கொண்டவளே..
காதலை பொன்பூசி
வளர்பவளே…
நதியோடும் வேகத்தை
தடுப்பவளே…
நாத்திகனில் நாணத்தை
தொடுத்தவளே….
வண்ணத்து பூச்சியோ
உந்தன் இமைகள்.!
வா வாவென்று
அழைக்கின்றதே….
வணப்பின் விதைகளா
உந்தன் விரல்கள்.!
வளைத்து வளைத்தென்னை
அணைக்கின்றதே….
சிவப்பின் தங்கையா
உந்தன் இதழ்கள்.!
சீண்டாமல் யென்னிதழ்கள்
சிவக்கின்றதே…..
மேகத்தின் கருமையா
உந்தன் கூந்தல்.!
மீளாமல் யென்மனது
மரைகின்றதே….
கதிரவன் கதகதப்பா
உந்தன் மேனி.!
கதிர்கள் யெனைவந்து
கதைக்கின்றதே…
நிலவின் கருணையா
உந்தன் உள்ளம்.!
நித்தம் உன்னன்பு
நனைக்கின்றதே….