18
உங்கள் வீட்டுச்சமையலறையில் கோதுமைமாவு கெட்டு இருந்தால் கெட்டுப்போன மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி யாராவது சாப்பிட முடியுமா? இந்தக் கெட்டுப்போன சப்பாத்தி உருவானதற்குக் காரணம் சப்பாத்தியில் குறையா ? சப்பாத்தி செய்த நபரின் மேல் குறையா? சமையல் ரூமில் குறையா ? அல்லது கோதுமைமாவில் குறையா ? நாம் சப்பாத்தியில் ஆராய்ச்சி செய்தால் ஒன்றும் தெரியாது. சமையலறையிலுள்ள கோதுமைமாவை மாற்றி வைப்பதன் மூலமாக அல்லது தரத்தை உயர்த்துவது மூலமாக நாம் சப்பாத்தியை ஒழுங்குபடுத்த முடியும்.
அதே போல் கர்ப்ப காலத்தில் ஒரு தாயின் இரத்தத்தில் ஒரு பொருள் உதாரணமாக கால்சியம் கெட்டுப் போயிருந்தால் கெட்டுப்போன கால்சியத்தை எடுத்து வந்து கர்ப்பப்பையில் ஒரு குழந்தையின் உடல் உறுப்புகளை செய்யும் பொழுது குழந்தைக்கு எங்கெங்கெல்லாம் கால்சியம்
தேவைப்படுகிறதோ அந்த எல்லா இடங்களிலும் கெட்டுப்போன கால்சியம் வைத்து தயார் செய்யும் பொழுது அந்தக் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது. கால்சியம் என்பது ஒரு உதாரணத்திற்காக தான் சொல்லப்பட்டதே தவிர தயவு செய்து கால்சியம் என்ற ஒரு பொருளை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் ஏதாவதொரு பொருள் கெட்டுப் போயிருந்தால் அந்த கொட்டுப்போன பொருளால் உருவாக்கப்படும் ஒரு குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும். சிசேரியன் தான் நடக்கும். சமையலறையில் கோதுமைமாவு கெட்டுப் போனால் சப்பாத்தி கெட்டுப்போகும். அதே போல் கர்ப்ப காலத்தில் பெண்ணின் இரத்தத்தில் ஏதாவதொரு பொருள் கெட்டுப்போனால் அந்தக் கெட்டுப்போன பொருளால் உருவாக்கப்படும் ஒரு குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும்.
இரண்டாவது காரணம் . சமையலறையில் உப்பில்லை. இப்பொழுது எல்லா சமையலும் முடிந்துவிட்டது. எந்த உணவையும் யாராலும் சாப்பிட முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன ? சமைத்த பொருட்களில் குறையில்லை, சமைத்த நபரிடம் குறையில்லை, சமையலறையில் குறையில்லை, சமையலறையில் உப்பு இல்லை என்பது மட்டுமேகுறை. எனவே சமையலறையில் உப்பை வைப்பதன் மூலமாக இனிமேல் செய்யும் சமையலை நாம் ஒழுங்குபடுத்த முடியும். அதேபோல் கர்ப்ப காலத்தில் தாயின் இரத்தத்தில் ஜிங்க் என்றொரு பொருள் இல்லையயன்றால் அல்லது அளவு குறைவாக இருந்தால் குழந்தைக்கு எங்கெல்லாம் ஜிங்க் வைக்க வேண்டுமோ அது வைக்காமல் தான் குழந்தையை உருவாக்கியிருக்கும். எனவே குழந்தை ஊனமாக பிறக்கும். ஒரு உதாரணத்திற்காகதான் ஜிங்க் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஜிங்க் என்ற பெயரை மட்டும் ஞாபம் வைத்துக் கொள்ளாதீர்கள். இரத்தத்தில் ஒரு பொருள் அளவு குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
மூன்றாவது காரணம் . ஒவ்வொரு மனிதனுக்கும் அவரின் வயது, உடல் எடை, உயரம் போன்ற வியங்களைப் பொறுத்து இரத்தத்தின் அளவு இருக்கும். இந்த இரத்தத்தின் அளவு ஒரு வேலை குறைவானால் குழந்தை ஊனமாகப்பிறக்கும் ஏனென்றால் தாயிடம் இருக்க வேண்டிய இரத்தத்தின் அளவே குறைவாக இருந்தால் குழந்தைக்கு எப்படி இரத்தம் கொடுக்க முடியும் ? எனவே குழந்தை ஊனமாகத்தான் பிறக்கும் சிசேரியன் தான் நடக்கும்.
