"

52

புளிப்பு என்ற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் புளிப்பு என்ற சுவையை ஆகாயம் என்ற பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பி விடும். ஆகாயம் என்ற பிராண சக்திக்குக் கல்லீரல் கண்கள் பித்தப்பை இவை மூன்றும் வேலை செய்யும். கண்ணும் கல்லீரலும் ஒரே மாதிரியான வடிவத்தில் இருக்கும். கண்ணிற்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும் கோபம் என்ற உணர்ச்சிக்கும் சம்பந்தம் உண்டு.

புளியம்பழத்தை நாக்கில் வைத்தால் நம் கண்கள் கூசுகிறது. கண்களை மூடுகிறோம். ஏன்? புளியம்பழத்தில் உள்ள புளிப்பு சுவை நாக்கில் பட்டு ஆகாய சக்தியாக மாறி உடல் முழுவதும் பரவுகிறது. ஆகாய சக்தியாக வேலை செய்யும் கண்கள் அதிக சக்தி கிடைப்பதால் அவை கூசுகிறது. இரவு போதைப் பொருட்கள் சாராயம் போன்ற பொருட்களைச் சாப்பிட்ட ஒருவருக்கு அடுத்த நாள் காலை கண்கள் சிவப்பாக இருக்கும். ஏன்? ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள் இரத்தத்தில் கலந்தவுடன் கல்லீரல் இரவு முழுவதும் இந்த கெட்ட பொருட்களை பிரிப்பதற்காக அதிகமாக வேலை செய்திருக்கும். கல்லீரல் வேலை செய்வதற்கு ஆகாயம் என்ற கரண்ட் தேவை. எனவே இரவு முழுவதும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதற்காக கல்லீரல் உடலில் உள்ள ஆகாயம் என்ற சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்தி இருக்கும். எனவே உடலில் ஆகாய சக்தி குறைந்து போயிருக்கும். காலையில் கண்கள் சிவந்திருக்கிறது என்றால் இது கண் சம்பந்தப்பட்ட நோய் கிடையாது. உடம்பில் ஆகாய சக்தி குறைவு என்பதே உண்மை.

கோபம் வந்தால் கண்கள் சிவப்பாகும். கோபம் வரும் போது கண்கள் ஏன் சிவப்பாகிறது? கோபம் என்ற உணர்ச்சி மனதில் எப்பொழுது தோன்றுகிறதோ இந்த உணர்ச்சி உடலில் உள்ள ஆகாய சக்தி முழுவதையும் சாப்பிட்டு விடும். உடலில் ஆகாய சக்தி குறைந்து விட்டால் கண்கள் சிவந்து விடும். மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு கல்லீரல் கெட்டுப் போய் விடும் என்று கூறுவார்கள். கல்லீரல் கெட்டுப் போய் விட்டால் கோபம் அதிகமாக வரும். கோபம் அதிகமாக வந்தால் கல்லீரல் கெட்டுப் போகும். இப்படி புளிப்புக்கும், ஆகாயத்திற்கும் கல்லீரலுக்கும் பித்தப்பைக்கும் கண்ணிற்கும் கோபத்திற்கும் தொடர்பு உண்டு. இப்படித் தொடர்பு உண்டு என்று அறிந்த மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகளில் உள்ள நோய்களை குணப்படுத்த முடியும்.

கண்ணில் நோய் என்று ஒரு மருத்துவரைச் சந்தித்தால் அவர் கண்ணில்

மட்டுமே ஆராய்ச்சி செய்கிறார். °கேன் செய்கிறார். அங்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இது சரியான சிகிச்சை அல்ல. ஒரு வேளை அந்த நோயாளிக்குக் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புளிப்பு அதிகமாகச் சாப்பிட்டிருக்கலாம். அல்லது புளிப்பு குறைவாகச் சாப்பிட்டிருக்கலாம். பித்தப்பையில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம். அல்லது அடிக்கடி கோபப்படும் நபராக இருக்கலாம். அல்லது மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இப்படி பல வகையான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே நம் உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களைக் குணப்படுத்தமுடியும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? திருமணத்திற்கு முன்பு சாப்பிடு வதில்லை. குழந்தை பெற்ற பிறகு சாப்பிடுவதில்லை. அது என்ன கர்ப்ப காலத்தில் மட்டும் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால் கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தையை முழு குழந்தையாக மாற்றுவது கல்லீரலின் முக்கியமான வேலை. எப்பொழுது கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறதோ அப்பொழுது மருந்து சத்து பானம் (நுநேசபல னுசiமே) போன்றவற்றை நம் உடம்பு கேட்காது. கல்லீரலுக்கு அதிக வேலை ஏற்பட்டால் உடலில் ஆகாய சக்தி தீர்ந்து போகும். உடலில் ஆகாய சக்தி தீர்ந்து விட்டால் நாக்கு என்ற மருத்துவர் நம்மிடம் புளிப்பு என்ற மருந்தைக் கேட்பார். இப்படி கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் புளிப்பு கொடுக்காமல் இருந்தால் குழந்தைக்கு, குழந்தை வளாச்சிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே நம் உடம்பில் நாக்கு தான் டாக்டர். சுவை தான் மருந்து. எனவே எப்பொழுது புளிப்பு சாப்பிட வேண்டும் என்று நாக்கு கேட்கிறதோ அப்பொழுது தயவு செய்து புளிப்பான பொருட்களைக் கொடுப்பதன் மூலமாக நமது உடலில் ஆகாய சக்தியை என்றுமே நல்லபடியாக வைத்துக் கொள்ள முடியும்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.