36
பிறகு உறுப்புக்களை வெட்டி எடுப்பார்கள். கடைசியாக மாத்திரையின் டோ° அதிகமாகி பிறகு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் டோ° கொடுக்க முடியாது என்ற போது இன்சுலின் என்ற திரவத்தை ஊசி வழியாக செலுத்தச் சொல்வார்கள். மாத்திரைக்கும் இன்சுலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மாத்திரை கணையத்திடம் சென்று கணையத்திடம் இருக்கும் இன்சுலினை எடுத்து கெட்ட சர்க்கரைக்கு கொடுக்கும். இன்சுலின் என்ன செய்யும் என்றால் கணையத்திடம் போகாது, கேட்காது. நேரடியாக இரத்தத்திலுள்ள கெட்ட சர்க்கரைகளுக்கு இன்சுலின் கொடுத்து விடும். எலி, பன்றி போன்ற விலங்குகளிடமிருந்து சுரக்கும் இன்சுலினை எடுத்து கடைகளில் விற்கிறார்கள். நாம் அதை வாங்கி நமது உடம்புக்குள் செலுத்திக் கொள்கிறோம். இப்படி சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரை, இன்சுலின் யார் யாரெல்லாம் பயன்படுத்துகிறோமோ அவர்கள் எல்லாமே கெட்ட சர்க்கரைக்கு நல்ல சர்க்கரை என்ற சர்டிபிகேட் கொடுத்து உடலிலுள்ள அனைத்து உறுப்புகளையும் கெடுக்கிறோமே தவிர இதனால் எந்தவொரு நன்மையும் கிடையாது. போகப்போக நோய் அதிகமாகிக் கொண்டே வருகிறதா ? இல்லை குணமாகிக் கொண்டு வருகிறதா ?
சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் மத மதப்பு, எரிச்சல், குத்துதல், குடைதல் போன்றவை ஏற்படும். இது ஏன் ஏற்படுகிறது என்றால் ஒரு பாட்டிலில் தண்ணீர் அதிக நேரம் எந்த இடத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும்?. பாட்டிலின் அடிப்பகுதியில் தான் அதிக நேரம் தண்ணீர் இருக்கும். பாட்டிலின் மேல் பக்கத்தில் குறைந்த நேரம்தான் தொட்டுக் கொண்டிருக்கும் அதைப் போல நமது உடல் ஒரு பாட்டில் போன்றது. இரத்தம் நீர் போன்றது. உடலிலுள்ள இரத்தம் முதலில் உள்ளங்காலை நோக்கித்தான் பாய்ந்து செல்லும், புவியீர்ப்பு விசையின் காரணமாக நமது உடலில் உள்ளங்கால்தான் இரத்தத்தில் உள்ள பொருட்களை முதன் முதலில் எடுக்கும். பிறகு மூட்டு, பிறகு இடுப்பு, பிறகு வயிறு, இப்படி மேல் நோக்கி செல்லும். எனவே, சர்க்கரை மருந்து, மாத்திரை இன்சுலினின் மூலமாகக் கிடைக்கும் கெட்ட சர்க்கரைகளை முதன்முதலில் உள்ளங்கால்தான் சாப்பிடுகிறது. கெட்ட
சர்க்கரையைச் சாப்பிடுவதால் உள்ளங் காலுக்கே முதன் முதலில் நோய் ஏற்படுகிறது. இது உள்ளங்காலில் இருக்கும் செல்கள் கெட்டுப் போவதால் ஏற்படுவதில்லை.உள்ளங்காலில் இருக்கும் செல்கள் செத்துப் போவதால் ஏற்படுகிறது.
