2
இப்படி தும்மல் வரும் பொழுது ஏதாவது ஒரு வேலையைச் செய்து அதை நிறுத்தினால் பலமணி நேரங்களுக்கு தும்மல் வராது. ஆனால் இந்த பலமணி நேரத்தில் காற்றில் உள்ள பல தூசுகளும் நுரையீரலுக்குச் சென்று இப்பொழுது நாலாயிரம் தூசுகளாக அதிகரித்திருக்கும். தைலத்தின் வாசம் தீர்ந்தவுடன் மீண்டும் தும்மல் சுரப்பி வந்து பார்க்கும். ஏற்கனவே நாற்பது தூசு ஊருக்கும்பொது நாலு தும்மல் தேவைப்பட்டது. இப்பொழுது நாலாயிரம் தூசு இருக்கும்பொழுது நாற்பது தும்மல் தேவைப்படும். எனவே தும்மல் சுரப்பி பயந்துபோய் என்னால் முடியாது சாமி என்று ஓடிவிடும். நமது உடலில் உள்ள மருத்துவர் இப்பொழுது தும்மல் சுரப்பியைவிட சக்திவாய்ந்த மூக்கு ஒழுகும் சுரப்பி என்ற ரன்னிங் நோ° என்ற சுரப்பியை அழைத்து சிகிச்சை செய்யச்சொல்வார். தும்மல் என்பது நம் வீட்டை நாம் துடைப்பம் கொண்டு பெருக்குவது போல. மூக்கு ஒழுகுவது என்பது தண்ணீர் ஊற்றி கழுவவது போல. இப்பொழுது நுரையீரலில் உள்ள அந்த தூசுக்களை தண்ணீர் ஊற்றி கழுவி மூக்கு வழியாக வெளியே தள்ளுகிறது. ஆனால் நாம் மூக்கு வழியாக நீர் வரும்பொழுது என்ன செய்கிறோம்?. மீண்டும் மீண்டும் உறிந்து கொண்டு இருக்கிறோம். எனவே மூக்கில் நீர் வழிதல் என்ற ரன்னிங் நோ°ஸ் என்பது நோய் கிடையாது. நமது உடலில் உள்ள நோயை குணப்படுத்தும் சிகிச்சை ஆகும். இப்படி எப்போதெல்லாம் மூக்கு உறிகிறீர்களோ நம் உடலுக்கு நாம் செய்யும் துரோகம் ஆகும். எனவே மூக்கில் நீர் வழியும் பொழுது நன்றாக அதை சிந்த வேண்டும். இப்படி மூக்கில் வரும் நீரை சிந்தி விட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேற்கொண்டு எந்த நோயும் வராது.