"

42

இரத்ததில் உள்ள பொருள்களின் தரம் குறைவதுதான் முதல் நோய். இந்த நோய் வந்தவுடன் இயற்கையான வழியில் குணப்படுத்த வேண்டும், இப்படி இயற்கையான முறையில் குணப்படுத்தத் தெரியாத மருத்துவர்கள் கண்ட்ரோல் செய்கிறேன் என்ற பெயரில் வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரைகளை வியாபாரம் செய்கிறார்கள், ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்வது என்பது வேறு. குணப்படுத்துவது என்பது வேறு. ஒரு நோயைக் குணப்படுத்த தெரியாத மருத்துவர்தான் நோயைக் கண்ட்ரோல் செய்வார்கள். எந்த நோயையும் கண்ட்ரோல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அதைக் குணப்படுத்துவது மிக மிக சுலபம்.

நீங்கள் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறீர்கள் திடீரென ஒரு நாள் வெளிநாடு செல்ல வேண்டியது வந்து விட்டது, நீங்கள் வெளிநாடு சென்று விட்டீர்கள், நிறுவனத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விட்டன, உங்கள் மேனேஜர் தொலைபேசி மூலமாக அழைத்து அந்த சிக்கலைப் பற்றி விரிவாகக் கூறுகிறார், நீங்கள் வெளிநாட்டிலிருந்து உடனே திரும்ப முடியாது குறைந்தது நான்கு நாட்களாவது ஆகும் அந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு நீங்கள் நேரடியாக வந்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற நிலையில் என்ன செய்வீர்கள்?

நீங்கள் உடனே மேனேஜரிடம் நான் வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும், நான் வந்தால் மட்டுமே இந்தச் சிக்கலை தீர்க்க முடியும் எனவே நான்கு நாட்களுக்கு எப்படி சமாளிக்க வேண்டும் என்று சில வழி முறைகளைச் சொல்லி கொடுப்பீர்கள், அந்த மேனேஜரும் நான்கு நாட்கள் சமாளித்துக் கொண்டிருப்பார், நீங்கள் நான்காவது நாள் திரும்பி வந்தவுடன் அந்தச் சிக்கலைத் தீர்த்து வைப்பீர்கள், எனவே சமாளிப்பது என்பது தற்காலிகமானது, தீர்த்து வைப்பது என்பது நிரந்தரமானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு நோயைச் சமாளிப்பது அல்லது கண்ட்ரோல் செய்வது என்பது தற்காலிகமானது. நோயைக் குணப்படுத்துவது என்பது மட்டுமே நிரந்தரமானது, எனவே ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்வது அந்த நோயை பெரிது படுத்தும் என்பது உலகம் அறிந்த உண்மை, இப்படிச் சுலபமாக தீர்க்க வேண்டிய சர்க்கரை, க்ஷஞ, °துமா, தைராய்டு, கேன்சர், எய்ட்° போன்ற நோய்களைக் கண்ட்ரோல் மட்டும் தான் செய்ய முடியும் என்று பல வருடங்களாக யார் யாரெல்லாம் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்கிறீர்களோ அல்லது சிகிச்சை எடுத்துக் கொள்கிறீர்களோ உங்கள் நோய் பெரிதுபடுத்தப்படுகிறது.

இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போகும் நோய் என்பது முதல் படி நோய். இதைக் கண்ட்ரோல் செய்வதன் மூலமாக நாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இரண்டாம் நிலை என்பது இரத்தத்தில் உள்ள ஒரு பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது.

சர்க்கரையின் தரம் குறைந்தால் இது முதல் வகை நோய் இரத்தத்தில் சர்க்கரையே இல்லாமல் போனால் அது இரண்டாம் நிலை நோய், மயக்கம் வந்து விடும். இரத்தத்தில் கால்சியத்தின் தரம் குறைந்தால் குண்டாவீர்கள், பரவாயில்லை சிறிய நோய். ஆனால் இரத்தத்தில் கால்சியத்தின் அளவு குறைந்தாலோ, அல்லது இல்லாமல் போனாலோ இது இரண்டாம் நிலை நோய் அப்பொழுது எலும்புகளில் உள்ள கால்சியம் இரத்தத்தை நோக்கி வரும். எனவே எலும்புகள் உடையும் அழுகிப்போகும். இது மிகப்பெரிய நோய்.

இதே போல் இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறைந்தால் முதல் நிலை சின்ன நோய். இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலே இரண்டாம் நிலை பெரிய நோய்.

எனவே இரத்தத்தில் ஒரு பொருளின் தரம் குறையும் பொழுது அதை எப்படி சரி செய்வது என்று இயற்கை வழியில் நாம் சரி செய்து விட்டால் இரண்டாம் நிலை நோயான இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது என்ற இரண்டாம் நிலைக்கு நாம் தள்ளப்படவேண்டிய அவசியம் இல்லை. இப்படி யார்யாரெல்லாம் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப்போகும் பொழுது அதைக் கண்ட்ரோல் செய்கிறேன் என்ற பெயரில் பல நாட்களாகப் பல வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறீர்களோ உங்கள் நோய் பெரிதுபடுத்தப்படுகிறது. சில காலங்களுக்குப் பிறகு இரத்தத்தில் கால்சியம் இல்லை, அயன் இல்லை, சோடியம் இல்லை என்று இரண்டாம் நிலை நோய்க்குத் தள்ளப்பட்டு இப்பொழுது அந்த நோய்க்கும் நாம் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும். எனவே இரத்ததில் ஒரு பொருளின் அளவு குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ இதை இரண்டாம் நிலை நோய்என்று கொள்வோமாக, இதற்கு இந்த புத்தகத்தை முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக எப்படி சரி செய்வது என்பதை நாம் கற்று கொள்ள போகிறோம்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.