கெட்டுப் போவதற்கும் செத்துப் போவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், நாம் உள்ளங்காலில் வலி வந்தவுடன் யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம், அக்குபஞ்சர், நீயுரோ தெரபி, முத்ரா, ரெய்க்கி போன்ற மருந்தில்லா மருத்துவத்திற்குச் செல்வோம். ஆனால், மருந்து மாத்திரையை மட்டும் விடமாட்டோம். சிறிது காலத்திற்குப் பிறகு இந்த மருந்தில்லாத மருத்துவத்தை நாம் திட்டுவோம். நான் யோகாவுக்குச் சென்றேன். அக்குபஞ்சருக்குச் சென்றேன். ஆனால், கால் வலி குறையவில்லை என்று ஆனால் நீங்கள் மருந்து மாத்திரையை நிறுத்தி விட்டீர்களா ? இல்லையா ? சர்க்கரை மருந்து, மாத்திரைகளை நிறுத்தாத வரையில் எந்த மருந்தில்லாத வைத்தியத்தாலும் உங்கள் நோயைக் குணப்படுத்த முடியாது. மருந்து மாத்திரைகள் மூலமாக உடலைக் கெடுக்கும் வேலையை மட்டும் சரியாக செய்து விட்டு மருந்தில்லாத வைத்தியத்திற்குச் சென்று ஏன் அதைக் குறை கூறுகிறீர்கள் ?
கால் மதமதப்பு, எரிச்சல் உள்ள நோயாளிகள் சிறிது காலத்திற்குப் பிறகு காலில் புண் தோன்றும். உடலில் எந்த இடத்தில் புண் வந்தாலும் ஆறிவிடும். ஆனால், உள்ளங்காலில் வந்த புண் மட்டும் ஆறாது. ஏனென்றால், உயிரைக் காப்பாற்றி கொள்ளவே முடியாத செல்கள் புண் வந்தால், நோய் வந்தால் எப்படித் தன்னை குணப்படுத்தும் ? பிறகு அந்த புண்ணிற்கு ஆபரேஷன் செய்வதற்கும், நாம் அதே மருத்துவரிடம்தான் செல்கிறோம். சில பேருக்கு உள்ளங்கால் மோசமாக பாதித்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். அதன் பிறகு, கட்டை விரலிலுள்ள செல்கள் அழுகிப் போய் கட்டை விரலுக்கு நோய் ஏற்படும். மருத்துவரிடம் சென்று காண்பித்தால் உங்களுக்கு சுகரினால்தான் கட்டை விரல் அழுகிப் போச்சு என்று கட்டை விரலை அறுத்து எடுப்பதற்கு ஆபரேசனுக்கு நாள் குறிப்பார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாராவது உங்கள் மருத்துவரிடம் சென்று நான் ஆரம்பத்தில் இருந்து உங்களிடம்தான் வந்தேன். நீங்கள்தான் சர்க்கரை நோய் வந்துவிட்ட தென்று சிறிய மாத்திரையைக் கொடுத்தீர்கள். நானும் சாப்பிட்டேன். சுகரை டெ°ட் செய்ய சொல்லி எனக்குக் கற்று கொடுத்தீர்கள். நானும், தினமும் டெ°ட் செய்து வந்தேன். மருந்து மாத்திரையின் டோ° அதிகமானது. நானும், அதிகப்படுத்திக் கொண்டேன். அன்று முதல் இன்று வரை தினமும் சரியாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். பிறகு உடலில் பல உறுப்புகளில் நோய் வருகிறதென்று புதுப்புது மருந்து மாத்திரையைக் கொடுத்தீர்கள். பிறகு இன்சுலின் என்ற ஊசியும் கொடுத்தீர்கள். தினமும் வாக்கிங் போகச் சொன்னீர்கள். நான் போய் கொண்டிருக்கிறேன். இனிப்பு சாப்பிடக் கூடாதென்று கூறினீர்கள். நான் கடந்த பத்து வருடமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒழுங்காகச் செய்தேனே , என்னுடைய கட்டை விரல் ஏன் அழுகிப் போனது என்று யாராவது உங்கள் மருத்துவரிடம் கேட்டீர்களா ?
உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்கிறேன். உங்கள் மருத்துவர் சொன்ன அனைத்தையும் ஒழுங்காக நீங்கள் செய்ததால்தான் உங்கள் கட்டை விரல் அழுகிப் போய் விட்டது.
கட்டை விரலை எப்பொழுது வெட்டி எடுக்கிறீர்களோ, தயவு செய்து இப்போதிருந்தே பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், சில மாதங்களுக்குப் பிறகு உங்கள் காலை வெட்டியெடுக்க வேண்டியது வரும். ஏனென்றால், நீங்கள் சர்க்கரை மாத்திரையை மட்டும் விடுவதில்லையல்லவா ? அடுத்து மூட்டு காலை வெட்ட வேண்டியது வரும். அடுத்தது தொடை அருகே வெட்ட வேண்டியது வரும். இப்படி எத்தனையோ பேர் தொடைகளை, கால்களை வெட்டி வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார்கள்.
