39
நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும் கொழுப்பு என்ற பொருள் இருக்கிறது. பொதுவாகக் கொழுப்பு என்பது எண்ணெய் பலகாரம் மற்றும் தேங்காயில்தான் இருக்கிறதென்று கூறுவார்கள். ஆனால், அதில் மட்டுமல்ல. அனைத்து உணவுகளிலும் இருக்கிறது. கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நன்றாக ஜீரணம் செய்து இரத்தத்தில் கலந்தால் அது நல்ல கொழுப்பு.சரியாக ஜீரணம் ஆகாமல் அரை குறையாக ஜீரணம் ஆகி இரத்தத்தில் கலந்தால் அதன் பெயர் கெட்ட கொழுப்பு. நன்றாக ஜீரணம் ஆகிய கொழுப்புகளுக்கு குட் கொல°ட்ரால் என்றும் அரை குறை ஜீரணமான கொழுப்புகள் கெட்ட கொல°ட்ரால் (க்ஷயன ஊhடிடநளவநசடிட) என்றும் கூறுவார்கள். மருத்துவர்கள் கொழுப்புக்கு ழனுடு (ழiபா னுநளேவைல டுiயீடி ஞசடிவநin), டுனுடு (டுடிற னுநளேவைல டுiயீடி ஞசடிவநin) என்று பெயர் வைத்துள்ளார்கள். சாப்பிடுகிற உணவில் உள்ள கொழுப்பு நல்லபடியாக ஜீரணம் ஆனால் அதற்கு நல்ல கொழுப்பு ழுடிடின ஊhடிடநளவநசடிட அல்லது ழனுடு என்று பொருள். சரியான முறையில் ஜீரணமாகாத கொழுப்பு கெட்ட கொழுப்பு க்ஷயன ஊhடிடநளவநசடிட அல்லது டுனுடு என்று பெயர். எனவே, ழனுடு, டுனுடு என்ற வார்த்தையைக் கேட்டு பயப்படாதீர்கள். சரியாக ஜீரணமான கொழுப்பு ழனுடு,கெட்ட கொழுப்பு டுனுடு .
சரியாக ஜீரணமாகாத கெட்ட கொழுப்புகள் (டுனுடு) இரத்தத்தில் கலக்கும் பொழுது அவைகள் ஆங்காங்கே தேங்கி கட்டி போல் மாறுகிறது. இதுதான் கொழுப்புக் கட்டி என்று அழைக்கிறார்கள். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் இரத்த நாளங்களில் சுவர்களில் அடைத்துக் கொண்டால் இரத்த நாளத்தின் அளவு குறையும் போது க்ஷஞ என்ற இரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்புள்ளது. கெட்ட கொழுப்புகள் எந்தெந்த உறுப்புகளுக்குள் செல்கிறதோ அந்த உறுப்புகள் அனைத்திற்கும் நோய் வரும். இந்த கெட்ட கொழுப்பை கல்லீரல் எடுத்து பித்த நீராக (க்ஷடைந) மாற்றி பித்தப்பையில் சேர்த்து வைக்கும். நாம் சாப்பிடுகிற சாப்பாடு வயிற்றில் ஜீரணம் ஆக வேண்டும் என்றால் பித்தப்பையில் இருந்து பித்த நீர் சுரக்க வேண்டும். பித்த நீர் என்பது ஒரு கொழுப்பு நீராகும். கெட்ட கொழுப்பால் உருவாக்கப்பட்ட பித்த நீரால் ஜீரண வேலையை சரிவர செய்ய முடியாது. கெட்ட கொழுப்பு இருதயத்தில் சென்று பல இடங்களில் அடைத்துக் கொண்டால் இதற்கு இருதய அடைப்பு என்று பெயர். எனவே, கொழுப்புக் கட்டிகள், இரத்த அழுத்தம் அதிகமாகுதல், ஜீரணக் குறைபாடு, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் வருவது, இருதயத்தில் அடைப்பு ஏற்படுவது ஆகிய அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம், நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள கொழுப்புப் பொருட்கள் ஒழுங்காக ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலப்பதே.
