21
இருதயத்தில் ஓட்டை எப்படி ஏற்படுகிறது? அதை எப்படி அடைப்பது?
என்பதைப் பற்றிப் பார்த்தோம்.
இனி இதே போல ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும் பார்ப்போம் என்று தயவு செய்து எண்ணிக்கொள்ளாதீர்கள் அப்படி நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள், ஏனென்றால் இந்த ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டால் இதே முறைதான் நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும், நோய் உறுப்பில் கிடையாது, இரத்தத்தில் தான் நோய். அதுவும் மேலே குறிப்பிட்ட ஐந்து காரணங்கள் தான் நோய். இது இருதயத்திற்கு மட்டுமல்ல உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும்.
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, நாம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் உங்கள் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம்.
பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கெடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப் படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்ததின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப் போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள கண்ணைக் குணப்படுத்தும் அறிவு கெட்டுப் போய்விட்டது.
கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, குளுகோமா, புரை மற்றும் பல நோய்களுக்கான காரணம் கண்ணில் கிடையாது. இரத்தத்தில் தான் நோய். எந்த மருந்தும், மாத்திரையும், ஆப்ரேஷனும் செய்யாமல் கண்ணாடி அணியாமல் கண்ணில் வரும் நோய்களைக் குணப்படுத்த முடியும். எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கண்ணில் வரும் அனைத்து நோய்களுக்கும் கண் காரணம் கிடையாது. இரத்தத்தில் தான் நோய், அதிலும் மேலே சொல்லப்பட்ட ஐந்தும் தான் காரணம். இந்த ஐந்தையும் சரிப்படுத்துவதன் மூலமாக நமது நோய்களை நாமே குணப்படுத்திக் கொள்ளலாம்.