இன்னுமாங்க புரியல சர்க்கரை நோயை எந்த மருந்து மாத்திரையாலும் குணப்படுத்த முடியாது என்று. சர்க்கரை நோய் என்பது நோயே கிடையாது. இதற்கு ஒரேயொரு தீர்வு வாயில் சாப்பிடும் உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டை வாய், வயிறு, சிறுகுடல் ஆகிய மூன்று இடங்களிலும் ஒழுங்காக ஜீரணம் செய்து தரம் வாய்ந்த வீரியம் வாய்ந்த நல்ல சர்க்கரையாக செய்து இரத்தத்தில் கலக்குவது எப்படி என்ற ஒரு சுலபமான ஒரு (டெக்னிக்கை) வித்தையைத் தெரிந்து கொள்வது மூலமாக மட்டுமே சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்.
நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடக் கூடாதென்கிறார்களே ? பத்து வருடமா சாப்பிடாமல் இருக்கிறீர்களே உங்கள் நோய் குணமாகி விட்டதா ? சர்க்கரை நோய்க்கும், இனிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, நமது சிகிச்சையில் சர்க்கரை நோயாளிகள் இனிப்புச் சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை வியாதி குணமாகும். அதாவது, சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நோய் வருவதில்லை. சர்க்கரையின் தரம் குறைவதால் மட்டுமே நோய் வருகிறது. எனவே, நாம் இனிப்பு, எண்ணெய் பலகாரம், உருளைக் கிழங்கு போண்டா, சாப்பாடு, சப்பாத்தி எதுவாக இருந்தாலும் எப்படி சாப்பிட வேண்டுமென்ற வித்தையைக் கற்றுக் கொண்டு அதன்படி சாப்பிட்டால் நல்ல சர்க்கரை இரத்தத்தில் கலக்கும் பொழுது இயற்கையாகவே இன்சுலின் சுரந்து விடும். எனவே, சர்க்கரை நோயை உடனடியாகக் குணப்படுத்த முடியும்.
எனவே, சர்க்கரை அதிகமாக உள்ளதென்று தயவு செய்து யாரும் பயப்படவேண்டாம். யாருடைய உடம்பில் நிறைய சர்க்கரைகளைச் சேர்த்து வைக்கிறீர்களோ, உங்கள் உயிர் காப்பாற்றப்படும். ஒருவர் இரவு 10 மணிக்கு ஒரு காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகி ரோட்டில் கீழே விழுந்து கிடக்கிறார். அவரைக் காப்பாற்ற யாரும் கிடையாது. காலை பத்து மணிக்கு அவரைப் பார்த்து காப்பாற்றினால் அவருடைய உடம்பில் கிளைக்கோஜன் என்ற சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்திருந்தால் அவர் இரவு பத்து மணி முதல் காலை பத்து மணி வரைஅந்த சர்க்கரை இரத்தத்தில் விநியோகம் செய்வது மூலமாக உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். யாருடைய உடம்பில் அதிக சர்க்கரை சேமித்து வைக்கப்படுகிறதோ, அவர்களுக்குப் பல மணி நேரம் ஆபத்தின் பொழுது உயிரை காப்பாற்ற முடியும்.
இப்படி சர்க்கரை நார்மல் என்ற பெயரில் யார் யாரெல்லாம் சர்க்கரையை
ஒழுங்காக வைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ உங்கள் உடம்பில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையே இருக்காது. சர்க்கரைக்குப் பல வருடங்கள் மருந்து மாத்திரை சாப்பிடுவர்கள் மருத்துவமனையின் முன்பாக விபத்து ஏற்பட்டால் உள்ளே செல்வதற்குள் உயிர் போக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீங்கள் உங்கள் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு நகை வைத்திருக்கிறீர்கள். எவ்வளவு இடம், சொத்து வைத்திருக்கிறீர்கள் என்பது வெளி உலகத்திற்கான சொத்து. உடலில் எவ்வளவு கிளைக்கோஜன் என்ற சேமிக்கப்பட்ட சர்க்கரை இருக்கிறதோ, அதுதான் உயிரின் சொத்து.