கொழுப்புக் கட்டியை அறுத்து எடுப்பதற்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், கொழுப்புக் கட்டியை ஆப்ரேசன் (டீயீநசயவiடிn) மூலம் அகற்றி விட்ட பிறகு இனிமேல் கொழுப்பு பொருள்களை எப்படிச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக இரத்தத்தில் கலக்கும் என்ற வித்தையைச் சொல்லிக் கொடுத்தார்களா ? க்ஷஞ அதிகரிக்கும் போது அதை கன்ட்ரோல் செய்வதற்கு மருந்து மாத்திரை கொடுக்கும் மருத்துவர்கள் இரத்த நாளங்களில் அடைத்து கெட்ட கொழுப்பை அகற்றுவதற்கும் இனிமேல் நாம் சாப்பிடுகிற உணவில் நல்ல கொழுப்பு உள்ளே செல்வதற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார்களா ? இருதயத்தில் உள்ள நான்கு அடைப்புகளை பைபா° சர்ஜரி (ளுரசபநசல) என்ற பெயரிலும் ஆஞ்சியோ என்ற பெயரில் பலூன் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வெளியே எடுக்கிறார்கள். இப்படி இருதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை அடைப்பை வெளியே எடுப்பதற்கு மட்டுமே வைத்தியம் இருக்கிறது. ஆனால், இனிமேல் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நல்லபடியாக ஜீரணமாக்கி நல்ல கொழுப்பாக இரத்தத்தில் கலக்கும் வித்தையை யாரும் சொல்லிக் கொடுப்பதே இல்லை. அதற்கு பதிலாக இனிமேல் கொழுப்பு சம்பந்தப்பட்ட எந்தவொரு பொருளையும் சாப்பிடக்கூடாது. கொழுப்பே சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்குகிறார்கள். இதைக் கேட்டு பல பேர் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களைச் சாப்பிடாமல் இருக்கிறார்கள் அவர்களுக்குக் கூடிய சீக்கிரமாக மிகப்பெரிய நோய் வர இருக்கிறது. ஏனென்றால் கொழுப்பு என்ற ஒரு பொருள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசியமான ஒரு பொருள்.
நமது உடலில் இரு செல்கள் ஒன்று சேருமிடத்தில் கவரிங் மெட்டீரியலாக பேக்கிங் மெட்டீரியலாக இரு செல்லுக்கு நடுவேயும் பசை போன்ற கொழுப்புகள் இருப்பதால்தான் செல்கள் ஒழுங்காக இயங்க முடியும். எனவே, ஒவ்வொரு செல்லுக்கும் நடுவிலும், கொழுப்புப் பொருட்கள் இருக்கின்றன. நமது உடலில் தோல்களுக்கு மேல் எப்பொழுதும் ஒரு எண்ணெய் பசை இருக்கும். இதுவும் ஒருவிதமான கொழுப்புதான். இந்த எண்ணெய்ப் பசைதான், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு வராமல் இருப்பதற்காக நமது தோல்களைப் பாதுகாக்கும் அற்புதமான கவசம். மேலும், இரத்தத்தில் உள்ள 80 சதவீதம் கொழுப்புப் பொருள்கள் கல்லீரலால் கிரகிக்கப்பட்டு பைல் என்ற பித்த நீராக மாற்றப்பட்டு கால்பிளேடர் என்ற பித்தைப்பையில் சேமித்து வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் எல்லாப் பொருளும் வயிற்றுக்குள் செல்லும் பொழுது அதை ஜீரணம் செய்வதற்குப் பித்த நீர் சுரந்தே ஆக வேண்டும்.
இப்படித் தலைமுடி முதல் உள்ளங்கால் வரை உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசியத் தேவையான கொழுப்பை அவசியமான ஒரு கொழுப்பை சாப்பிடக்கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? உடலில் கொழுப்பின் பங்கு என்ன என்று தெரியாத மருத்துவர்கள் மட்டுமே கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று அறிவுரை சொல்லுவார்கள்.
