53
உப்பு . நீர் பிராண சக்தி, சிறுநீரகம், காது, மூத்திரப்பை . பயம்
உப்பு என்ற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் உப்பு என்ற சுவையை நீர் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பி விடும். நீர் பிராணன் மூலமாக வேலை செய்யும் உறுப்புகள் சிறுநீரகம் மூத்திரப்பை மற்றும் காதுகள். இதற்கான உணர்ச்சி பயம்.
உப்பு சாப்பிட்டவன் தண்ணீர் குடிப்பான் என்று பழமொழி உள்ளது. உப்பு சாப்பிட்டால் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? உப்பு, நீர்ப் பிராணனாக மாறி உடம்பில் பரவும் பொழுது நீர் பிராணன் மூலமாக வேலை செய்யும் சிறுநீரகம் அதிகமாக வேலை செய்ய ஆரம்பிக்கிறது. சிறுநீரகத்தின் வேலை உடலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் எடுத்து அதில் உள்ள நல்ல பொருள்களை இரத்தத்தில் கலந்து கெட்ட, பொருள்களை மூத்திரப்பை வழியாக மூத்திரமாக வெளியேற்றும். எனவே சிறுநீரகம் அதிகமாக வேலை செய்யும் போது உடலுக்கு நீர் தேவை அதிகரிக்கிறது. எனவே தான் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறோமோ அவ்வளவு தண்ணீர் வேண்டும் என்று பழமொழி கூறுகிறது.
நமது காதுக்கும் சிறுநீரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அவரவர் காதும் சிறுநீரகமும் வடிவத்தில் ஒரே போல் இருக்கும். பயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் தொடர்பு உண்டு. பயத்தில் மூத்திரம் போய் விட்டான் என்று நாம் வழக்கமாகக் கூறுவோம். பயம் வந்தால் ஏன் மூத்திரம் வெளியாகிறது? பயம் என்ற உணர்ச்சி மனதில் தோன்றினால் உடலில் உள்ள நீர் பிராணனை இந்த பயம் சாப்பிட்டு விடும். உடலில் நீர் சக்தி இல்லையென்றால் மூத்திரப்பை மூத்திரத்தை பிடித்து வைப்பதற்கு தேவையான நீர் சக்தி கூட இல்லாமல் மூத்திரத்தை வெளியேற்றுகிறது. எனவே மனதில் பயம் வரும் பொழுது காது, சிறுநீரகம், மூத்திரப்பை ஆகியவை பலவீனம் அடைந்து நோய் உண்டாக வாய்ப்பு உள்ளது. சிறுநீரகத்தில் நோய் வந்தால் மனதில் பயம் வரும். அல்லது மனதில் பயம் வந்தால் சிறுநீரகத்தில் நோய் வரும்.
உலகில் கேன்சர், எய்ட்° போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் யாருமே உயிர் இழப்பதில்லை. இந்த உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்து மாத்திரை இல்லை. வைத்தியம் இல்லையென்று மருத்துவர்கள் நோயாளியைப் பயமுறுத்துகிறார்கள். இந்த செய்தி நோயாளியின் மனதில் ஆழமாகப் பதிந்து மனதில் ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பயப்படும் நபர்கள் உள்ள உலகத்தில் ஒரு நோய் வந்து விட்டது அதைக் குணப்படுத்த முடியாது நீங்கள் இறந்து தான் போவீர்கள் என்று ஒரு மருத்துவர் கூறிய பிறகு ஒரு நோயாளிக்குப் பயம்தான் வரும். தைரியம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது. இப்படி நோயாளி பயந்தால் அந்தப் பயம் நீர் சக்தியை மொத்தமாகத் தீர்த்து விடும். உடலில் நீர் சக்தி எப்பொழுது இல்லையோ சிறுநீரகம் பாதிக்கப்படும். எனவே நோயாளிகள் மனதில் வரும் பயம் தான் சிறுநீரகத்தில் உள்ள நோயைப் பெரிது படுத்துகிறது. இது உயிரைக் குடிக்கும் அளவிற்கும் வளருவதற்கு வாய்ப்பு உள்ளது.
கேன்சர், எய்ட்° போன்ற உயிர்க்கொல்லி நோய்களில் உயிரை இழக்கும் நோயாளிகள் கடைசியில் வயிறு பெரிதாகிப் பின்பு இறப்பதைப் பொதுவாக பார்க்கலாம். இதற்குக் காரணம் என்னவென்றால் வயிறு பெரிதாகி இறப்பவர்கள் அனைத்தும் நோயினால் இறப்பவர்கள் கிடையாது. நாம் இறந்து விடுவோம் என்ற பயம் சிறுநீரகத்தை பலவீனப்படுத்தி வயிறைப் பெரிதாக்குகிறது. வயிறு பெரிதானால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மனதில் பயம் உள்ளது என்றும் அர்த்தம். எனவே எந்த நோயாக இருந்தாலும் முதலில் தயவு செய்து தைரியமாக இருங்கள். பயப்பட்டால் நோய் பெரிதாகும். தைரியமாக இருந்தால் நோய் குணமாகும்.