"

71

இந்தப் புத்தகத்தை இதுவரை படித்ததன் மூலமாக நாம் புரிந்து கொண்டது என்ன? நோய்கள் இரண்டு வகைப்படும். உள்ளிலிருந்து வரும் நோய்கள் மற்றும் வெளியிலிருந்து வரும் நோய்கள். வெளியிலிருந்து வரும் நோய்களுக்கு நாம் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். உள்ளிலிருந்து வரும் அனைத்து நோய்களையும் இந்தச் செவிவழித் தொடு சிகிச்சை என்ற அனாடமிக் தெரபி மூலமாக கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும்.

அனைத்து நோய்களுக்கும் காரணம் ஐந்து

1. இரத்தத்தில் ஒரு பொருள் தரம் குறைந்து போகுதல்.

2. இரத்தத்திலுள்ள ஏதாவதொரு பொருள் இல்லாமல் போகுதல் அல்லது அளவு

குறைந்து போகுதல்.

3. இரத்தத்தின் அளவு குறைதல்

4. மனது கெட்டுப்போகுதல்

5. உடலின் அறிவு கெடுதல்

இந்த ஐந்து காரணத்தில் முதல் இரண்டு காரணத்தையும், மனதையும் மட்டுமே நாம் சரிப்படுத்த முடியும். இரத்தத்தின் அளவை சரி செய்வதும், உடலறிவை சரி செய்வதும், உடலே பார்த்துக் கொள்ளும். எனவே முதல் இரண்டு காரணத்தைச் சரி செய்வதற்கு நாம் 5 விஷயங்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.

1. உணவு

2. குடிக்கும் நீர்

3. மூச்சுக்காற்று

4. தூக்கம்

5. உடல் உழைப்பு

இப்படி இந்த 5 விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது எப்படி என்பதை இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படித்துப் புரிந்து கொண்ட நீங்கள் அதைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்தினால் நமது உடலில் 48 மணி நேரத்தில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அற்புதமான சுத்தமான எல்லாப் பொருளும் நல்ல பொருளாகத் தேவையான அளவு இருக்கும் இரத்தம் உருவாகும். 48 மணி நேரத்தில் முதல் சொட்டு இரத்தம் உருவாகும். இதைத் தொடர்ந்து பழக்கப்படுத்தினால் 120 நாட்களில் நம் உடலிலுள்ள அனைத்து இரத்தமும் நோயைக் குணப்படுத்தும் அற்புதமான மருந்தாக மாறிவிடும். இப்படி இரத்தம் சுத்தமடையும் பொழுது உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் உள்ளே உள்ள செல்கள் தன் நோயைக் குணப்படுத்த ஆரம்பிக்கும். ஒரு நிமிடத்தில் 300 கோடி செல்கள் வீதம் குணமடைந்து சராசரியாக ஒரு வருடத்தில் நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் தன் நோயைக் குணப்படுத்தி விடும். இது உங்களுக்கே அனுபவப்பூர்வமாக தெரியும்.

எனவே ஏற்கனவே 20 ஆண்டுகளாக மருந்து, மாத்திரை பயன்படுத்துகிறோம். அதை நிறுத்தினால் ஏதாவது ஆகுமா? என்று பலரும் கேட்கிறார்கள். நாம் உங்களை பார்த்துத் திரும்பக் கேட்கிறோம். 20 வருடமாக மருந்து, மாத்திரைகள் பயன்படுத்துகிறீர்களே? ஏதாவது ஆகியதா? பல வருடங்களாக மருந்து, மாத்திரை பயன்படுத்துவதற்கு மட்டும் யாரும் கேள்வி கேட்பதே கிடையாது. நிறுத்துவதற்கு மட்டும் கேள்வி கேட்கிறோம். எனவே எந்த மருந்து, மாத்திரையாலும் நிரந்தரமாக எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்பதைப் புரிந்து கொண்டு ஏற்கனவே பல வருடங்களாக மருந்து, மாத்திரை பயன்படுத்துபவர்கள் முதல் மாதம் ஏற்கனவே பயன்படுத்தும் அதே அளவு மருந்து மற்றும் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். முதல் ஒரு மாதத்தில் நாம் கூறியிருக்கும் அனைத்து வழிமுறைகளையும் கடைபிடித்தால் உங்களுக்கே தெரியும். உங்கள் உடம்பில் என்ன மாற்றம் ஏற்பட்டது என்று. ஒரு மாதம் நமது சிகிச்சையைக் கடைபிடித்தால் உங்கள் கண் முன்பை விட நன்றாக பளிச்சென்று தெரியும், தொப்பை குறையும், உடல் எடை குறையும், எப்பொழுதும் உடல் சக்தியுடன் இருக்கும், படிக்கட்டு ஏறும்போது மூச்சு வாங்காது, நன்றாக தூக்கம் வரும் நன்றாக மலம் வெளியேறும்.

