44
மனதிற்கும் உடலிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனது கெட்டுப்போனால் உடல் கெட்டுப்போகும். அதே சமயம் உடல் கெட்டுப்போனாலும் மனதும் கெட்டுப்போகும்.
இரண்டு அல்லது மூன்று நாட்கள் நாம் சரியாகத் தூங்கவில்லை என்றால், நாம் அனைவரிடமும் கோபமாகப் பேசுவோம். அமைதியாக பேசுபவர் என்று பெயர் பெற்ற நாம் ஏன் திடீரென கோபமாகப் பேசுகிறோம். ஏனென்றால் உடலில் நோய் ஏற்படும் பொழுது அது நம் மனதை பாதித்து நமது குணத்தை மாற்றுகிறது. சாதரணமாக நன்றாக பேசிக்கொண்டிருக்கும் நாம் அதிகப்படியான தலைவலி உள்ள ஒரு நேரத்தில் நமது குணம் மாறுகிறது. ஏனென்றால் உடலில் நோய் வந்தால் மனது பாதிப்படைகிறது. இது போல உடலில் எவ்வளவு நோய் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல மனதில் பாதிப்பு ஏற்படும். அதே சமயத்தில் மனதில் பாதிப்பு எப்போது ஏற்பட்டாலும், அது உடலில் தெரியும். சில நேரங்களில் நேரடியாக நம் மனதைப் பாதிக்கும் சம்பவங்களும் நடக்கும். சில நேரங்களில் மறைமுகமாகவும் மனது பாதிக்கும். நமது மனதை அமைதியாக வைத்துக் கொள்வது மூலமாக பல நோய்களைக் குணப்படுத்தலாம். அதே சமயம் உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்துவது மூலமாக மனதை அமைதியாக வைத்துக் கொள்ளலாம். முதலில் நம் உடலில் இரத்தத்தில் உள்ள சில பொருள்களின் தரம் குறையும். பின்னர் இரத்தத்தில் சில பொருள்கள் அளவு குறையும் அல்லது இல்லாமல் போகும். அடுத்ததாக இரத்தத்தின் அளவு குறையும். அதன் பிறகுதான் நமது மனம் பாதிக்கும். இப்படியும் நம் மனம் பாதிக்கும் என்று இதுவரை நமக்கு யாருக்கும் தெரியாது. இதைப் புரிந்து கொண்டு நம் மனதை சரிசெய்வது மூலமாக நான்காம் நிலை நோயைக் குணப்படுத்த முடியும்.
இப்போதைக்கு மனம் கெட்டால் உடல் கெடும் உடல் கெட்டால் மனம் கெடும் என்ற விஷயத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். மனது என்பது ஒரு மிகப்பெரிய கடல். எனவே மனது என்பதை பற்றிய தனியாக ஒரு புத்தகம் எழுதி உள்ளோம். மனதின் மணம் என்பது அந்த நூலின் தலைப்பு அந்த புத்தகத்தின் மூலமாக நீங்கள் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது எப்படி என்பதை சுலபமாக தெளிவாகத் தெரிந்துக் கொள்ளுங்கள்.