியாமல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை உண்டும், லோசன் போன்ற பொருட்களை பயன்படுத்தினால் இந்தத் தோல் நோய் கண்டிப்பாகப் பெரிதாகும்.
தோலில் ஓரிடத்தில் வரும் கழிவை தோல் நோய் என்று புரிந்து கொண்டு அந்த இடத்தில் ஒரு மருந்தை தடவினால் அந்த இடத்தில் உள்ள புண்கள் ஆறிவிடும். ஆனால் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள். இந்த இடத்தில் வரும் கழிவை வேறு இடத்திற்கு செல்ல சொல்லி விட்டீர்கள். எனவே, உடலில் வேறு ஒரு பகுதியில் சில நாட்களுக்குப் பிறகு தோல் நோய் உண்டாகும். நாம் ஏற்கனவே பயன்படுத்திய மருந்து தோல்நோயைக் குணப்படுத்தி விட்டதாகத் தவறாக புரிந்து கொண்டு அந்த மருந்தை வேறு ஒரு இடத்தில் வந்த அந்த தோல் நோய்க்கு பயன்படுத்துவோம். இப்படித் தோலில் ஒவ்வொரு இடத்திலும் இப்படிமருந்தை பயன்படுத்திக் கொண்டே இருந்தால் கூடிய விரைவில் இந்நோய் பரவி பெரிய நோயாக மாறுகிறது. கடைசியாக தோலில் வரும் கழிவுகளை உள்ளே அனுப்புவதற்கு யாராவது வைத்தியம் பார்த்தால் அந்தப் பொருள் உள்ளே தங்கி இதைவிடப் பெரிதாக மாறுகிறது. தோல் நோய் உள்ள அனைவருக்கும் மலச்சிக்கல் இருக்கும். எனவே தோல் நோய்களை உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே குணபடுத்த முடியும்.