27
நாம் சாப்பிடும் உணவு வாயில் ஜீரணமாகி வயிற்றில் ஜீரணமாகிச் சிறு குடலுக்கு செல்கிறது. சிறு குடலும் வயிற்றைப் போல் ஒரு ஜீரண உறுப்புதான் சிறு குடலில் ஜீரணமான சத்துப் பொருட்கள் உணவு உறிஞ்சிகள் என்ற உறுப்பு உறிஞ்சிக் கல்லீரலுக்குக் கொடுக்கிறது. நாம் சாப்பிடுகிற உணவில் மாவுச் சத்து, புரத சத்து, நார்ச் சத்து, உயிர்ச் சத்து வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை உள்ளன. உணவுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற பெயர்கள் வாய் வரைக்கும் மட்டும்தான் செல்லுபடியாகும். நாம் சாப்பிடுகிற அனைத்து வகை உணவும் சிறு குடலில் சத்துப் பொருட்களாக மட்டுமே மாறுகிறது. கல்லீரலுக்குச் செல்லும் சத்துப் பொருட்கள் கல்லீரல் என்ற இரயில்வே °டேஷனில் இரத்தம் என்ற இரயில் வரும் பொழுது சாப்பாட்டின் மூலமாகக் கிடைத்த சத்துப் பொருட்கள் இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் வழியாக உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலுள்ள செல்களுக்குச் செல்கிறது. செல்கள் சத்துப் பொருள்களை எடுத்துக் கொண்டு பயன்படுத்திய உடன் அது கழிவுப் பொருளாக மாறுகிறது. கழிவுப் பொருள் மீண்டும் இரத்தத்திற்கு வருகின்றன. கல்லீரல் இரத்தத்திலுள்ள கழிவுகளைக் கழிவு நீக்கும் மண்டலம் மூலமாக வெளியேற்றுகிறது.
எனவே, உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் உணவு கொடுக்கும் அம்மா தான் கல்லீரல். ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவை ஊட்டி விடுகிறார். அதே சமயம் கழிவு களை நீக்குகிறார். அதே போல் கல்லீரலின் வேலையும் ஒரு தாயின் வேலையை போன்றதே எனவே, எத்தனை செல்கள் உணவு வேண்டும் என்று கேட்கிறதோ கல்லீரல் அவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும். கல்லீரலில் ஒரு நோய் வந்தால் அது கல்லீரல் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. உடலில் எத்தனை ஆயிரம் செல்களுக்கு உணவு சம்பந்தப்பட்ட நோய் வருகிறதோ அதன் பிரதிபலிப்பு கல்லீரலில் தெரியும். எனவே, ஒரு நோய் கல்லீரலில் இருக்கிறது என்று தவறாக கணித்து கல்லீரலில் ஆப்ரேஷன் செய்வதும் கல்லீரலுக்குச் சிகிச்சை அளிப்பதும் சரியான வைத்திய முறையே கிடையாது. எனவே, யாருக்குக் கல்லீரலில் நோய் இருக்கிறதோ தயவு செய்து தலை முடி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் சரியான உணவு கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவது மூலமாக மட்டுமே கல்லீரல் நோயை குணப்படுத்த முடியும் என்று உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.