எனவே, தயவு செடீநுது நன்றாக சாப்பிடுங்கள். சர்க்கரை உள்ள பொருட்களை நிறைய சாப்பிடுங்கள். கிளைக்கோஜன் நிறைய சேர்த்து வையுங்கள். உங்கள் உயிர் காப்பாற்றப்படுமே தவிர உங்களுக்கு நோய் வராது. சர்க்கரை அதிகமானால் நோய் என்று கூறுகிறார்களே அவசர காலத்தில் யாராவது உடலுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்றால் வெளியில் வரும் பொழுது பெருமையாக சொல்கிறீர்களே மருத்துவமனையில் எனக்கு 16 பாட்டில் குளுகோ° டப்பா மாட்டினார்கள் என்று. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உயிரை காப்பது குளுகோ° டப்பாதானே ! அப்பொழுது உயிரைக் காப்பது சாக்கரைதானே. ஓவ்வொரு செல்லுக்கும் அடிப்படை தேவையான ஒரு சர்க்கரையை சேர்த்து கொள்ள கூடாதென்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
-
சுகர் – ப்ரீ சாப்பிடலாமா?
சுகர் ப்ரீ (ளுரபயச குசநந) சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். ஒரு உணவில் சர்க்கரை இருக்கிறது என்பதற்காகத் தான் நாம் உணவைச் சாப்பிடுகிறோம். நமது உடலுக்கு சர்க்கரை தேவை என்பதால்தான் சாப்பிடுகிறோமே தவிர வேறு ஒரு காரணமும் இல்லை. சுகர் குசநந என்ற ஒரு பொருள் குப்பையில் கொட்ட வேண்டிய ஒ ரு b ப h ரு ள் . எ ப் b ப h ழு து ஒ ரு உ ண வி ல் கார்போஹைட்ரேட் என்ற சர்க்கரை இல்லையோ, அது உடலுக்கு தேவையே கிடையாது. எனவே, தயவு செய்து, சுகர் குசநந என்ற பெயரில் எதையுமே சாப்பிடாதீர்கள். சர்க்கரை என்றால் என்ன ? செல்கள் என்றால் என்ன ? உடல் எவ்வாறு இயங்குகிறது ? என்று தெரியாத, புரியாதவர்கள் பேசும் பேச்சு அது. ஒரு உணவில் சர்க்கரை இருந்தால் மட்டும்தான் அது உணவு. சர்க்கரை இல்லாத எந்தவொரு பொருளும் உணவே கிடையாது. அரிசி சாதம் சாப்பிடாதீர்கள்; அதில் சர்க்கரை அதிகமாக உள்ளது. சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். அரிசி சாதத்திலும் சர்க்கரைதான் உள்ளது. சப்பாத்தியிலும் சர்க்கரைதான் உள்ளது. சரி வட இந்தியாவில் அனைவரும் சப்பாத்தி சாப்பிடுகிறார்களே, அவர்களுக்கு ஏன் சர்க்கரை நோய் வருகிறது. வட இந்தியாவில் போய் பாருங்கள். சப்பாத்தி அதிகம் சாப்பிடாதீர்கள். அதனால்தான் சர்க்கரை வருகிறது. அரிசி உணவு எடுத்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். அனைத்து உணவுகளிலும் சர்க்கரைதான் இருக்கிறது. எதைச் சாப்பிட்டாலும் சர்க்கரையாகத்தான் மாறும்.