இப்படி இதுவரை உங்கள் வாழ்க்கையில் பார்க்காத ஒரு ஆரோக்கியமான உடலை நீங்கள் முதல் மாதத்தில் பார்ப்பீர்கள். எனவே தயவுசெய்து மருந்து, மாத்திரையைத் திடீரென உடனே நிறுத்த வேண்டாம். ஒரு மாதம் நமது முறைப்படி வாழுங்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு உங்களுக்கே புரிந்து விடும். அதன்பிறகு 2வது மாதத்தில் உங்கள் மருந்து, மாத்திரையைப் பாதியாகக் குறையுங்கள். மூன்றாவது மாதம் அதிலும் பாதி குறையுங்கள். இப்படி நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரையைப் படிப்படியாகக் குறைத்து 3 அல்லது 4 மாதத்திற்குப் பிறகு மொத்தமாக நிறுத்திடுங்கள். வாழ்க்கை முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டுமென்று கூறிக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் 4 மாதத்திற்குள் மருந்து மாத்திரையை நிறுத்த போகிறோம் என்ற சந்தோஷமே நம் உடலில் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மட்டும் தயவுசெய்து உங்கள் மருந்து மாத்திரையை உடனே நிறுத்திவிடாதீர்கள். ஏனென்றால் சிறுநீரகம். அல்லது ஏதாவது உறுப்பை மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்று வேறொருவர் உறுப்பை உங்கள் உடம்பில் பொருத்தியிருந்தால் நமது உடல் நாம் சாப்பிட்டு அதன் மூலமாக உருவான செல்கள் மூலமாகத் தயாரிக்கப்பட்ட உறுப்பை மட்டுமே நம் உறுப்பு என்று முடிவு செய்யும். வேறொருவர் உறுப்பை எப்பொழுது நமது உடலில் பொருத்துகிறமோ அந்த உறுப்பை நம் உடல் ஏதோ கிருமி என்று நினைத்து எனது உறுப்பல்ல என்று புரிந்து கொண்டு அந்த உறுப்பை அழிப்பதற்காக மருந்துகளைத் தயார் செய்து அனுப்பிவிடும். எனவே மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்வதர்களுக்கு மருத்துவர்கள் சில மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து நம் உடல் அந்தக் காரியத்தைச் செய்யாமல் இருக்க செய்வார்கள். எனவே தயவுசெய்து வேறு உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இது சம்பந்தப்பட்ட எந்தவொரு மருந்து, மாத்திரையயும் நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் அது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படலாம்.

உண்மையில், மருந்து மாத்திரை என்பது ஒரு மனரீதியான தீர்வு. பலரும் நான் மாத்திரை சாப்பிட்டு விட்டேன். குணமாகி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கும்பொழுது அந்த நம்பிக்கைதான் நோயைக் குணப்படுத்துகிறதே தவிர மருந்து, மாத்திரைகள் ஒரு பொழுதும் எந்த நோயையும் குணப்படுத்துவது கிடையாது.

எனவே, ஆபத்து காலங்களில், விபத்து (ஹஉஉனைநவே), பாம்பு கடித்தல், கத்தியில் குத்துதல், துப்பாக்கியில் சுடுதல் போன்ற அவசர காலக்கட்டத்தில் நாம் கண்டிப்பாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தேவைப்பட்டால் ஆபரேஷன் செய்ய வேண்டும். மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டும். சுகர், க்ஷஞ டெ°ட் செய்ய வேண்டும். ஆனால் னுளைஉhயசபந (டி°சார்ஜ்) செய்யப்பட்டு வீட்டிற்கு வந்தபிறகு நாம் நமது முறைப்படி மேற்கொண்டு அந்த நோய்களைச் சுலபமாகக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

இந்தச் செவி வழித் தொடு சிகிச்சை கடைபிடிப்பவர்கள் இதனுடன் யோகா, மூச்சு பயிற்சி, தியானம், அக்குபஞ்சர், நியூரோ தெரபி, முத்ரா, ரெய்க்கி, பிராணிக்ஹீலிங், இயற்கை மருத்துவம் இதுபோன்ற மருந்தில்லாத மருத்துவத்தைச் சேர்த்துக் கொண்டால் நம் நோய் விரைவில் குணமாகும். எனவே மருந்தில்லாத மருத்துவத்தைச் சேர்த்துக் கொள்வதில் தவறு கிடையாது. ஆனால் மருந்து கொடுக்கும் எந்தவொரு வைத்தியமும் யோசித்து தேவைப் பட்டால் ஆபத்துக் காலத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்வோம்.

நமது முறையில் இப்படிச் சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிடக்கூடாது இப்படித் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படிக் குடிக்கக் கூடாதென்று நிறைய விதியைப் பார்த்திருப்பீர்கள். நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். விதிமுறையே இல்லை என்பதுதான் விதி, எனவே இயல்பாக இருக்க வேண்டும்.