எனவே, தயவு செய்து கொழுப்புப் பொருளைப் பார்த்து பயப்படாதீர்கள். கொழுப்பு நம் உடலுக்கு மிக முக்கியமான ஒரு அத்தியாவசியப் பொருள். உணவில் இருக்கும் கொழுப்பை ஒழுங்காக ஜீரணம் செய்யத் தெரியாததால் கெட்டக் கொழுப்பு உடலில் சென்று நோயை ஏற்படுத்துகிறது. அதற்கு கொழுப்பே சாப்பிடக்கூடாது என்பது தீர்வாகாது. கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எப்படி சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக மாற்ற வேண்டும் என்ற வித்தையை சொல்லிக் கொடுப்பதே மருத்துவரின் சரியான சிகிச்சையாகும்.
எனவே, நமது சிகிச்சை முறையில் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் எண்ணெய்ப் பலகாரம், தேங்காயை சாப்பிட்டால் மட்டுமே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் என்பது உண்மை. நாம் உங்களுக்குச் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற ரகசிய வித்தையைச் சொல்லிக் கொடுப்போம். அதன் மூலமாக நீங்கள் எண்ணெய்ப் பலகாரம், தேங்காய் மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருள்களை சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களைச் குணப்படுத்தலாம்.
மருத்துவர்கள் தேங்காய் சம்பந்தப்பட்ட பொருள்களைச் சாப்பிடாதீர்கள் என்று கூறுவார்கள். இது ஒரு நகைச்சுவையான ஒரு விஷயம். தேங்காய் உலகத்திலேயே மிகச் சிறந்த ஓர் உணவு. கோயில்களில் பிரசாதமாக தேங்காயும், பழமும் கொடுக்கிறார்கள். ஒரு கெட்ட பொருளை பிரசாதமாக கொடுப்பார்களா? சற்று யோசித்து பாருங்கள். தேங்காயில் உடலுக்குத் தேவையான அனைத்து தாதுப் பொருள்களும் அனைத்து நல்ல பொருள்களும் இருக்கின்றன. உலகத்திலேயே மிகச் சிறந்த ஓர் உணவு என்றால் அது தேங்காய்க்கு மட்டுமே பொருந்தும். அப்படிப்பட்ட பொருளை ஏன் சாப்பிடக் கூடாது.
பழங்காலத்தில் எந்த நோயாக இருந்தாலும் தேங்காய்ப்பால் மற்றும் பனங்கருப்பட்டியைச் சேர்ந்த ஒரு கலவையை குடிப்பதன் மூலமாக நமது முன்னோர்கள் நோய்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். நமது தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். தேங்காவும், பனங்கருப்பட்டியும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வளவு பெரிய உயிர்காக்கும் மருந்து என்பதை அவர்கள் கதை கதையாய் கூறுவார்கள். எனவே, யாருக்கும் எந்த நோய் வந்தாலும் தேங்காய் பாலும் பனங்கருப்பட்டியும் கலந்து குடிப்பதன் மூலமாக நமது நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அனைத்து நோய்களைக் குணப்படுத்தும் ஒரே மருந்து தேங்காய்ப்பாலும் பனங்கருபட்டியும் கலந்த கலவை.