இனிப்புக்கும், சர்க்கரைக்கும் சம்பந்தமே கிடையாது. இதைப் புரிந்து கொண்டால் சர்க்கரை நோயாளிகள் இந்த நிமிடம் முதல் இனிப்பு சாப்பிடலாம். இட்லி என்பது சர்க்கரை. சப்பாத்தியில் சர்க்கரை உள்ளது. உருளைக்கிழங்கு போண்டாவில் சர்க்கரை உள்ளது. இட்லி இனிக்கிறதா? சப்பாத்தி. உருளைக்கிழங்கு போண்டா இனிக்கிறதா ? இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம். சர்க்கரை இனிக்காது. இனிப்பு என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு பொருள். இது நாக்கால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. சர்க்கரையென்பது கண்ணிற்கு தெரியும் பொருள். இது வயிற்றால் ஜீரணிக்கப்பட வேண்டிய ஒன்று. ஒரு சர்க்கரை இனிக்க வேண்டிய அவசியம் கிடையாது. எனவே, தயவு செய்து இனிப்புகளைப் பார்த்து பயப்படாதீர்கள். நமது சிகிச்சையில், ஒரு உணவை எப்படி சாப்பிட்டால் அதை நல்ல சர்க்கரையாக மாற்ற முடியுமென்ற வித்தையைச் சொல்லிக் கொடுக்கிறோம். அதை கற்றுக் கொண்டு இந்த நிமிடம் முதல் எல்லா உணவுகளையும் நாம் கூறிய முறையில் சாப்பிட்டு நல்ல சர்க்கரையாக மாற்றி அனுப்பும் பொழுது இயற்கையாகவே நமது கணையம் இன்சுலின் சுரக்க ஆரம்பித்து விடுகிறது.
இயற்கையாகவே இன்சுலின் சுரப்பதற்கு வழி இருக்கும் போது இனி ஏன் நாம் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும். நாம் சொல்லுவது சில பேருக்குப் பயம் ஏற்படுத்தும். இவர் பேச்சைக் கேட்டு நாம் சர்க்கரை மருந்து, மாத்திரையை நிறுத்தி விட்டால் உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்படுமோ என்று. ஒரு வேளை சந்தேகம் இருந்தால் ஒன்று செய்யுங்கள். நாம் சொல்லும் சில வழிமுறைகளைப் பயன் படுத்துவதற்கு முன்பாக நீங்கள் ஒரு மருத்துவமனையில் சென்று அட்மிட் ஆகிக் கொள்ளுங்கள். சர்க்கரை மாத்திரை இன்சுலின் போடுபவர்கள் நம்ம டெக்னிக் பிரகாரம் சாப்பிடுங்கள். இன்சுலின் மருந்து மாத்திரை போட வேண்டாம். ஒரு நாள் முழுவதும் ஆ°பத்திரியில் இருங்கள். காலையில் சாப்பிட்டு இன்சுலின் மருந்து, மாத்திரை எடுக்காமல் மதியம் மீண்டும் பசி எடுத்தாலே என்ன அர்த்தம். உங்கள் கணையம் இன்சுலின் சுரந்து விட்டது என்று அர்த்தம். நாம் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரத்தில் அல்லது மூன்று மணி நேரத்தில் இன்சுலின் சுரக்க வேண்டும். இல்லையென்றால் மயக்கம் வந்து விடும். எப்பொழுது நமது முறைப்படி சாப்பிட்டு ஒரு நாள் முழுவதும் உங்களுக்கு மயக்கமே வரவில்லையோ மருந்து மாத்திரைகளை நிறுத்தி உங்களுக்கு கணையம் கெட்டுப் போகவில்லை என்பது அப்பட்டமாகத் தெரியும்.
சில சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையம் கெட்டு போவதாலும் வருகிறது. ஆனால், அது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டும்தான் அது போல் வரும். எனவே, நமது முறைப்படி சாப்பிடுங்கள். ஒரு நாள் முழுவதும் மயக்கம் வரவில்லையென்றால் உங்களுக்கு கணையம் கெட்டுப் போனதால் வந்த சர்க்கரை நோய் கிடையாது. ஜீரணம் கெட்டுப் போவதால் வந்தது என்பதைப் புரிந்து கொண்டு உங்கள் மருந்து மாத்திரை களைப் படிப்படியாகக் குறைத்து மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் மொத்தமாக நிறுத்தி விட்டு சந்தோஷமாக, சௌக்கியமாக இருங்கள். எனவே, கடைசியாக நாம் புரிந்து கொண்டது என்னவென்றால், சாக்கரை நோயென்பது கணையம் சம்பந்தப்பட்ட நோயில்லை. ஜீரணம் சம்பந்தப்பட்ட நோய். ஒரு உணவை எப்படிச் சாப்பிட்டால் அது நல்ல சர்க்கரையாக மாறும் என்பதை நாம் பார்க்கப் போகிறோம். அதன் மூலமாக சர்க்கரை இல்லாத உலகத்தை சர்க்கரை நோயாளிகள் இல்லாத உலகத்தை நாம் கூடிய விரைவில் பார்க்க போகிறோம்.