"

72

இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் தயவுசெய்து உலக மருத்துவர்கள் மீது எந்தக் கோபமும் படாதீர்கள். ஏனென்றால் மருத்துவார்கள் அனைவரும் நமது அண்ணன், தம்பி, மாமா, அத்தை என்ற உறவுக்காரர்கள் மட்டுமே. அவர்கள் வேறு யாரும் கிடையாது எந்த மருத்துவரும் மற்றவர்களைத் துன்பப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட மாட்டார்கள். மருந்து, மாத்திரை கம்பெனிகள் தனது வியாபாரத்திற்காக தவறான, சிகிச்சை களை நமது வீட்டில் இருக்கும் உறவினர்களுக்குக் கற்றுக் கொடுத்து அதன் மூலமாக அவர்கள் பல கோடி ரூபாய் சம்பாதித்து நம் உடலைக் கெடுத்து வருகிறார்கள். எனவே பல மருத்துவர்களுக்கு இந்தப் புத்தகத்திலுள்ள விஷயங்கள் தெரியவே தெரியாது. ஒரு நல்ல எண்ணம் கொண்ட ஒரு மருத்துவர் இந்தப் புத்தகத்தை முழுவதுமாக படித்தால் கண்டிப்பாக பல நாட்களுக்குத் தூக்கம் வராது. கண்களில் நீர் வழியும் இந்த சாதாரண விஷயங்களைக் கூட தெரியாமல் நாம் இத்தனை வருடமாக மருத்துவராக இருந்தோமே என்று எண்ணி வருத்தப்படுவார்கள் அவர்கள் மட்டுமே நல்ல எண்ணம் கொண்ட மருத்துவர்கள். எனவே மருத்துவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்ற விஷயத்தை நாம் ஓப்புக் கொள்வது கிடையாது. அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த வைத்தியத்தை அவர்கள் செய்கிறார்கள்.

மருந்து, மாத்திரை கம்பெனிகளின் வியாபார நோக்கம்தான் தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே உலக மருத்துவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம். வீட்டில் ஒரு குழந்தை புரியாமல் ஒரு காரியத்தைச் செய்யும் பொழுது நாம் அந்தக் குழந்தையின் மீது கோபம் கொள்ள மாட்டோம். அதைப் புரிய வைக்க மட்டுமே முயற்சி செய்வோம். எனவேதான் ஞானிகளும், ரிஷிகளும் சாதாரண மக்களைப் பார்க்கும் பொழுது குழந்தாய்என்று அழைக்கிறார்கள். எனவே நாம் அனைவரும் மருத்துவர்களை மட்டுமல்ல உலகிலுள்ள அனைவரையும் நமது குழந்தையாக எண்ணும்பொழுது உலகத்தில் யார் மீதும் கோபம் வராது. புரிய வைக்க மட்டுமே முயற்சி செய்வோம் வாழ்நாள் முழுவதும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

அனாடமிக் தெரபி Copyright © 2015 by ஹீலர் பாஸ்கர் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.