நான்காவது காரணம் . மனசுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும். கர்ப்ப காலத்தில் பெண்ணுடைய மனது பாதித்தால் குழந்தையின் உறுப்புகள் பாதிக்கும். அந்தத் தாய்க்கும் அவரது கணவருக்கும் சண்டை அல்லது குடும்ப பிரச்சனை. பணப்பிரச்சனை, மனதிற்குப் பிடிக்காத கல்யாணம், மாமியாருடன் சண்டை. இது
போன்ற மனப் பிரச்சனைகள், ஒரு வேளை அந்த தாய்க்கு கர்ப்ப காலத்தில் இருந்தால் குழந்தைக்கு அதன் பாதிப்பு ஏற்படும். மனசுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல பேருக்கு இது புரியும் சில பேருக்கு ஒரு வேளை மனதிற்கும், உடம்பிற்கும் தொடர்பு புரியவில்லையயன்றால் ஒரு சிறிய உதாரணம்.
ஒரு கணவருக்கு தன் மனைவி என் தாய் வீட்டுக்கு செல்கிறேன். வருவதற்கு 10 நாள் ஆகும். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று ஒரு போன் வந்தால் அவர் எவ்வளவு சந்தோப்படுகிறார். இப்பொழுது அவர் உடம்பிற்காக எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை. பானங்கள் ஏதும் குடிக்கவில்லை. மனதிற்கு சந்தோம் ஏற்பட்டவுடன் உடலுக்கு சந்தோம் ஏற்படுகிறதல்லவா ? அப்பாடா மனைவி 10 நாள் ஊருக்கு போறாங்க நிம்மதியா இருக்கலாமென்ற எண்ணம் மனதில் தோன்றியவுடன் சந்தேமடைகிறது. ஜனகராஜ் ஒரு படத்தில் சொல்வதை போல் “ஐ ! என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று குதிப்பதைப் போல குதிக்கிறதல்லவா? அதே சமயம் மீண்டும் மனைவி போன் செய்து நான் ஊருக்கு போகவில்லை எனக் கூறினால் உடனே மனம் வருத்தமடைகிறது. எனவே உடலுக்கும் மனதிற்கும் தொடர்பு உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் தாயின் மனது கெட்டுப் போனால் குழந்தை ஊனமாகப் பிறக்கும் அல்லது சிசேரியன் நடக்கும்.
ஐந்தாவது காரணம் . நம் உடலறிவுதான் உணவை குழந்தையாக மாற்றுகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த உடலறிவும் கெடுவதற்கு வாய்ப்புள்ளது. சில குழந்தைகள் ஆறு விரலுடன் பிறப்பார்கள். இரண்டு தலை ஒட்டிப் பிறப்பது, நான்கு கால்களுடன் மூன்று கண்களுடன் இதைப் போன்ற வித்தியாசமான குழந்தைகள் பிறப்பதை நீங்கள் டி.வி., பேப்பர் மூலமாகப் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம் உடலில் ஒரு அறிவு உள்ளது. அந்த அறிவுக்கு ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் அல்லது கெட்டுப் போனால் குழந்தை ஊனமாகப் பிறக்கும், சிசேரியன் நடக்கும்.
இதுவரை நாம் 5 காரணங்கள் பார்த்தோம்.
-
இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் கெட்டுப் போயிருந்தால். 2. இரத்தத்தில் ஏதாவது ஒரு பொருள் இல்லாமல் போனால் அல்லது குறைந்து போனால் 3. இரத்தத்தின் அளவு குறைவானால். 4. மனது கெட்டுப் போனால். 5. அறிவு ( உடலறிவு) கெட்டு போனால், குழந்தைகள் ஊனமாகவும். குறைபாடாகவும் மற்றும் சிசேரியன் நடப்பதற்கும் அடிப்படை காரணம் இந்த ஐந்துதான்.