ஆனால் நமது சிகிச்சையைக் கடைப்பிடிப்பவர்கள் ஏதாவதொரு முறை இந்த விதியை கடைப்பிடிக்க முடியாமல் போகும்பொழுதோ அதற்கு வாய்ப்பில்லாத போதோ வருத்தத்துடன் இருக்கிறார்கள். இப்படி வருத்தத்துடன் இருந்தால் அதுவே ஒரு நோய். இந்த விஷயங்களைப் புரிந்து கொண்டு இதை நடைமுறைப்படுத்தும் பொழுது எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடைமுறைப் படுத்துங்கள். ஒன்று, இரண்டு விஷயங்களைக் கடைபிடிக்க முடியவில்லை என்றால் தயவுசெய்து வருத்தப்படாதீர்கள். கவலைப் படாதீர்கள். ஏனென்றால் கவலை, வருத்தம் என்பதே ஒரு நோயாகும்.

எனவே பசியெடுத்தால் உடனே சாப்பிடுங்கள். தாகம் எடுத்தால் உடனே நீர் அருந்துங்கள். மூத்திரம் வந்தால் உடனே வெளியேற்றுங்கள். மலம் வந்தால் உடனே வெளியேற்றுங்கள். தூக்கம் வந்தால் சீக்கிரமாகத் தூங்குங்கள். இப்படி இந்த ஐந்து விஷயத்திற்கு மட்டும் நாம் ஒழுங்கு படுத்தினால் நம் உடல் தன் வேலையை ஒழுங்காகச் செய்து ஆரோக்கியமாக என்றுமே வைத்திருக்கும்.

நமது சிகிச்சை முறைப்படி ஒருவர் கடைப்பிடிக்கும்பொழுது முதல் மூன்று மாதங்களுக்கு லேசாக தலை வலிக்கும். உடலில் பல இடங்களில் லேசாக வலி ஏற்படும். ஆனால் அம்மா என்று கத்துவது போல் இருக்காது. லேசாக இருக்கும். ஏனென்றால் நமது உடலில் பல இடங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தும்பொழுது அந்த இடங்களில் வலி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அந்த நேரங்களில் அதற்காக எந்தவொரு வைத்தியமும் செய்யாமல் கண்களை மூடி அந்த இடத்தைக் கவனித்தால் இரத்த ஓட்டமும், பிராண சக்தியும் அந்த இடத்திற்கு சென்று அந்த நோயைக் குணப்படுத்தி ஆரோக்கியப்படுத்தும். மேலும் முதல் மூன்று மாதங்களில் சிலமுறை கண்களில் நீர் வழியும். திடீரென வியர்வை வரும் ஒருமுறை வாந்தி வருவதற்கு வாய்ப்புள்ளது. ஒருமுறை பேதி ஆவதற்கு வாய்ப்புள்ளது. சில நேரங்களில் உடலில் சக்தி இல்லாதது போல் சோம்பேறிதனமாகவும் இருக்கும். இப்படி நம் உடல் அனைத்து உறுப்புகளில் உள்ள நோய்களைக் குணப்படுத்தும் பொழுது முதல்3 மாதத்திற்கு சில விளைவுகளை ஏற்படுத்தும்.

பத்து வருடமாக சாராயம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு நபர் திடீரென நிறுத்தினால் அவர் கை நடுங்கும். தலை வலிக்கும். மிகவும் கஷ்டமாக இருக்கும். முதல் 3 மாதத்திற்கு நிம்மதியாக இருக்க முடியாது. உடனே சாராயம் குடிப்பது நல்லது என்று நாம் எடுத்துக் கொள்ள முடியுமா? அதைபோல நல்ல பழக்கத்திலிருந்து கெட்ட பழக்கத்திற்கோ, அல்லது கெட்ட பழக்கத்திலிருந்து நல்ல பழக்கத்திற்கோ உடல் மாறும்பொழுது உடல் அதை ஏற்றுக் கொள்வதற்கு மூன்று மாத காலம் ஆகும். எனவே நமது முறைப்படி நடந்து கொண்டால் ஒன்றுமே ஆகாமல் திடீரென எல்லா நோயும் குணமாகும் என்று தயவுசெய்து புரிந்து கொள்ள வேண்டாம். எனவே முதல் மூன்று மாதங்களில் வரும் சிறிய, சிறிய உபாதைகளுக்கு எந்தவொரு மருந்து மாத்திரையும் எடுத்துக் கொள்ளாமல் இயற்கை வழியில் அமைதியாக இருந்து உடலுக்கு நாம் உதவி செய்தால் நமது அனைத்து நோய்களையும் உடல் குணப்படுத்தி நம்மை என்றென்றும் ஆரோக்கியமாக இருக்க வைக்கும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.