காதலிக்க
கண்களுக்கு
கற்றுகொடுப்பாள்…
நான்
பாடுகின்ற கானங்களை
முந்தானை முடிப்பாள்….
வாய்மூடி
இமைகளாலே
பேசி சிரிப்பாள்..
வானத்து
நிலவெடுத்து
கூந்தல் சூடுவாள்….
வாசமுள்ள
பூவாக
வாசம் பண்ணுவாள்…
என்னை
தாண்டி போகும்போது
அவளை இழப்பாள்…
நாணமெல்லம்
எனை அழைத்து
சொல்லி முடிப்பாள்…
அவள்
அனுதினமும்
அவஸ்தைகளை
அள்ளி தெளிப்பாள்……