பல வருடங்களுக்கு முன்பு நமது முன்னோர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு நபரை வைத்தியரிடம் அழைத்துச் செல்வார்கள். வைத்தியர்கள் அவர்களிடம் உள்ள அனைத்து மருந்து மாத்திரையையும் பயன்படுத்தி குணப்படுத்த முடியவில்லை என்றால் மருத்துவரால் கைவிடப்பட்ட நோயாளிக்குக் கடைசியாக கொடுக்கும் ஒரு மருந்து தேங்காய்ப் பால் மருந்து. நாம் சொல்லும் தேங்காய்ப் பால் என்பது இப்பொழுது சாதாரணமாக தெருக்களில் கிடைக்கும் கலர் கலராக சுடச்சுட கொடுக்கப்படும் தேங்காய்பால் கிடையாது. நாம் சொல்லும் தேங்காய்ப் பால் என்பது தென் மாவட்டங்களில் சொதி என்று அழைக்கும் ஒரு உணவு வகையை தயாரிப்பதற்காக தேங்காயை பொறியலுக்கு பயன்படுத்துவதைபோல் பூ எடுப்பார்கள். தேங்காய் பூ என்றால் சிலர் தவறாக எண்ணி விடாதீர்கள். தேங்காய் பூ என்பது தேங்காயை துருவி சிறு சிறு தூளாக செய்வதுதான் தேங்காய்பூ. ஆனால், தேங்காய் பூ என்று தனியாக ஒன்று உள்ளது. நாம் அதைப் பற்றி பேசவில்லை. தேங்காயை சிறு தூளாக பூவாக மாற்றி அதை உள்ளங்கையில் நன்றாக அழுத்தி இலேசாக நீர் விட்டால் அதிலிருந்து ஒரு பால் வரும். இந்தத் தேங்காய்ப் பாலை ஒரு டம்ளர் எடுத்து மருத்துவரால் கைவிடப்பட்ட உயிருக்குப் போராடும் நோயாளிக்குக் கொடுத்தால் அவர் உயிர் பிழைப்பார் என்பது நம் முன்னோர்களின் மருத்துவம்.
இப்படி நம் முன்னோர்கள் தேங்காடீநுபால் மூலமாக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நாம் இப்பொழுது உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் நம் தாத்தா மற்றும் பாட்டிக்கு பேரன் பேத்தி கையில் மாட்டுப்பாலை கொடுத்து உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, இனிமேல் நமது வீட்டில் யாராவது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் மாட்டுப்பாலை கொடுக்காதீர்கள். தேங்காய்பால் கொடுத்து உயிரைக் காப்பாற்றுங்கள்.
இப்படித் தேங்காய்பால் கொடுத்து உயிரைக் காப்பாற்றுவதால் சிறிய சிக்கல் வரும். சொத்து பிரிப்பது சற்று காலத் தாமதம் ஆகும். தாத்தா, பாட்டியின் சொத்து உடனே வேண்டும் என்றால் மாட்டுப்பால் கொடுத்து உயிரைப் பறித்து விடுங்கள். தாத்தா, பாட்டி உயிருடன் இருக்க வேண்டுமென்றால் தேங்காய் பாலைக் கொடுத்து உயிரைக் காப்பாற்றுங்கள்.
எனவே, தேங்காய் என்பது சாப்பிடக் கூடாத ஒரு பொருள் கிடையவே கிடையாது. தேங்காயை எப்படிச் சாப்பிட்டால் நல்லபடியாக ஜீரணமாகி நல்ல கொழுப்பாக மாறும் என்ற வித்தையைக் கற்றுக் கொள்வதன் மூலமாக கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ள நபர்கள் தேங்காய் சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்த முடியும்.
சிலர் எண்ணெய்ப் பலகாரத்தைப் பார்த்து பயப்படுவார்கள். எண்ணெய் என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசியமான பொருள். இதில் பயப்பட என்ன இருக்கிறது ? எண்ணெய் நாம் ஏன் சேர்த்துக் கொள்கிறோம் என்றால் நமது உடலுக்குக் கொழுப்பு தேவை. அதற்காகச் சேர்த்துக் கொள்கிறோம். எனவே, தயவு செய்து எண்ணெய்ப் பலகாரத்தைப் பார்த்து பயப்படாதீர்கள். ஒரு சாதாரண எண்ணெய் கூட ஜீரணம் செய்வதற்கு நமக்கு முடியவில்லை என்பது தான் பிரச்சனையே தவிர எண்ணெய்ப் பலகாரத்தில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. எனவே, எண்ணெய்ப் பலகாரத்தை மற்றும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களை எப்படிச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக மாற்ற உதவும் என்பது இன்று நாம் கற்றுக் கொள்ளப் போகிறோம். எனவே, இனிமேல் எண்ணெய் பலகாரம் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களைச் சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தலாம்.